Saturday, September 29, 2007

திமுக கொடிகாத்த போலீஸ்காரருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டுவிழா

0-0
தி.மு.க. கொடி காத்த போலீஸ் சுரேஷ் பாபு : பாராட்டி கவுரவித்தார் கமிஷனர்

கோவை: பாரதிய ஜனதா கட்சியினர் எரிக்க முயன்ற தி.மு.க., கொடியை பறித்துக் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு வெகுமதி வழங்கினார் போலீஸ் கமிஷனர். கோவை செஞ்சிலுவை சங்கம் முன், பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜன் தலைமையில் பா.ஜ.,வினர், தி.மு.க., கொடியை எரிக்க முயன்றனர். இதை கவனித்த நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் சுரேஷ் பாபு, கொடியை பறித்துக் கொண்டு ஓடினார். துரத்திச் சென்ற பா.ஜ.,வினர் தாக்க, அவர் பஸ்சில் ஏறி தப்பினார். போலீஸ்காரரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது பற்றி விசாரணை நடத்திய போலீஸ் கமிஷனர் காந்திராஜன், கொடியை காத்த போலீஸ்காரர் சுரேஷ்பாபுக்கு வெகுமதி வழங்கி கவுரவித்தார்.

No comments: