Sunday, September 23, 2007

ஹைதராபாத் புத்தர் சிலைக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறி

புத்தர் சிலைக்கு பயங்கரவாதிகள் குறி

ஐதராபாத்: ஆந்திராவில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள், தற்போது, ஐதராபாத் உசேன் சாகர் ஏரியில் உள்ள புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்த குறிவைத்துள்ளதை உளவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹர்கத்-உல்- ஜிகாதி இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பு தான் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தான் தற்போது 50 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட புத்தர் சிலையை தகர்க்க சதி திட்டம் தீட்டியுள்ளது. இந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இச்சிலை பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் திரட்டிச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

நன்றி தினமலர்

No comments: