Sunday, September 23, 2007

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. ஆளும் கட்சியே கலவரத்தில் இறங்குகிறது.

மாநில பா.ஜ., துணை தலைவர் வீட்டை தாக்கிய தி.மு.க.,வினர்


காரைக்குடி : காரைக்குடியில் மாநில பா.ஜ., துணைத் தலைவர் எச்.ராஜா வீட்டில் நேற்றிரவு தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டில் கற்களை எறிந்தனர். இதில், கதவு கண்ணாடிகள் நொறுங்கியது. வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த டூ வீலர், கார் ஆகியன அடித்து நொறுக்கப்பட்டன. அதே நேரத்தில், வள்ளுவர் நகரில் உள்ள இவரது மாமியார் உமா வீட்டையும் தி.மு.க.,வினர் தாக்கினர். இதே கும்பல் சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் இருந்த பா.ஜ., கொடிக்கம்பங்களை அடித்து நொறுக்கினர். டி.எஸ்.பி., ஜீவா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் சபேசன், பொதுச்செயலர் குரு நாகராஜன், இளைஞரணி சபரிநாதன் உட்பட மாவட்ட அளவிலான கட்சியினர் அவரது வீட்டிற்கு முன்பாக கூடினர்.

நன்றி தினமலர்

No comments: