Tuesday, November 28, 2006

வாஃபா சல்தான் - அல் ஜஜீரா டிவியில்

வாஃபா சல்தான்

அரபு மனவியல் மருத்துவர் வாஃபா சல்தான் அவர்கள் அல் ஜஜீரா டிவியில் ஒரு இஸ்லாமிய சகோதரருடன் வாதிடுகிறார்

பார்க்க வேண்டிய குறும்படம்

ஹரி ஓம் என்பதன் பொருள்

ஸ்வாமி சின்மயானந்தா பேசுகிறார்

Monday, November 27, 2006

வெற்றி கொள்ளும் இந்தியா

தமஸோமா ஜோதிர்கமய..

பாரத் பாலாவின் அற்புதமான குறும்படம்

நண்பன் ஷாஜஹானின் சிறப்பான பதிவு

http://nanbanshaji.blogspot.com/2006/11/blog-post.html

//
மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.

நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.

//

வெல்டன் ஷாஜஹான்
இதனைத்தான் பல பதிவுகளில் நான் சொல்ல முயன்றேன்

நான் இஸ்லாமுக்கு வெளியிலிருந்து சொல்ல முனையும்போது அது சரியான அணுகுமுறையில் எடுத்துக்கொள்ளப்படாது.

அதனை நீங்களே கூறும்போது அதற்கு ஒரு அழுத்தமும் சிறப்பும் வருகிறது.

வாழ்த்துக்கள்

Friday, November 24, 2006

வரைந்த படம் வண்ணத்து பூச்சியாய்

வரைந்த படத்தை வண்ணத்து பூச்சியாய் மாற்றும் அற்புதம்

அற்புதத்தை செய்வது கிரிஸ் ஏஞ்சல்!

இன்னொரு லெவிட்டேஷன் மேஜிக்

இன்னொரு லெவிட்டேஷன் மேஜிக்


Wednesday, November 22, 2006

வாழ்க டோனி பிளேர்

கஜகஸ்தானில் வாழும் இந்துக்களுக்காக டோனி பிளேர் குரல் கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்

UK protests against Kazakh Hindus harassment

LONDON: British Prime Minister Tony Blair has raised the issue of alleged harassment of Kazakh Hindus with the Kazakhstan President Nursultan Nazarbayev at a meeting in London.

The Hindu Forum of Britain alleged on Wednesday that 60 riot police and bulldozers assembled inside a Hindu temple in Kazakhstan and demolished five Hindu houses. According to the forum, the Kazakh government is allegedly planning to bulldoze a Hindu temple in the Karasai District in Kazakhstan.

In an effort to highlight the plight of Hindus in Kazakhstan, Ashok Kumar, Member of Parliament, has tabled an Early Day Motion in the House of Commons.

The motion said: "This House, prior to the visit of the President of Kazakhstan, condemns the harassment of and discrimination against Hindu minorities in Kazakhstan; notes that Hindus in the Karasai district have had land, barns and cows confiscated, have been threatened with demolition of their houses, and denied the right to own land.

It further notes that Kazakh Hindus who applied for ownership of their houses were asked to declare that they were not Hindus, while non-Hindus who made similar applications were immediately granted ownership rights. The motion also acknowledges that the Supreme Court reviewed two cases regarding Hindu cottages and ruled against Hindus, without inviting the plaintiffs to the hearings.

Forum 18, a human rights website has linked the Kazakh President's brother to the demolition and land-grab attempt suggesting that the value of the land could be the reason why Hindus are being harassed and subjected to human rights violations.

"The human rights violation against Kazakh Hindus has caused worldwide condemnation," Sudarshan Bhatia, President of the National Council of Hindu Temples, UK, who is leading the Defend Kazakh Hindus Campaign, said.

"We ask for a complete review of decisions made against Hindus in the court, call upon the President to order the Karasai District Hakimat to have all cases against the Kazakh Hindus withdrawn and basic human rights values restored," Ishwer Tailor, President of the Hindu Forum of Britain, said.

*
நன்றி
டைம்ஸ் ஆப் இந்தியா
http://timesofindia.indiatimes.com/UK_slams_Kazakh_Hindus_harassment/articleshow/520439.cms
*
மன்மோகன் சிங்கும் சோனியாவும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. நம்முடைய நாடு செக்குலர் நாடு.

Sunday, November 19, 2006

பறக்கும் பெண்

இந்த மேஜிக்கை எப்படி செய்தார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Hosted on Flurl Video Search - Watch More Videos

Friday, November 17, 2006

மிலே சுர் மேரா துமாரா

நான் விரும்பிப் பார்த்த தமஸ் சீரியலில் நடித்தவர்களும் இதில் ஒரு காட்சியில் வருவார்கள்

யோகா கட்டாயப்பாடம் - அமைச்சர் அன்புமணி

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு அன்புமணி அவர்கள் யோகாவை எல்லா இந்தியப் பள்ளிக்கூடங்களிலும் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு நன்றி

Yoga must be mandatory for schools: Anbumani Ramadoss

New Delhi, Oct 14: Strongly advocating making yoga compulsory at the school level, Union Health Minister Anbumani Ramadoss on Saturday said he would write to Human Resource Minister Arjun Singh in this regard.

Ramadoss was speaking after inaugurating the sixth Arogya, a comprehensive health fair organised by the ministry's Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy (Ayush) Department here today.

He said the success of Ayush in creating an innovative original database known as traditional knowledge digital library is laudable.

"Documentation of the existing knowledge available in the public domain on various traditional systems of medicine have become imperative to safeguard the sovereignty of our traditional knowledge and to protect them from misappropriation," the minister said.

He said a medicinal plan processing zone across the country would go a long way towards exporting processed goods rather than raw material for making medicines, as is being done now.

Ramadoss said under the National Rural Health Mission, the government had decided to provide an Ayush facility in public health centres and community health centres throughout the country.

"This will be done with the aim to strengthen the outreach of primary health care," he said.

Bureau Report


http://www.zeenews.com/znnew/articles.asp?aid=329272&sid=NAT

Monday, November 13, 2006

மதம் மாறினால் மரணதண்டனை!

ஜாகிர் நாயக்கின் இன்னொரு வீடியோவை பெத்த ராயுடு அவர்கள் கால்கரி சிவா பதிவில் பதிந்திருந்தார்கள்.

அதனை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

இதோ அந்த பதிவு.



என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

முஸ்லீம் சகோதரர்கள் இவரை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி
எழில்

Sunday, November 12, 2006

இயற்கை - unicellular

முதலில் இயற்கையின் வினோதங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

நாம் வினோதம் என்று நினைப்பது வினோதமில்லை என்பதாகவும், எது வினோதமில்லை என்று நினைக்கிறோமோ அது வினோதம் என்றும் பார்க்கலாம் என்பதையும் வைத்துக்கொள்வோம்.

முதலாவது பரிணாமத்தில் பாலுறவு மூலம் சந்ததி உருவாக்கம் என்பது மிகவும் காலம் தாமதமாக உருவான ஒரு விஷயம்.

ஆரம்பகால உயிரினங்களில் பாலுறவு இல்லை.

ஏனெனில் அவை எல்லாமே ஒற்றை செல் உயிரினங்கள்.

இந்த பூமியில் உயிரினங்கள் சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றின. முதலில் தோன்றிய உயிரினங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, ஒற்றை செல் உயிரினங்கள்தாம். அடுத்த 3 பில்லியன் வருடங்கள் இந்த பூமியில் ஒற்றை செல் உயிரினங்கள்தாம் இருந்தன. பலசெல் உயிரினங்கள் (multicellular ) கடந்த 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒற்றை செல் உயிரினங்களில் நடந்த மரபணு மாற்றங்களால் (mutations) தோன்றின.

ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.

இன்னமும் ஒற்றை செல் உயிரினங்கள் பல்கி பெருவது இந்த முறையிலேயே நடக்கிறது.

பாக்டீரியா, ஆர்க்கியா, யூகாரியோட்ஸ் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக ஒற்றை செல் உயிரினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் ஒற்றை செல் உயிரினங்கள் தாம். அவற்றின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பல செல் உயிரினங்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவானவை. இந்த ஒற்றை செல் உயிரினங்கள் இல்லாத இடங்களே பூமியில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்க்டிக் பிரதேசங்களிலிருந்து, வெப்ப நீரூற்றுகளிலிருந்து, பாலைவனங்களிலிருந்து, ஆழ்கடலிலிருந்து, மலையுச்சிகளிலிருந்து, இவை இல்லாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.

பல செல் உயிரினங்களின் உடல்களிலும் இந்த ஒற்றை செல் உயிரினங்கள் வாழ்கின்றன. பல சமயங்களில் இந்த பல செல் உயிரினங்களுக்கு நல்லது செய்து அதிலிருந்து சற்று உணவை எடுத்துகொள்ளும் சிம்பயாட்டிக் உறவை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து அதனை அழித்து அதன் மீது தன்னை பெருகிக்கொள்ளும் உறவையும் கொண்டிருக்கின்றன. இப்படி பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒற்றை செல் உயிரினங்களை பாதோஜன் (pathogens) என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு வரும் சளி, எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவை இப்படிப்பட்ட ஒற்றை செல் உயிரினங்களால் வருகின்றன. ஒற்றை செல் உயிரினங்கள் ஒரு பல செல் உயிரினத்திலிருந்து இன்னொரு பல செல் உயிரினத்துக்கு பல்வேறு முறைகளில் செல்லலாம். தொடுவதாலோ, தும்முவதாலோ, வெறும் காற்றின் மூலமோ பரவலாம்.

பல ஒற்றை செல் உயிரினங்களை மனிதர்கள் பல காலமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார்கள்.

பாலிலிருந்து தயிரை உருவாக்குவது ஒற்றை செல் பாக்டீரியா லாக்டோபாஸில்லஸ் என்னும் ஒரு பாக்டீரியா.

யீஸ்ட் என்னும் ஒரு பாக்டீரியா நாம் ரொட்டி தயாரிக்க மாவை புளிக்க வைக்க உபயோகப்படுத்துகிறோம்.

மனிதர்களின் வயிற்றிலும் குடலிலும் உணவை உடைத்து நாம் ஜீரணிக்க பல வகை ஒற்றை செல் உயிரினங்களை கொண்டிருக்கிறோம். நம் கண் இமைகளில் மட்டுமே வாழும் ஒரு வகை ஒற்றை செல் உயிரினம் இருக்கிறது. (இது எல்லோர் கண்களிலும் இருக்கிறது!)

http://en.wikipedia.org/wiki/Unicellular

இந்த பாக்டீரியாக்கள் ஏதேனும் புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளை காட்டுகின்றனவா?

ஆமாம். அவைகள் புத்திசாலித்தனம் என்று கூறக்கூடிய சில செயல்பாடுகளை காட்டுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Microbial_intelligence

இவற்றை மற்றொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

Friday, November 10, 2006

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம்

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம்
முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்



ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்


காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி.


வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி பார்த்துகொண்டிருந்த எனக்கு இந்த வீடியோ தட்டுப்பட்டது. இவர் ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் போலிருக்கிறது. ஜாகிர் நாயக் என்ற பெயர். இந்தியாவில்தான் இருக்கிறார் போலிருக்கிறது.


http://www.youtube.com/watch?v=BwCn-IT_zZA


இந்த வீடியோவில் ஒருவர் இவரிடம் கேள்வி கேட்கிறார்.


"இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியரல்லாதவர்கள் தங்கள் மதத்தை பரப்பவும், தங்கள் மதத்தை தொடர்ந்து பின்பற்ற கோவில்களும் கட்ட அனுமதிக்கப் படுவார்களா? அப்படியென்றால், ஏன் சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை? ஆனால் முஸ்லீம்கள் லண்டன் பாரீஸில் மசூதிகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?"


இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்


"ஒரு முஸ்லீமல்லாதவர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபாலாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கணித வாத்தியாரை நியமிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவர் 2+2=3 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா, அல்லது 2+2 = 6 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அலல்து 2+2 = 4 என்று சொல்லும் நபரை வேலைக்கு எடுப்பாரா? அவர் 2+2 = 4 என்று சொல்லும் நபரைத்தான் வேலைக்கு எடுக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு சரியான கணித அறிவு இல்லை. அதே போல மற்ற மதங்கள் எல்லாம் தவறானவை. ஒரு முஸ்லீமுக்கு மட்டுமே மதத்தை பற்றிய சரியான அறிவு இருக்கிறது. மற்றவர்களின் மதமும் , மதத்தை பற்றிய அறிவும் தவறாக இருக்கும்போது, அவர்களது தவறான கருத்தை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் தங்கள் தவறான கோவிலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? "


கேள்வி கேட்டவர் தொடர்ந்து இதனை கேட்டார்.


"முஸ்லீமல்லாதவர்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தங்கள் மதமே சரியானது என்று நினைக்கிறார்கள். இல்லையா?"


இதற்கு ஜாகிர் நாயக் பதில் கூறியது


"முஸ்லீம் அல்லாதவர்கள் தங்களுடைய குழந்தைகள் 2+2 = 3 என்று சொல்லித்தர எப்படி அனுமதிப்பார்கள்? ஏனெனில் அது தவறு என்று தெரியுமே? அதே போல எங்களுக்கும் இஸ்லாமே உண்மையான மதம் என்று தெரியும். ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவர்களது மதம் உண்மையான மதம் என்று உறுதி இல்லை. அதனால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்கள்"


இதனை கேட்டு ஆடிப்போய் விட்டேன்.


--

இப்படி உளறும் ஜாகிர் நாயக் உண்மையிலேயே படித்த டாக்டர்தானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.


அவரது முதல் பதிலை எடுத்துக்கொள்வோம்.


2+2 = 4 என்பது கணித அறிவுதான். ஆனால் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதமே 2+2 = 4 போன்ற உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், இந்து மதம் அப்படி அல்ல. இந்து மதத்தில் 1+1 = 2 என்றும் இருக்கும். 1+1 = 10 என்றும் இருக்கும். ஏனெனில், இந்துமதம் ஒரு குருவுக்கோ ஒரு கொள்கைக்கோ இறுக்கமாக கட்டிக்கொண்டு, அதனையே பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில்லை. திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஒரு மனிதன் அறியக்கூடிய விஷயமும் இருக்கும். பிரபந்தத்திலிருந்து நெகிழக்கூடிய விஷயமும் இருக்கும். தேவாரத்திலிருந்து பெறக்கூடிய ஆன்மீக உணர்வும் இருக்கும். இந்து மதத்தை பல்வேறு ரிஷிகள் வளப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ரிஷியும், குருவும் எனக்கு பின்னால் ஒரு குரு வரமாட்டார் என்றோ, எனக்கு பின்னால் வருபவன் எவனையும் நம்பாதே என்றோ சொல்வதில்லை. அப்படி யாரேனும் சொன்னால், இந்துக்களும் அதனை மதிக்கப்போவதில்லை.


1 + 1 = 2 எப்போதுமே உண்மை அல்ல. ஒரு மேகமும் இன்னொரு மேகமும் இணைந்தால் அது 2 மேகங்கள் அல்ல. ஒரு மேகம் தான். நாம் எந்த கணிதம் போடுகிறோம் என்பதை பொறுத்து விடையும் மாறும். Fuzzy logic என்ற கணிதத்தில் இன்னும் வினோதங்கள் எல்லாம் இருக்கின்றன.


1+1 = 2 என்பது தசம (எண் 10 ஐ அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் ஒரு விடை. 1+ 1 = 10 என்பது இரும (பைனரி என்னும் 2 எண்ணை அடிப்படையாகக் கொண்ட) கணிதத்தில் விடை. இரண்டுமே சரியான விடைகள்தான். 1+1 = 2 என்று தான் கூற வேண்டும். 1+1 = 10 என்று சொன்னால் தலையை சீவிவிடுவேன். அப்படிப்பட்ட கணிதத்தை கண்டுபிடிக்கவோ, சொல்லிக்கொடுக்கவோ கூடாது என்று சொல்ல முடியுமா?


1+1 = 10 என்று சொல்லும் பைனரி கணிதத்தை நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் இப்படி கம்ப்யூட்டரிலேயே எழுதிக்கொண்டிருக்க முடியாது. நாம் நிதர்சனமாக இப்படி கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருப்பதற்கு பைனரி கணித வளர்ச்சி தானே அடிப்படை?


இவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடவுளை பற்றி நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். அதில் உள்ளதுதான் சரியான கடவுளைப் பற்றிய விளக்கம். கடவுளை சுருக்கி அந்த புத்தகத்துக்குள் வைத்து கட்டிவிட்டேன். கடவுளைப் பற்றி வேறொருவர் இனி சிந்திக்கவோ, அல்லது கடவுளின் மற்றைய பரிமாணங்களை பற்றி பேசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது போல இருக்கிறது.


சாதாரண கணிதத்துக்கே இத்தனை பரிமாணங்கள் இருக்குமென்றால், வரையறைக்குள் சிக்காத இறைக்கு எத்தனை பரிணாமங்கள் இருக்கும்?


கரையருகே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு டம்ளரிலே கடல் தண்ணீரை அள்ளிவிட்டு, அம்மா கடலை மொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இல்லை? சிறுமியாக இருந்தால், சிரிக்கலாம். தலையில் தட்டிவிட்டு போடி கண்ணு என்று சொல்லலாம். அதுவே பெரிய டாக்டராக இருந்தால் என்ன செய்வது?


--


இரண்டாவது பதிலை எடுத்துக்கொள்வோம்


மற்றவர்கள் இஸ்லாமை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதன் காரணம் தங்கள் மதங்கள் உண்மையானவை என்ற உறுதி இல்லாததால் தான் என்று சொல்கிறார்.


இதனை விட இஸ்லாமியர்களுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் வேறு இருக்க முடியாது.


இந்துக்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதம் உண்மையானது என்று கருதினால், முஸ்லீம்கள் இஸ்லாத்தை பரப்புவதை, இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை தடை செய்யவேண்டும், மசூதிகளை கட்ட அனுமதித்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் உங்கள் மதம் உண்மையானது என்று நினைக்காததினால்தான் எங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.


எனக்கு கிரிஸ்துவ மதத்தை பற்றி தெரியவில்லை என்றாலும், ஓரளவுக்கு இந்து மதம் பற்றி தெரியும் என்பதால் அதனது உலகப்பார்வையை பற்றி கூற முயல்கிறேன்.


இவர் இவ்வளவு காலம் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி புரிந்துகொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.


இந்து மதம், தான் சரியானது அல்ல என்ற காரணத்தால் மற்ற மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது என்று ஜாகிர் நாயக் கருதினால் அவருக்காக நான் பரிதாபப்படத்தான் முடியும்.


மேலே குறிப்பிட்ட எண் கணிதத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு 1+1 = 2 என்று நாம் புரிந்து வைத்திருந்தாலும், ஒரு ஆன்மீக குரு வந்து ஆன்மீகத்தில் 1+ 1 = 10 என்ற கணிதத்தையும் உருவாக்க முடியும் என்பதை இந்துமதம் அங்கீகரிக்கிறது.


அதனால்தான், குருக்களை பார்த்து இந்துமதம் அஞ்சுவதில்லை. இதனால்தான் பல மதங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறது. புதிய ரிஷிகளையும், குருக்களையும் வரவேற்கிறது. ஒரு சில குருக்கள் தவறாக போதிக்கலாம். அவர்கள் மக்களால் உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஒரு சில குருக்கள் ஆன்மீகத்தை மேலே கொண்டு செல்கிறார்கள். அவர்களை மக்கள் வரவேற்கிறார்கள். பிரேமானந்தாவும் இங்கு தோன்றலாம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் இங்கு தோன்றலாம். பிரேமானந்தாக்கள் இங்கே உதாசீனம் செய்யப்பட்டுவிடுவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்திகளும், மாதா அமிர்தானந்தமயிகளும் உலகத்துக்கே ஆன்மீக குருக்களாக உயருவார்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியோ மாதா அமிர்தானந்தமயியோ மனிதனின் ஆன்மீகப்பயணத்தின் முடிவல்ல. மனிதனின் ஆன்மீகப்பயணம் முடிவற்றது. மனிதனை தொடர்ந்து பரிணமிக்க வைக்கக்கூடியது.


--


பிரச்னை ஜாகிர் நாயக்கிடம் இருக்கிறது. ஏதோ இஸ்லாமை பரப்புவதாக நினைத்துக்கொண்டு இஸ்லாமியருக்கே உலை வைக்கிறார். இஸ்லாமியர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்றாக ஒரு சமூகத்தில் வாழ்வதையே கெடுக்கிறார்.


சாதாரண இந்துக்களை அவர் தூண்டி விடுகிறார். இந்துமதத்தினை பற்றி முழுமையான அறிவற்ற பலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். பல இந்துக்கள் சாதாரணமாக கோவிலுக்கு போவது, தங்கள் சமூகத்து பழக்க வழக்கங்களில் திருவிழாக்களில் கலந்து கொள்வது தவிற வேறு அறியாதவர்கள். இவர்கள் இந்துத் தத்துவங்களை கரைத்துக்குடித்த போதகர்கள் அல்ல. அவர்களை ஜாகிர் நாயக் வெறியேற்றுகிறார். "நீ இந்துமதம்தான் உண்மை என்று நினைத்தால் இஸ்லாமை பரப்ப அனுமதிக்காதே" என்று உசுப்பேற்றுகிறார். "நீ என்னை அனுமதிப்பதற்கு காரணம், உன் மதம் சரி என்று நீ நினைக்காததால்தான்" என்று இந்துவை அசிங்கப்படுத்துகிறார்.


இவ்வாறு இவர் இப்படி பேசுவதைக் கேட்டால், "இந்துக்கள் தங்கள் மதம் உண்மை என்று நினைத்தால், முஸ்லீம்களை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். ஆமாம் அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம். இனி முஸ்லீம்கள் இந்தியாவில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்" என்று சாதாரண இந்துக்கள் கூறமாட்டார்களா?


என்னுடைய மதம் நல்ல போதனைகளை வழங்குகிறது என்று சொல்வது எல்லோரும் செய்யக்கூடியது. என்னுடைய மதம்தான் உண்மையானது மற்றவர்களது மதம் எல்லாம் பொய்யானது என்று இந்த நவீன காலத்தில் ஒருவர் பேசுவது ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், வருந்தத்தக்கது.


இப்படி ஒருவர் பேசினால், நிச்சயம் உங்களது மதம் பொய் என் மதம்தான் உண்மை என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதனைத்தான் இவர் தூண்டுகிறார்.


நான் என்னவேண்டுமானாலும் இந்துமதத்தை திட்டுவேன், அது பொய்யான மதம் என்று சொல்லுவேன், ஆனால் யாரும் இஸ்லாமை ஒன்றும் சொல்லக்கூடாது என்று அவர் நினைப்பாரேயானால், அவருக்காக பரிதாபப்படத்தான் முடியும். இவர் இந்துமதத்தை பொய்யானது, இஸ்லாம் மட்டுமே உண்மையானது என்று கூறினால், நிச்சயம் இந்துக்களில் சிலர் எழுந்து, இஸ்லாம்தான் பொய்யான மதம், இந்துமதம்தான் உண்மையானது என்று சொல்லத்தான் செய்வார்கள். அப்படி சில இந்துக்கள் சொல்லும்போது, இந்து மத தத்துவங்களை அறிந்த பல இந்துக்கள் அவ்வாறு சில இந்துக்கள் சொல்வதை தவறானது என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது எந்த காலத்திலும் ஜாகிர் நாயக் கூறியதை சரியாக்கி விடாது.


அப்படிப்பட்ட இந்துக்களை திட்டுவதை விட்டுவிட்டு, ஜாகிர் நாயக் போன்று தூண்டிவிடும் பேச்சு பேசும் நபர்களை கண்டிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக்கியமாக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்க வேண்டும்.


இஸ்லாமியர்களுக்கு இப்படிப்பட்ட உளறுவாயர்கள் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்ட கிறுக்கர்களை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்.


--

திண்ணைக்கு நன்றி

Wednesday, November 08, 2006

மனிதன் சென்ற ஆழம்

மரியானா ட்ரெஞ்ச் என்ற இடம் இந்தோனேஷியாவுற்கு வடக்கே சீனாவுக்கு கிழக்கே இருக்கிறது.

இந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் ஆழமான இடம்.

இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள்.

இந்த குழி 1951இல் பிரிட்டிஷ் கப்பலான சாலஞ்சரால் சர்வே செய்யப்பட்டது. அதனால் இந்த ஆழத்துக்கு சாலஞ்சர் டீப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.

1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.

இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்.


http://en.wikipedia.org/wiki/Mariana_Trench

Tuesday, November 07, 2006

இயற்கை - ஒற்றை செல் உயிரினங்கள்

முதலில் இயற்கையின் வினோதங்கள் என்று ஒன்றும் இல்லை என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.

நாம் வினோதம் என்று நினைப்பது வினோதமில்லை என்பதாகவும், எது வினோதமில்லை என்று நினைக்கிறோமோ அது வினோதம் என்றும் பார்க்கலாம் என்பதையும் வைத்துக்கொள்வோம்.

முதலாவது பரிணாமத்தில் பாலுறவு மூலம் சந்ததி உருவாக்கம் என்பது மிகவும் காலம் தாமதமாக உருவான ஒரு விஷயம்.

ஆரம்பகால உயிரினங்களில் பாலுறவு இல்லை.

ஏனெனில் அவை எல்லாமே ஒற்றை செல் உயிரினங்கள்.

இந்த பூமியில் உயிரினங்கள் சுமார் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றின. முதலில் தோன்றிய உயிரினங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, ஒற்றை செல் உயிரினங்கள்தாம். அடுத்த 3 பில்லியன் வருடங்கள் இந்த பூமியில் ஒற்றை செல் உயிரினங்கள்தாம் இருந்தன. பலசெல் உயிரினங்கள் (multicellular ) கடந்த 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒற்றை செல் உயிரினங்களில் நடந்த மரபணு மாற்றங்களால் (mutations) தோன்றின.

ஒற்றைசெல் உயிரினங்கள் சற்று பெரிதானதும் பிரிந்து இரண்டு உயிரினங்களாக ஆகின்றன. ஆகவே, ஆண் பாக்டீரியா பெண் பாக்டீரியா என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் பாக்டீரியாதான்.

இன்னமும் ஒற்றை செல் உயிரினங்கள் பல்கி பெருவது இந்த முறையிலேயே நடக்கிறது.

பாக்டீரியா, ஆர்க்கியா, யூகாரியோட்ஸ் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளாக ஒற்றை செல் உயிரினங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

உலகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள உயிரினங்கள் ஒற்றை செல் உயிரினங்கள் தாம். அவற்றின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பல செல் உயிரினங்கள் மிகவும் எண்ணிக்கையில் குறைவானவை. இந்த ஒற்றை செல் உயிரினங்கள் இல்லாத இடங்களே பூமியில் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆர்க்டிக் பிரதேசங்களிலிருந்து, வெப்ப நீரூற்றுகளிலிருந்து, பாலைவனங்களிலிருந்து, ஆழ்கடலிலிருந்து, மலையுச்சிகளிலிருந்து, இவை இல்லாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம்.

பல செல் உயிரினங்களின் உடல்களிலும் இந்த ஒற்றை செல் உயிரினங்கள் வாழ்கின்றன. பல சமயங்களில் இந்த பல செல் உயிரினங்களுக்கு நல்லது செய்து அதிலிருந்து சற்று உணவை எடுத்துகொள்ளும் சிம்பயாட்டிக் உறவை கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து அதனை அழித்து அதன் மீது தன்னை பெருகிக்கொள்ளும் உறவையும் கொண்டிருக்கின்றன. இப்படி பல செல் உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஒற்றை செல் உயிரினங்களை பாதோஜன் (pathogens) என்று அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு வரும் சளி, எய்ட்ஸ், தொழுநோய் ஆகியவை இப்படிப்பட்ட ஒற்றை செல் உயிரினங்களால் வருகின்றன. ஒற்றை செல் உயிரினங்கள் ஒரு பல செல் உயிரினத்திலிருந்து இன்னொரு பல செல் உயிரினத்துக்கு பல்வேறு முறைகளில் செல்லலாம். தொடுவதாலோ, தும்முவதாலோ, வெறும் காற்றின் மூலமோ பரவலாம்.

பல ஒற்றை செல் உயிரினங்களை மனிதர்கள் பல காலமாக உபயோகப்படுத்தி வந்துள்ளார்கள்.

பாலிலிருந்து தயிரை உருவாக்குவது ஒற்றை செல் பாக்டீரியா லாக்டோபாஸில்லஸ் என்னும் ஒரு பாக்டீரியா.

யீஸ்ட் என்னும் ஒரு பாக்டீரியா நாம் ரொட்டி தயாரிக்க மாவை புளிக்க வைக்க உபயோகப்படுத்துகிறோம்.

மனிதர்களின் வயிற்றிலும் குடலிலும் உணவை உடைத்து நாம் ஜீரணிக்க பல வகை ஒற்றை செல் உயிரினங்களை கொண்டிருக்கிறோம். நம் கண் இமைகளில் மட்டுமே வாழும் ஒரு வகை ஒற்றை செல் உயிரினம் இருக்கிறது. (இது எல்லோர் கண்களிலும் இருக்கிறது!)

http://en.wikipedia.org/wiki/Unicellular

இந்த பாக்டீரியாக்கள் ஏதேனும் புத்திசாலித்தனம் என்று சொல்லக்கூடிய செயல்பாடுகளை காட்டுகின்றனவா?

ஆமாம். அவைகள் புத்திசாலித்தனம் என்று கூறக்கூடிய சில செயல்பாடுகளை காட்டுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Microbial_intelligence

இவற்றை மற்றொரு பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!

திருவிளையாடல் படத்தில் இருக்கும் புகழ்பெற்ற பகுதி
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று மகாலிங்கம் பாடும் பாடல்.

"பழி"யை, பஷி வருமே பாண்டி நாட்டினிலே என்று பாடுவதையும் சேர்த்து ரசிக்கலாம்.



http://video.google.com/videoplay?docid=-7008118777326639758

Sunday, November 05, 2006

தோசை திருடிய தமிழ் நடிகர்கள்

மம்முட்டி, ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகுமார்
கலக்கல்

Saturday, November 04, 2006

ஃபைனல் ஃபேண்டஸி லேட்டஸ்ட்

நான் விளையாடிய வீடியோ கேம்களிலேயே சிறந்த வீடியோ கேம் இதுதான்.

உங்களுக்காக சில ஸ்கிரீன் ஷாட்கள்..