Wednesday, September 19, 2007

நெல்லையில் கோவில் சிலை உடைப்பு - பதட்டம்

நெல்லையில் கோவில் சிலை உடைப்பு - பதட்டம்
புதன்கிழமை, செப்டம்பர் 19, 2007


திருநெல்வேலி:

நெல்லை, பாளையங்கோட்டை அருகே சுடலை கோவிலில் புகுந்த சில விஷமிகள் சிலையை உடைத்து சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமர் சர்ச்சை பெரும் சூடு பிடித்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது.

அதேபோல தமிழக அரசுப் பேருந்தையும் நிறுத்தி விஷமிகள் தீவைத்து எரித்ததில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள சுடலை கோவிலில் புகுந்த சிலர் அங்கிருந்த சாமி சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடந்துள்ளதாம். இதுகுறித்து இந்து முன்னணியைச் சேர்ந்த குமரேசன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

சாமி சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி தட்ஸ்டமில்

No comments: