Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Tuesday, August 26, 2008

ஏமாற்று திராவிட அரசுகளே! மனித மலத்தை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதை நிறுத்து!!!

போலி திராவிட ஆட்சியில் இன்னும் மனித மலத்தை மனிதன் அள்ளுவதை தடை செய்யவில்லை. அந்த வேலையை மனிதர்கள் செய்யாமல் தேவையான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை.

ஏன் அந்த தொழிலாளர்கள் நல மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 54 கோடி ரூபாயைக் கூட அந்த தொழிலாளர்களுக்காக செலவு செய்யவில்லை.

தூ..

திராவிட வேடம் கட்டி பார்ப்பனர்களை இழிவு செய்வதன் மூலம் தலித்துகளை திசை திருப்பிவிட்டு தலித்துகளை இழிவு செய்துகொண்டே இருக்கலாம், தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் பார்ப்பனர் மீது வெறுப்பை கக்கி பேசுவதன் மூலம் ஓட்டு வாங்கிவிடலாம் என்று கருதும் போலி திராவிட கும்பல் வெட்கி தலை குனிய வேண்டும்.

எல்லா இந்துக்களும் இந்து உணர்வோடு ஒரு அணியில் திரளுவதே இன்று எதிர்கொள்ளும் எல்லா சவால்களுக்கும் அருமருந்து.


--
கீழே உள்ள செய்தி இரா முருகப்பன் அவர்களது பதிவிலிருந்து பெறப்பட்டது. நன்றிகள் பல


மனித மலத்தை அள்ளும் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் ரூ. 54.28 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடவில்லை என்று தேசிய துப்பரவு பணியாளர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.



ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்திரி, செயலாளர் கல்பனா அமர் உள்ளிட்ட ஆணைய குழுவினர், தமிழகத்தில் துப்பரவு தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனையட்டி வெள்ளி 22&08&08 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.



துப்பரவுப்பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்டப்பூர்வமான ஊதியம் மறுக்கப்படுகிறது என்றும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கபடும் துப்பரவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் கூறினர்.



தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வு செய்தபோது, கூலி, பணி முறைகள் ஆகியவற்றில் பாகுபாடு நிலவியதும், மலம் அள்ளும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது தடையின்றி தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.



துப்பரவு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவதற்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. ஆனால், இன்னும் தமிழகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் துப்பரவு தொழிலாளர்கள் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வருத்ததிற்குரியது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.



தமிழகத்தில் 83 நகரங்களில் மட்டுமே மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. மலம் அள்ளுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறையை படிபடியாக ஒழிக்க மத்திய அரசு ரூ 57.80 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் ரூ 24.52 கோடி மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. 33.28 கோடி ரூபாய செலவிடப்படாமல் உள்ளது.



கையால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் தமிழகத்தில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 54.28 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.



துப்பரவு தொழிலாளர்களுக்கான கடன்களை மத்திய - மாநில அரசுகளும், வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்

நன்றி இரா முருகப்பன்

40 ஆண்டு ஏமாற்று திராவிட ஆட்சியின் லட்சணம் பாரீர்.

போலி திராவிட ஆட்சியில் இன்னும் மனித மலத்தை மனிதன் அள்ளுவதை தடை செய்யவில்லை. அந்த வேலையை மனிதர்கள் செய்யாமல் தேவையான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை.

ஏன் அந்த தொழிலாளர்கள் நல மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கிய 54 கோடி ரூபாயைக் கூட அந்த தொழிலாளர்களுக்காக செலவு செய்யவில்லை.

தூ..

திராவிட வேடம் கட்டி பார்ப்பனர்களை இழிவு செய்வதன் மூலம் தலித்துகளை திசை திருப்பிவிட்டு தலித்துகளை இழிவு செய்துகொண்டே இருக்கலாம், தலித்துகளுக்கும் மற்றவர்களுக்கும் பார்ப்பனர் மீது வெறுப்பை கக்கி பேசுவதன் மூலம் ஓட்டு வாங்கிவிடலாம் என்று கருதும் போலி திராவிட கும்பல் வெட்கி தலை குனிய வேண்டும்.

எல்லா இந்துக்களும் இந்து உணர்வோடு ஒரு அணியில் திரளுவதே இன்று எதிர்கொள்ளும் எல்லா சவால்களுக்கும் அருமருந்து.


--
கீழே உள்ள செய்தி இரா முருகப்பன் அவர்களது பதிவிலிருந்து பெறப்பட்டது. நன்றிகள் பல


மனித மலத்தை அள்ளும் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் ரூ. 54.28 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடவில்லை என்று தேசிய துப்பரவு பணியாளர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.



ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் சவுத்திரி, செயலாளர் கல்பனா அமர் உள்ளிட்ட ஆணைய குழுவினர், தமிழகத்தில் துப்பரவு தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அதனையட்டி வெள்ளி 22&08&08 அன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.



துப்பரவுப்பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்டப்பூர்வமான ஊதியம் மறுக்கப்படுகிறது என்றும், அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கபடும் துப்பரவு பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சட்டப்பூர்வ பொறுப்பாகும் என்றும் கூறினர்.



தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வு செய்தபோது, கூலி, பணி முறைகள் ஆகியவற்றில் பாகுபாடு நிலவியதும், மலம் அள்ளும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது தடையின்றி தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.



துப்பரவு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவதற்கான ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என ஆணையம் எதிர்பார்க்கிறது. ஆனால், இன்னும் தமிழகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் துப்பரவு தொழிலாளர்கள் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுவது வருத்ததிற்குரியது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.



தமிழகத்தில் 83 நகரங்களில் மட்டுமே மலம் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. மலம் அள்ளுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறையை படிபடியாக ஒழிக்க மத்திய அரசு ரூ 57.80 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் ரூ 24.52 கோடி மட்டுமே மாநில அரசு செலவிட்டுள்ளது. 33.28 கோடி ரூபாய செலவிடப்படாமல் உள்ளது.



கையால் மலம் அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தில் தமிழகத்தில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 54.28 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.



துப்பரவு தொழிலாளர்களுக்கான கடன்களை மத்திய - மாநில அரசுகளும், வங்கிகளும், கூட்டுறவு அமைப்புகளும் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்

நன்றி இரா முருகப்பன்
http://iramurugappan.blogspot.com/2008/08/5428.html

Monday, August 25, 2008

1 லட்சம் தலித் கிறிஸ்துவர்கள் இந்துக்களாக முடிவு

'1 லட்சம் தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதம் திரும்ப முடிவு'
திங்கள்கிழமை, ஆகஸ்ட் 25, 2008




பண்ருட்டி: இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தலித் கிறிஸ்தவர்கள் ஒரு லட்சம் பேர் மீண்டும் இந்து மதத்தில் இணைய தயாராக உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டியில் தாய் சமயம் திரும்பும் விழா நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். திருக்கைலாய பரம்பரை பேரூர் கிரவை செங்கோல் ஆதீனம், தாய் சமயம் திரும்புவர்களுக்கு புனித நீர் ஊற்றி வரவேற்றார்.

பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிறிஸ்துவ மதத்திற்கும், முஸ்லீம் மதத்திற்கு மாற எந்த வித தடையும் இல்லை. ஆனால் அந்த மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும் அனுமதி மறுக்கின்றன.

புதுச்சேரியில் கிறிஸ்துவ மதத்தில் தலித் மக்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும், சலுகைகளும் கிடைக்கவில்லை என்பதால் ஒரு லட்சம் பேர் தாய் மதம் திரும்ப தயாராக உள்ளனர்.

அரசு இவர்களுக்கு உரிய உதவி செய்வதுடன், அவர்கள் தாய் மதம் திரும்ப உதவ வேண்டும் என்றார்.

திருவதிகையில் 10 குடும்பத்தினர் இந்துமதத்தில் இணைந்தனர். (இந்துமக்கள் கட்சி)


பண்ருட்டி: பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம்
திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர். இந்து
மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர்
கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும்
விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
கோவில் அலுவலர்கள் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கடந்த
18ம் தேதி வீரட்டானேஸ்வரர் கோவில் முன் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம்
செய்தனர்.

இந்நிலையில், நேற்று பண்ருட்டி ராமசாமி செட்டியார் திருமண மண்டபத்தில்
தாய் மதம் திரும்பும் விழா துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து மக்கள்
கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். விழாவை
முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெங்கடசர்மா நடத்தினார்.
தாய்மதம் திரும்புவர்களுக்கு சடங்கு செய்வதற்காக கங்கை தீர்த்தம், காவிரி
தீர்த்தம், கெடில நதி தீர்த்தம் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர்
தாய்ச்சமயம் திரும்பியவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு குங்குமம், மாலை
அணிவித்து இணைந்தனர்.


இதில் திருக்கோவிலூர் மணம்பூண்டியைச் சேர்ந்த ஐசக் என்பவருக்கு சுந்தரர்
எனவும், அலெக்ஸ்பாண்டியன் என்பவருக்கு சிவராமபாண்டியன் எனவும்,
வினோத்குமார் என்பவருக்கு வினோத் எனவும், சாந்தி என்பவருக்கு சாந்தி
எனவும், சந்தானம் என்பவருக்கு சந்தானம், மாணிக்கவாசகம் என்பவருக்கு
மணிவாசகர் எனவும் பெயர் சூட்டப்பட்டது. விருத்தாசலம் ஆலடி ரோடு,
எருமானூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணிக்கு திருநாவுக்கரசு எனவும், அந்தோணி
ஜெகன்நாதன் என்பவருக்கு திருஞானசம்பந்தம் எனவும், சந்தோஷ்ஆரோக்கியராஜ்
என்பவருக்கு மாணிக்கவாசகர் எனவும், எழிலரசி என்பவருக்கு திலகவதியார்
எனவும் பெயர் சூட்டினார். தாய்மதம் திரும்பிய அனைவரும் பின்னர் திருவதிகை
வீரட்டானேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

நன்றி தினமலர்

Tuesday, August 19, 2008

வீரமாகாளியம்மன் கோவிலுக்கு பெண்கள் நடத்தியகும்பாபிசேகத்துக்கு பின்னர் தகறாரு

பெண்கள் வாழ்க!

கோவிலுக்கு பூட்டு மேல் பூட்டு - பெண்கள் போராட்டம்
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 19, 2008



கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள வீர மகாகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து ஒருவர் பூட்டு போட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மேலும் ஒரு பூட்டை பூட்டு பூட்டினர்.

கும்பகோணம் அருகே உள்ளது திருவலஞ்சுழி. இங்குள்ள கீழ ரத வீதியில் வீர மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

கடந்த 15ம் தேதியன்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் பக்தர்கள் வீர மகா காளியம்மனுக்கு திருவிழா நடத்தினர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க முடிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவர் கோவில் கதவை சாத்தி பூட்டு போட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கோவிலுக்கு வெளியே சுவாமிக்கு விழா எடுத்து கொண்டாடினர். விழா முடிந்த பின்பு மகளிர் சுய உதவிக் குழுவினர், கோவிலுக்கு மேலும் ஒரு பூட்டை போட்டு பூட்டினர்.

இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குழப்பம் காரணமாக கோவில் இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு கிடக்கிறது.

Sunday, March 30, 2008

கொடைக்கானல்: மாவொயிஸ்டு தோழர்கள் வெடிகுண்டு வீசி போலீஸ் படுகாயம்

மாவோயிஸ்டு தோழர்கள் வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

TN: Policeman injured in bomb attack


Dindigul (PTI): A member of a police team was injured in a bomb attack by a five member gang involved in a theft case at a village in Kodaikanal hills early on Sunday, police said.

The incident occurred at Sempatti in Pallangikombai village.

However police managed to nab four gang members. One of those who escaped, a woman from Kerala, was later caught by the local people and handed over to police, they said.

A case under IPC 379 (punishment for theft) has been registered against the gang by police, who had gone to Kodaikanal on a tip off that the five were staying there.

Meanwhile, unofficial sources claimed that the gang members were Maoists. They recalled the visit of the ADGP to the area recently and said he had come on specific information that some extremist elements were hiding there. Local people had informed police about the suspicious movement of the gang in the hill area.

In December 2007, four Maoists were arrested at Marugamalai in Theni district when they were preparing the ground to give arms training for their cadres. Later their accomplices, including Maoist leader Sundaramurthy, Karthick and Easwaran and Balakrishnan, were arrested.

There was also exchange of fire between police and the Maoist gang in Varushanadu in which three Maoists were seriously injured. Two others surrendered.

Thursday, March 20, 2008

தமிழகத்தில் அலையும் சவுதி அரேபிய முட்டாவா?


சவுதி அரேபிய ஒழுக்க போலீஸ் முட்டாவா பாணியில் தமுமுக குண்டர்கள் பெண்களை அச்சுருத்துவதும், கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.

இது தமுமுக அலுவலத்திலேயே நடந்துள்ளது.

தமிழ்நாடு எங்கே போகிறது? தமிழ்ப்பெண்கள் நிலை இப்படி ஆகவேண்டுமா?

இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்

ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்

Tuesday, August 28, 2007

மத்தியபிரதேச வளர்ச்சி 24% தமிழ்நாடு 7%

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் வளர்ச்சி 24 சதவீத வேகத்தில் பொருளாதாரம் வளர்கிறது. குஜராத்தின் வளர்ச்சி 12 சதவீதம்.
ஆனால் தமிழ்நாடு வளர்ச்சி வீதம் 7.4 ஆக குறைந்துள்ளது.

எப்போதும் உருப்படாத மேற்கு வங்காளம், கேரளாவின் வளர்ச்சி கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை விட அதிகம்.

கலைஞர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி கவலைப்படுவதை விட குடும்பக்கவலை அதிகமாகிவிட்டது போல இருக்கிறது.


MP stuns all, is now No 1 in growth

Rajeev Ranjan Roy | New Delhi


State shakes off BIMARU tag with GSDP at 24%, followed by Gujarat at 12%

Madhya Pradesh, unlike its other counterparts, has got rid of the tag of BIMARU State with the economy on the first track of growth. The State tops the Planning Commission's list of best performers in terms of Gross State Domestic Product (GSDP) by registering a growth rate of 23.50 per cent at the constant prices. Its nearest rival is Chhattisgarh with 12.30 per cent growth rate, followed by Gujarat with 12.17 per cent GSDP for 2006-07.




Not a long time back, MP was dubbed as one of the country's BIMARU States, along with Bihar, Rajasthan and Uttar Pradesh where the GSDP growth rate at the constant prices has been pegged at 4.72, 7.96 and 6.07 per cent respectively. The other two States with the two-digit growth rate are Uttaranchal 10.28 per cent and Andaman & Nicobar Islands where the GSDP is growing at the rate of 10.78 per cent. Except A&N Islands, all these States have been under the BJP's rule for quite a few years.



The country's Capital, Delhi, is growing at the rate of 9.18 per cent, while the Planning Commission puts the growth rate in West Bengal, Andhra Pradesh, Haryana, Punjab, and Kerala at 8.13, 8.02, 8.05, 4.93, and 8.01 per cent, respectively. The strife-torn Assam is registering a GDP growth rate at 5.94 per cent, while Himachal Pradesh tops the list among smaller States by recording 9.27 per cent growth rate.



The GSDP growth rate in MP has substantially been increasing since 2000-01 onwards. From Rs 7,371,538 lakh in 2001-02, the total GSDP went up to Rs 10,305,674 lakh in 2004-05, and surged to Rs 11,217,742 lakh in 2005-06. The State has registered the growth rate, despite the fall in agriculture contribution to the State's GDP from 37.09 per cent in 1993-94 to 26.25 per cent in 2005-06.



As per the revised estimates of annual income for 2006-07 by the Central Statistical Organisation (CSO), the annual growth rate of the country measured in terms of GDP at factor cost at constant (1999-2000) price is 9.4 per cent for the year.



Among the major southern States, Tamil Nadu is registering the growth rate of 7.38 per cent, and Karnataka 7.90 per cent, while Maharashtra's GSDP rate has been pegged at 9.20 per cent, which is more than the national growth target of 9 per cent yearly during the 11th Plan. The Centre's Approach Paper to the 11th Plan aims at putting the economy on a sustainable growth trajectory with the growth rate of approximately 10 per cent by the end of the current Plan.



"The growth rate of GSDP of many States like Bihar, Uttar Pradesh and other smaller States looks poised to improve in days to come, as the Centre aims at ensuring faster growth in all productive sectors -- agriculture, industry and services -- with suitable interventions in policy. It will entirely be a different situation when the country enters into 12th Five-Year Plan," a Government official claimed.

Saturday, August 18, 2007

நெல்லையில் கிறிஸ்துவர்கள் கூட்டமாக புத்தமதத்துக்கு மதம் மாறுகிறார்கள்.

மீனாட்சிபுர ஸ்டைலில் மீண்டும் ஒரு பரபரப்புக்குத் தயாராகி வருகிறது நெல்லை. அங்கே திரளான தலித் மக்கள் மதம் மாறப் போகிறார்கள். அவர்கள் தழுவப் போவது புத்த மதத்தை. 'தீண்டாமை' காரணமாக அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுக் கிளம்பப் போகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

_இப்படி புத்த மதத்துக்குப் போக இருப்பவர்கள் அனைவருமே ஆர்.சி. எனப்படும் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பறையர் சமூக மக்கள். இவர்களை 'ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்கம்' என்ற அமைப்பு, புத்த மதத்துக்கு மதம் மாற்ற இருப்பதாகக் கேள்விப்பட்டு, எக்கச்சக்க பரபரப்புக்குள்ளானோம்.

இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக, கடந்த 29.7.07 அன்று பாளையங்கோட்டை ஆதிதிராவிடர் நலச்சங்க கட்டடத்தில் புத்தமதம் தொடர்பான ஒரு ரகசிய கருத்தரங்கு நடந்திருக்கிறது. அதில் சுமார் ஐம்பது தலித் கிறிஸ்துவர்கள், குறிப்பாக பறையர் சமூகத்தினர் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற வக்கீலும், புத்த சமூக செயல்பாட்டு பாசறைத் தலைவருமான தமிழினியன் என்பவர், அந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்த மதமாற்றச் செய்தி நெல்லையில் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பகட்டமாக ஆர்.சி. கிறிஸ்துவ பறையர் சமூகத்தினர் நூற்றைம்பது பேர் புத்தமதத்துக்கு மாற இருப்பதாகவும், ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்க அமைப்பின் மாநிலத் தலைவர் நரேஷ் அம்பேத்கர் என்பவர்தான் இந்த மதமாற்றத்துக்கு முன்னோடி என்பதும் நமக்குத் தெரியவந்தது. இவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பாளையங்கோட்டை, தாழையூத்து, தென்கலம், தேவர்குளம், சங்கரன்கோயில், லாலுகாபுரம், வைராவிகுளம் ஆகிய ஊர்களில் தலித் மக்களை புத்த மதத்துக்கு ஈர்த்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.

நரேஷ் அம்பேத்கரை நாம் சந்தித்து, ''ஏன் இந்தத் திடீர் மதமாற்றம்?'' என்றோம்.

''இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதால்தான் தலித்துகள் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தனர். அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தலித் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் சம உரிமை இல்லை. சில ஆலயங்களில் அவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பிலும் கூட சம உரிமையில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள், பங்குத்தந்தையர், பேராயர்கள் போன்ற உயர் பதவிகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. கடைநிலை ஊழியர்களாக மட்டுமே நாங்கள் உட்கார வைக்கப்படுகிறோம். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் பங்குத்தந்தையாக இருந்தாலும், அவர்கள் கையால் திவ்விய நற்கருணை அப்பம் வாங்கிக் கொள்ள மற்ற சமுதாயத்தினர் மறுக்கிறார்கள்.

கல்லறைத் தோட்டத்தில் பிணத்தைப் புதைப்பதில் கூட தீண்டாமை நிலவுகிறது. தலித் கிறிஸ்துவர்கள் உடல்களை கிழக்குப் பக்கமாகவும், மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் உடலை மேற்குப் புறமாகவும் தனித்தனி இடங்களில் புதைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை?

எல்லாவற்றுக்கும் மேலாக பாளையங்கோட்டை புனித சவேரியார் ஆலயம் இருக்கும் இடம் பறையர் சமூகத்துக்குச் சொந்தமானது. அதை மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் அந்தக் காலத்திலேயே ஏமாற்றி அபகரித்து விட்டார்கள். அந்த நிலத்தை மீட்க பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. அவர்களை எதிர்க்கும் சக்தியும் எங்களுக்கு இல்லை. அதனால்தான் மதம் மாற முடிவு செய்தோம். புத்தமதத்தில் சேர்ந்துவிட்டால் ஜாதிக்கொடுமை இல்லை. தீண்டாமை இல்லை. மதம் மாறும்படி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை'' என்றார் அவர்.

புத்தமதத்துக்கு மாறப்போகும் தாழையூத்து பறையர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு நரேஷ் அம்பேத்கர் நம்மை அழைத்துச் சென்று அவர்களில் சிலரை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதில் ஒருவர் ஆல்டன் என்ற இருபத்து மூன்று வயது இளைஞர், குடும்பத்துடன் ஒட்டுமொத்தமாக மதம் மாற இருந்த அவர் நம்மிடம் பேசினார்.

''கிறிஸ்துவ மதத்தில் சம உரிமையில்லை. ஒடுக்கப்படுகிறோம். வைராவிக்குளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் சாமியாருக்குப் படித்தவர். அவரை மேல்ஜாதியினர் கிண்டல், கேலி செய்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். அதேபோல அருட்சகோதரியாக (கன்னியாஸ்திரியாக) ஆக வேண்டிய ஒருவருக்கும் இதே நிலை ஏற்பட்டு, அவர் மதத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். ஆகவேதான் நான், எனது தாயார் பன்னீர் செல்வம், சகோதரிகள் அருள் ஆஷா போஸ்லின், அருள்திரேசா, அருள் ஆனிசா ஆகியோரோடு புத்த மதத்துக்கு மாறப் போகிறேன்'' என்றார் அவர்.

நரேஷ் அம்பேத்கருக்கு இப்படி மதமாற்ற ஐடியாவைத் தந்தவர் அன்புதாசன் என்று கேள்விப்பட்டோம். அன்புதாசன் அம்பேத்கர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர். அவருடன் தொலைபேசியில் பேசினோம்.

''சார்! இந்துக்கள் எங்களை விஷம் வைத்துக் கொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள் இனிப்பில் விஷம் வைத்துக் கொல்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

சென்னை லயோலா கல்லூரி தலித் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அங்கு தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.

ஆகவே, மதம் மாறுவதுதான் தலித் மக்களுக்குள்ள ஒரே தீர்வு. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பத்தாயிரம் பேர் புத்தமதத்தைத் தழுவினார்கள். நெல்லையில் இந்த மாதக் கடைசியில் தலித் கிறிஸ்துவர்கள் புத்தமதத்துக்கு மாறப் போகிறார்கள். இதற்காக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தலித் கிறிஸ்துவர்களை மதமாற்றம் செய்வதே எங்கள் இலக்கு'' என்றார்.

வக்கீல் தமிழினியனிடம் பேசியபோது, '' பொதுவாக இந்துக்கள்தான் மதம் மாறுவார்கள். ஆனால், இந்த முறை முதல் தடவையாக கிறிஸ்துவர்கள் மதம் மாறப் போகிறார்கள். கிறிஸ்துவ சபையில் மனுதர்மம்தான் ஆட்சி செய்கிறது. சில ஆலயங்களுக்குள் தலித் கிறிஸ்துவர்கள் போகவே முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இடஒதுக்கீடு பட்டியலில் தலித் கிறிஸ்துவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் புத்த மதத்தில் சேர்ந்தால், அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படுவார்கள். முதல்கட்டமாக நூற்றைம்பது பேர் புத்த மதத்தைத் தழுவ இருக்கிறார்கள். நெல்லையிலேயே மதமாற்ற விழாவை நடத்தப் போகிறோம். விரைவில் பத்து ஏக்கர் நிலம் வாங்கி புத்த விகார் ஒன்றையும் கட்டப்போகிறோம்'' என்றார் அவர்.

சரி! இந்த மதமாற்ற முயற்சி பற்றி, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கருத்து என்ன? ஆயர் ஜூடு பால்ராஜ் சார்பாக, ஒரு பங்குத்தந்தை நம்மிடம் 'பெயர் போட வேண்டாம்' என்ற வேண்டுகோளுடன் பேசினார்.

''நீங்கள் சொல்லும் ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கத்தைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவர்கள் இதுவரை எங்களிடம் எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. ஆர்.சி. கிறிஸ்துவ சபையில் ஜாதிப் பிரச்னை இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நிச்சயமாக தீண்டாமை இல்லவே இல்லை.

இங்குள்ள பங்குத் தந்தையரில் ஐந்து பேர் தலித் மக்கள். 1990_களுக்குப் பிறகு கிறிஸ்துவ சபையில் தலித்துகளுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனி அறக்கட்டளை அமைத்திருக்கிறோம்.

வேலைவாய்ப்பில் தலித்துகளுக்கு முப்பது சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், உடனடியாய் கல்லூரிகளில் அட்மிஷன் வழங்கப்படுகிறது.

புனித சவேரியார் ஆலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதில் உண்மையில்லை. இந்தப் பிரச்னையைக் கிளப்பிய பலர் அதில் உண்மையில்லை என்று தெரிந்ததும் விட்டுவிட்டார்கள். கல்லறைத் தோட்டத்தில் எல்லோருக்கும் சமஉரிமை வழங்கப்படுகிறது. திருச்சியில் அப்படியொரு பிரச்னை ஏற்பட்டு பிஷப்புகளின் தீவிர முயற்சியால் அது முடிவுக்கு வந்துவிட்டது'' என்றார் அவர்.

எது எப்படியோ? 'பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே' என்று இதுவரை சொல்லிவந்த உதடுகள், இனி புத்தமதத்துக்கு மாறி, 'புத்தம், சரணம், கச்சாமி' என்று சொல்லப் போவதால், நெல்லை கொஞ்சம் பரபரப்பாகி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றி
குமுதம் ரிப்போர்டர் 19/08/07

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தென்காசி கொலைகள் -- விஜயபாரதம் கட்டுரை

படிக்க

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தென்காசி கொலைகள் -- விஜயபாரதம் கட்டுரை

இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டுவிட்டு அமைதி மார்க்கத்துக்கு வர விரும்புவோம்.

அங்கிருக்கும் சட்டத்துக்கு புறம்பான கட்டடத்தை இடித்து அது கட்டப்பட்டிருக்கும் கோவில் நிலத்தையும் திருப்பிக்கொடுத்து மத நல்லிணக்கத்தை காக்க இஸ்லாமிய சகோதரர்களை அழைப்போம்.

Tuesday, August 14, 2007

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் அனைத்திலும் யோகா வகுப்புகள்

அரசு பள்ளிகளில் யோகா கற்பிக்க அதிரடி உத்தரவு

சென்னை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு, யோகா கலையை கற்பிப்பது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் இரண்டு உடற்கல்வி இயக்குனர்களுக்கு யோகா பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மேன்மை பெற யோகா கலை பயிற்றுவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு வார யோகா பயிற்சி அளிக்கப்படும். அவர்கள், மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். அவர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்காக 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

Friday, August 10, 2007

ராமர் சேதுவை இடிப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்துமக்கள் கட்சி சோனியாவுக்கு கருப்புகொடி

சோனியா காந்தி ராமேஷ்வரம் வரும்போது ராமர் சேதுவை இடிப்பதற்குமுனையும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து கருப்புக்கொடி காட்டப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Hindu outfit to hold black flag demo during Sonia's visit

Chennai, Aug. 9 (PTI): Hindu Makkal Katchi will hold black flag demonstrations during Congress president Sonia Gandhi's visit to Rameswaram on August 12 to register their protest against the "demolition" of Ramar Sethu by the Sethusamudram Ship Canal Project.

Party president Arjun Sampath told reporters that the UPA Government was "continuing" with the demolition of Ramar Sethu despite protests from Hindu outfits.

He also alleged that Gandhi's visit would hinder the movement of devotees to Rameswaram as part of the `Aadi Amavasai' celebrations on August 12.

Hindu outfits also have decided not to allow the shooting of a Tamil film `Samiyar' starring actor Satyaraj, as the film was intended to "degrade Hindu spiritual leaders", he said.

Alleging that parties in Kerala were giving "too much" importance to PDP leader Abdul Naser Madhani, who was relieved of Coimbatore serial bomb blast cases, he asked Tamil Nadu Government to appeal against the court decision.

Wednesday, August 08, 2007

பலவந்தமாக கிட்னி பிடுங்கும் திமுக உடன்பிறப்பு

கிட்னியை கேட்டு மிரட்டுகிறார்' மாஜி எம்.எல்.ஏ., மீது பெண் புகார்

சென்னை: "கூலிப்படை மூலம் என்னைக் கடத்திச் சென்று கிட்னியை எடுக்க மாஜி எம்.எல்.ஏ., முயற்சித்து வருகிறார். "கிட்னி தர மறுத்தால் பொய் வழக்கு' போடச் செய்வேன் என மிரட்டுகிறார். என்னையும், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்' என்று பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் டி.ஜி.விஜயன். மாஜி தி.மு.க., எம்.எல்.ஏ.,வான இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்தவர். தற்போது நகராட்சி கவுன்சிலராக உள்ளார். சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

"கிட்னி'யைத் தர நெருங்கிய உறவினர்கள் மறுத்துவிட்டதால், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் கூலித் தொழிலாளி நாகராஜின் மனைவி பத்மாவதியை, விஜயன் நாடியுள்ளார். ஆனால் அவரும் மறுத்து விட்டார். விஜயனும், அவரது குடும்பத்தினரும் பத்மாவதியை மிரட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்துவிட்ட நிலையில், தானம் கொடுப்பதற்கான ஆவணங்களில் பத்மாவதி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் விஜயன் குடும்பத்தினர் வெளியே பிடித்து தள்ளி கதவை பூட்டிச் சென்று விட்டனர். விஜயன் ஆட்கள் கடத்தி சென்று "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருவதாக பத்மாவதி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் பத்மாவதி கூறியிருப்பதாவது: விஜயன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக "கிட்னி' தருமாறு விஜயனும், அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். மறுத்தால் கஞ்சா வழக்கிலோ, விபசார வழக்கிலோ சிக்க வைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். ஆளுங்கட்சி அதிகாரத்தின் மூலம் கூலிப்படையினரை வைத்து இரவோடு இரவாக கடத்தி "கிட்னி'யை எடுக்க முயற்சித்து வருகின்றனர். நான் தொடர்ந்து மறுத்து வருவதால் என்னையும், என் குடும்பத்தினரையும் நேற்று வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். என் குடும்பத்தை அழிக்க முயற்சிக்கும் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் உதவி கமிஷனர் முரளி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரணிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். புகாரில் சிக்கிய விஜயனும் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், ""எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக பத்மாவதியிடம் "கிட்னி'யை தருமாறு கேட்டபோது ஒப்புக் கொண்டனர். முதலில் ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. இதற்கு ரூ.75 ஆயிரம் செலவாகியது. பத்மாவதியின் "கிட்னி' எனக்கு பொருந்தும் என டாக்டர்கள் கூறினர். ஆனால், பத்மாவதி தற்போது "கிட்னி'யைத் தர மறுக்கிறார். பணம் கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்,'' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

பணம் கொடுத்ததே குற்றம்: நெருங்கிய உறவினர்கள் தான் "கிட்னி' தானம் செய்யலாம் என்பதால், பத்மாவதியை, விஜயனின் நெருங்கிய உறவினர் போன்று ஆவணங்கள் தயாரித்து அவரிடம் கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. "கிட்னி' பெறுவதற்காக ரூ.10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளது குற்றமாகவே கருதப்படும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. ஏற்கனவே திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு பெண்களிடம் நடந்த "கிட்னி' மோசடி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

--

Tuesday, August 07, 2007

தூத்துக்குடி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் நியமனம்

தூத்துக்குடி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் நியமனம்

குலையன்கரிசல், ஆக. 6-

தூத்துக்குடி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி மண்டல முறைப்படுத்தும் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட பார்வையாளர் அன்புராஜ் நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, மாவட்ட பிரசார அணி தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட சிறப்பு பார்வை யாளர் கனகராஜ் மற்றும் பலர் பேசினார்கள்.

கூட்டத்தில் தூத்துக்குடி ஒன்றிய துணை தலைவ ராக கூட்டாம்புளி பட்டு முருகேசன், முள்ளக்காடு கணேஷ்குமார், தாளமுத்துநகர் தங்கராஜ், மேலத்தட்டாப்பாறை சந்திரன், பொதுச் செயலாளராக முத்தையாபுரம் செண்பகராஜ், அமைப்பு செயலாளராக முத்தம்மாள், காலனி குருசாமி, ஒன்றிய செயலாளராக கூட்டாம்புளி கனிராஜ், ராஜீவ் நகர் பாப்பா, முடிவைந்தானேந்தல் புகழும் பெருமாள், பொருளாளராக புதுக்கோட்டை ஜெயபிர காஷ் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

புதுக்கோட்டையில் கூட் டாம்புளி செல்லும் மெயின் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும்.

தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் இருந்து வாகைகுளம் வரை உள்ள 4 வழி சாலை உடனே அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் பக்கம் உள்ள பார் வசதி கொண்ட அரசு டாஸ்மார்க் கடையை வேறு இடத்திற்கு உடனே மாற்ற வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நன்றி மாலைமலர்

நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை

தமிழ்நாட்டில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது
நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., தேவாரம் பேச்சு


திருப்பத்தூர், ஆக.7-

தமிழ்நாட்டில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது நக்சலைட்டுகள் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. தேவாரம் கூறினார்.

வீரவணக்கநாள் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த 1980-ம் ஆண்டு நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்தது. நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டிருந்தது. அந்த பணியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டுகள் முருகேசன், ஏசுதாஸ் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியானார்கள். இவர்களின் நினைவாக திருப்பத்தூர் டவுண் போலீஸ் நிலையத்தில் நினைவு சின்னம் வைக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் அவர்கள் இறந்த தினமான ஆகஸ்ட் 6-ந் தேதியை திருப்பத்தூர் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பொது மக்கள் வீர வணக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி நேற்று திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள நினைவு சின்னம் முன்பு வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மலர் வளையம் வைத்து

அஞ்சலி

இதில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டபிள்ï.ஐ.தேவாரம், வேலூர் சரக டி.ஐ.ஜி., சுந்தரமூர்த்தி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம், கிï பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டி.கே.ராஜா எம்.எல்.ஏ., பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி, திருப்பத்தூர் நகரசபை தலைவி சொக்கம்மாள் துணைத் தலைவர் சாந்தி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது காவலர்கள் வானத்தை நோக்கி சுட்டு வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் போலீசார் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., டபிள்ï.ஐ.தேவாரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நினைவு சின்னம்

27 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் சேவை செய்து உயிர் நீத்த காவலர்கள் நினைவாக நாம் ஆண்டுதோறும் இங்கு கூடி வருகிறோம். முதன் முதலில் வீர வணக்க நாள் இங்கு செலுத்திய சமயத்தில் இருந்தவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகின்றனர். ஆனால் தற்போது ஏராளமான புதியவர்கள் இங்கு கூடி வந்து உள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பனால் 30-க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இதில் 7 போலீசாரும், 5 வனத்துறையினரும் அடங்குவர். ராஜீவ்காந்தி படுகொலையின் போது அவருடன் இறந்த 13 பேரில் 11 பேர் போலீசார். அங்கெல்லாம் போலீசாருக்கு என்று நினைவு சின்னம் அமைக்கப்படவில்லை. திருப்பத்தூரில் மட்டும் தான் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

நக்சலைட்டு ஒழிப்பில் போலீசாருடன் பொது மக்கள் இணைந்து செயல்பட்டனர். அதனால் தான், இங்கு போலீசார், பொது மக்கள் என வித்தியாசம் இல்லாமல் ஏராளமானோர் வந்து இருக்கின்றனர்.

பொது மக்கள் ஒத்துழைப்பு இருப்பதால் தான் நக்சலைட்டுகளை ஒழிக்க முடிகிறது. தமிழகத்தில் எந்த அரசும் தீவிரவாதத்திற்கு ஒரு போதும் அனுமதி அளிப்பதில்லை.

கவலைப்பட வேண்டாம்

தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தலையீடு, பொதுமக்கள் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நக்சலைட்டுகள் குறித்து பொது மக்கள் இனி பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு தேவாரம் பேசினார்.

முடிவில் திருப்பத்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகர்க் நன்றி கூறினார்.

நன்றி தினத்தந்தி
---

நக்சலைட்டுகள் தற்போது இணையத்துக்கு குடிபெய்ர்ந்துள்ளார்கள் போலிருக்கிறது.

இணைய பொதுமக்கள் மட்டுமே பயப்பட வேண்டும்போல இருக்கிறது.

Monday, August 06, 2007

தமிழ்நாட்டு அரசாங்கப்பள்ளியிலும் பூ போட்டு வைக்க தடை- இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் விபூதி, குங்குமம் வைக்க தடை அரசு பள்ளியில் இந்து முன்னணி முற்றுகை

கரூர் :புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் கடந்த சில வாரங்களாக மாணவர்களை, பள்ளிக்கு வரும்போது விபூதி, குங்குமம் நெற்றியில் வைத்து வரக் கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்காத மாணவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறினர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மாவட்டச் செயலர் ராஜா தலைமையில் பள்ளிக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், வெளியே வந்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்ததை நடத்தினார்.அப்போது,பள்ளியில் தேர்வு நடப்பதால் போராட்டங்கள் நடத்தினால் மாணவர்களது படிப்பு பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,என்று கூறினார்.அதன்பேரில், இந்து முன்னணியினர் போராட்ட அறிவிப்பைக் கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடைபெறும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


நன்றி தினமலர்

Sunday, August 05, 2007

திமுக செய்தது சந்தர்ப்பவாதம் - பாஜக கடும் தாக்கு

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்நாட்டு மக்கள்தான்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசனைப் பொருத்தவரை எல்லோருக்கும் நல்லவர் என்ற பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் விருப்பு வெறுப்பு, தனிப்பட்ட காழ்ப்புணர்வு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் அனைவருடனும் நல்லுறவைப் பராமரிக்கும் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்.

முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்து உயர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பதவிவரை வகித்த இல. கணேசன் ஒரு நல்ல தமிழ்க் கவிஞர், பாடகர், பேச்சாளர் என்பதும் இவரது தனிச் சிறப்பு.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமையிடமான கமலாலயத்தில், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் அளித்த பேட்டி...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது, பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா?

பலமாக மாறும் என்கிற நம்பிக்கையில்தான் நாங்கள் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே எடுத்த முடிவுதான் இது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத மாற்று ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் எடுத்த முடிவுதான் அது. குறைந்தது 10 சதவீதத்தினர் இப்படியொரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது எங்களது கணிப்பு.

நாங்கள் எடுத்த முடிவைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. நாங்கள்தான் இந்த இரண்டு மாநிலக் கட்சிகளுக்கும் ஒரு சரியான மாற்று என்று எங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் தவறிவிட்டோம். அந்த வாய்ப்பை நடிகர் விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டுவிட்டார். பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் அந்த 10 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சியாக அல்லவா காட்சி அளிக்கிறது?

இது மற்ற கட்சியினரால் அவர்களது வசதிக்காக அவ்வப்போது சொல்லப்படுகிற வார்த்தை. தமிழகத்தில் இருக்கும் கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுமே எங்கள் மேடையில் ஏறி, பாரதிய ஜனதா கட்சி ஒரு தீண்டத்தகாத கட்சி அல்ல என்று பேசியவர்கள்தான். நீங்கள் குறிப்பிடும் அந்தத் தீட்டை திமுகவும், அதிமுகவும் எப்போதோ போக்கிவிட்டன. இவர்கள் எல்லோரும் எங்களை ஆரத் தழுவியவர்கள்தான். சித்தாந்தரீதியாக கம்யூனிஸ்ட்டுகளும், அரசியல்ரீதியாகக் காங்கிரஸ் கட்சியும்தான் எங்கள் எதிரிகள். மற்ற அனைவருமே எங்களைப் பொருத்தவரை தீண்டத்தகாதவர்கள் அல்லர்.

அடுத்த தேர்தலில் உங்களது இயற்கையான கூட்டணிக் கட்சி என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

சமீபகால அரசியலில் இயற்கையான கூட்டணி என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லை என்று நினைக்கிறேன். திமுக மற்றும் அதிமுக உள்பட எந்தவொரு கட்சியும் அடுத்த தேர்தலில் இன்னாருடன்தான் கூட்டு வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்லும் நிலையில் இல்லாதபோது, நாங்கள் மட்டும் இந்த விஷயத்தில் முன்கூட்டியே தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்று நினைக்கிறீர்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் என்பதுதான் அடிப்படையான விஷயம். வாஜ்பாய் தலைமையிலான அல்லது பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அல்லது மன்மோகன் சிங் தலைமையிலான அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி என்கிற இருதுருவச் சேர்க்கை ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது. மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால், முயற்சிக்கலாம். வாய்ப்பில்லை.

மூன்றாவது அணி அமையாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் எப்படி அமையும் என்று நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இருதுருவச் சேர்க்கை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் ஆட்சியை அமைக்க முடியும். அடுத்தாற்போல, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கான எல்லா வேலைகளையும் மன்மோகன் சிங்கும் அவரது அரசும் செய்து முடித்துவிட்டது. இனி அடுத்தது பாரதீய ஜனதாதான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஓர் ஆட்சி என்னதான் நல்லது செய்திருந்தாலும், எவ்வளவுதான் செயலற்றதாக இருந்தாலும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது அவ்வப்போது அமைகின்ற கூட்டணிதானே தவிர சாதனைகள் அல்ல என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

கடந்த தேர்தலில் எங்களது அரசு தோல்வி அடைந்த பிறகு சாதனைகளால் பயனில்லை என்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். எங்களது சாதனைகளை அனைவருமே ஏற்றுக் கொள்கிறார்கள். கடந்த தேர்தலில் எங்களது அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டதற்குக் காரணம் தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் முடிவுகள்தான். எங்களுடன் கூட்டணியில் இருந்து, எங்களது ஆட்சியில் பங்கும் பெற்று, கடைசி நேரத்தில் எங்களது கூட்டணியில் இருந்து வெளியே வந்து எங்களது ஆட்சிக்கு எதிராகப் பிரசாரம் செய்த திமுகவின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆனால், மக்கள் மத்தியில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான போட்டி என்கிற தோற்றம் ஏற்பட்டதே தவிர, வாஜ்பாயின் தலைமை வேண்டுமா? வேண்டாமா? என்கிற கேள்வி பலமாக எழவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் மீதும், ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் ஆட்சியின் மீதும் இருந்த அதிருப்தி எங்களது வெற்றியைப் பாதித்தது என்பதுதான் உண்மை. மாநில அரசின் செயல்பாடுகளை வைத்து நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சில சமயம் தீர்மானிக்கப்படுவதால் நிகழும் தவறுகள் தவிர்க்க முடியாதவை.

அப்படியானால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியின் படுதோல்விக்கு அதிமுக மீதிருந்த அதிருப்திதான் காரணம் என்கிறீர்களா?

தோல்வி அடைந்த பிறகு கூட்டணிக் கட்சிகளைப் பழிப்பது என்பது நேர்மையான அரசியலாகாது. இதெல்லாம் தெரிந்துதானே முடிவெடுத்தோம். தேர்தலுக்கு முன் அதையெல்லாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். எங்கள் அணியின் தோல்விக்கு அதிமுக மீதிருந்த அதிருப்தி காரணமாக இருந்திருந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை.

அடுத்த தேர்தலில் இப்போதிருக்கும் கூட்டணி அமைப்பு மாறும் என்று கருதுகிறீர்களா? அப்படி மாறும்போது பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் உங்களுக்கு எதிரான சூழ்நிலை ஏன் ஏற்படக்கூடாது?

பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் எல்லாம் எச்சரிக்கையாகவே செயல்படுகிறார்கள். மத்திய அரசின் கணக்கின்படியே கூட, மைய அரசின் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்துகின்ற மாநிலங்களில் முதன்மையாக இருப்பது பாஜக ஆளும் குஜராத் மாநிலம்தான். அந்தப் பட்டியலில் முதல் 10 மாநிலங்களில் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்கள் இருக்கின்றன. அதனால் பாஜகவுக்கு எதிரான சூழ்நிலை நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏற்படாது என்று நம்புகிறோம்.

அப்படியானால் கூட்டணி ஆட்சிதான் இனிமேல் இந்தியாவில் வருங்கால அரசியலாக இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள். அப்படித்தானே...?

ஒரு கட்சி ஆட்சியில்தான் முன்னேற்றம் விரைவாக ஏற்படும் என்பதுதான் எங்கள் கருத்து. ஆனால் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இப்போதைக்கு இல்லை என்ற உண்மையையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையில், ஒரு பெரிய கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதில் தவறில்லை.

இன்றைய சூழ்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில், இதுபோன்ற இருதுருவச் சேர்க்கை ஒன்றுதான் ஒரு ஸ்திரமான மத்திய அரசு அமைவதற்கு உதவும். எல்லா தரப்பு மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஆட்சியாக அந்த அரசு அமையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எங்களது கருத்துப்படி வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட ஒரு கட்சி ஆட்சி முறைதான் சிறந்தது.

மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

தேசியக் கட்சிகள் மாநில உணர்வுகளுக்கு மரியாதை அளிக்காத காரணத்தால் மாநிலக் கட்சிகள் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் பெருகி வருகின்றன. இது தவிர்க்க முடியாதது என்று சொல்லிவிட முடியாது. தேசியக் கட்சியாக இருந்தாலும் பிராந்திய உணர்வுகளை அந்தக் கட்சிகள் பிரதிபலிக்க வேண்டும். மாநில உணர்வுகளுக்குக் குரல் கொடுக்கும், மரியாதை அளிக்கும் தேசியக் கட்சிகள் இருக்குமானால் இது போன்ற பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி எதிர்காலத்தில் குறையத் தொடங்கும்.

அப்படியொரு நிலைமை எப்படி ஏற்படும்? காவிரிப் பிரச்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் எந்த மாநிலத்துக்காகப் பேசமுடியும்?

காங்கிரஸýம், பாஜகவும் ஆட்சியில் இருந்தபோது எத்தகைய முடிவும் எடுக்க முடியவில்லையே?

நதிநீர், இடஒதுக்கீடு போன்ற உணர்வுபூர்வமான பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் தீர்வு காணவே முடியாது. நீதிமன்றங்கள் அல்லது நடுவர் மன்றங்கள்தான் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். தேர்தல் ஆணையம் போல நதிநீர் ஆணையம் அமைப்பது தான் காவிரிப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. தமிழகத்திற்குத் தண்ணீர் தந்தது ஆள்பவர்கள் அல்ல, ஆண்டவன்தான்.

காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் வேற்றுமை இல்லாதது போல் இருக்கிறதே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முந்தைய ஆட்சியில் எதைச் செய்தாலும் அதை மாற்றுவதுதான் சரி என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவது பொருத்தமில்லாதது. தாராளமயமாக்கல் என்கிற கொள்கையை பாஜகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலில் நாங்கள் சில வரன்முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று சொல்கிறோம். சொல்லப்போனால் கொள்கையை மாற்றிக் கொண்டது காங்கிரஸ் கட்சிதான். சோஷலிசத்தை வலியுறுத்திய ஜவாஹர்லால் நேரு படத்தை வைத்துக் கொண்டே, அவர் சொன்னதற்கு நேர் எதிரான கொள்கையை அறிவித்துத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார்கள். பொருளாதாரக் கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறதே தவிர மற்ற விஷயங்களில் எங்களுக்கும் காங்கிரஸýக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. இந்தத் தேசத்தின் அடையாளத் தன்மை என்ன என்பதில் பெரிய வேறுபாடு எங்களுக்கும் அவர்களுக்கும் உண்டு.

ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த பிறகும் பாஜக ஓர் இந்துத்வா கட்சி என்ற பெயர் இருக்கிறதே தவிர எல்லோருக்கும் பொதுவான கட்சி என்ற பெயர் வரவில்லையே. ஏன்?

இந்துத்வா என்பது வேறு, இந்துக்களின் கட்சி என்பது வேறு. உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தியாவுக்கும் அப்படிப்பட்ட தனித்தன்மை உண்டு. இது வழிவழியாகத் தொன்றுதொட்டு இருந்து வரும் தனித்தன்மை. இந்தத் தனித்தன்மைதான் இந்தத் தேசத்தின் தேசியத் தன்மைக்கு அடிப்படை. அதுதான் ஆங்கிலத்தில் ஹிந்துயிஸம் ( ஏண்ய்க்ன்ண்ள்ம்), அதாவது இந்துத்வா.

இந்த இந்துத்வா இந்துக்களை மட்டுமே குறிக்கும், உள்ளடக்கிய விஷயம் என்பதுதான் பாஜக இதர கட்சிகளின் குற்றச்சாட்டு.....

இங்கே வாழும் இஸ்லாமியர்களும் சரி, கிறிஸ்தவர்களும் சரி அடிப்படையில் இந்த நாட்டு மக்கள்தான். அந்நிய நாட்டில் இருந்து வந்த அந்த மதங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். இந்தக் கலாசாரத்தின், பண்பாட்டின் அத்தனை அம்சங்களும் அவர்களது ரத்தத்தில் ஊறிய விஷயங்கள். அவர்கள் மதத்தால் வேறுபட்டிருக்கிறார்களே தவிர தேசிய அளவில், கலாசார மற்றும் பண்பாட்டுரீதியாக இந்திய உணர்வுகளில் ஒன்றியவர்கள். இந்துத்வா என்று நாங்கள் குறிப்பிடுவது இங்கே வாழும் அனைத்துத் தரப்பினருக்கும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடில்லாமல் உயிரோட்டமாக இருக்கும் அந்தக் கலாசார ஒற்றுமையைத்தான், உணர்வைத்தான்.

பிறகு ஏன் உங்கள் மீது மதரீதியிலான இந்துக் கட்சி என்கிற முத்திரை விழுந்திருக்கிறது?

அப்படியொரு முத்திரை குத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. எங்காவது கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டால் எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுகிறார்கள். பாஜகவும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிடும். அதே போல எங்காவது இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் எல்லா அரசியல் கட்சிகளையும் போல பாரதிய ஜனதா கட்சியும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும். ஆனால், எங்காவது இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மற்ற அரசியல் கட்சிகள் குரல் கொடுக்காது, ஆதரவு தெரிவிக்காது. பாரதீய ஜனதா கட்சி மட்டும் ஆதரவாக அறிக்கை வெளியிடும். அதனால்தான் எங்களுக்கு இந்த இந்துக் கட்சி என்கிற முத்திரை. சொல்லப் போனால், உண்மையான மதச்சார்பற்ற தன்மையை நாங்கள் பின்பற்றுவதால் எங்களுக்குத் தரப்படும் பட்டம்தான் இந்த இந்துக்களின் கட்சி என்கிற முத்திரை.

அதே போல, பாரதிய ஜனதா கட்சி என்பது உயர்ஜாதியினரின் கட்சி என்கிற கருத்தும் பொதுவாக இருக்கிறதே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பாரதிய ஜனதா கட்சியை எல்லாத்தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உயர்ஜாதி என்று நீங்கள் குறிப்பிடும் சமூகத்தினர் எங்கள் கட்சியில் குறைவாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது தவறான குற்றச்சாட்டு.

அயோத்திப் பிரச்னை பற்றிய உங்களது இப்போதைய கருத்து என்ன?

அயோத்திப் பிரச்னை என்பது தேசியப் பிரச்னை. பாபர் என்கிற ஆக்கிரமிப்பாளர், தான் இந்த நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அயோத்தியில் விக்ரமாதித்தன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயத்தை இடித்துக் கட்டியதுதான் பாபர் மசூதி. அடிமைப்படுத்தியவனுக்கு அது வெற்றிச் சின்னம் என்றால், அடிமைப்பட்ட நமக்கு அது அவமானச் சின்னம். சுதந்திரம் அடைந்த மறுநாளே அது இடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இல்லையா?

நான் அப்படியெல்லாம் பண்புடன் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. பாபர் மசூதி இப்படிதான் இடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்பது உண்மை. ஆனால் அந்த மசூதி அகற்றவோ, மாற்றவோபடவேண்டும் என்று நிச்சயமாக விரும்பினேன். நம்மை அடக்கி ஆளவந்த பாபருக்கு மசூதியோ, நினைவுச் சின்னமோ இருப்பது ஜாலியன்வாலாபாகில் ஜெனரல் டயருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்குச் சமம். பாபர் அல்ல பிரச்னை. பிரச்னை அது மசூதி என்பதால்...?

அது மசூதியாக இல்லையே? தொழுகை நடந்தால்தானே மசூதி? ஆலயம்தான் மசூதியாக மாற்றப்பட்டது என்பது மட்டுமல்ல, ஒரு நாள்கூட அங்கே தொழுகை நடைபெற்றதும் இல்லை. மினார் இல்லாத ஒன்று எப்படி மசூதியாக முடியும்?

ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் உங்களால் ஏன் இந்த அயோத்தி பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லை?

ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதானே தவிர பாரதிய ஜனதா கட்சி ஆட்சியல்ல. எங்களுக்குத் தனி மெஜாரிட்டி இல்லாதிருந்ததும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாதிருந்ததும்தான் அயோத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் இயலாமல் போனதற்குக் காரணம். எங்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, எங்களது செயல் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிச்சயம் செயல்படுத்தவும் செய்வோம். அயோத்தி பிரச்னைக்கு இறுதி முடிவு எங்களால்தான் ஏற்படும். அது சுமுகமான முடிவாகவும் இருக்கும்.

கடந்த மூன்றரை வருட மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு பற்றி உங்களது கருத்து என்ன?

செயல்பாடற்ற அரசு இது. வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவின் கெüரவம் உலக அரங்கில் உயர்ந்தது. இப்போது மன்மோகன் சிங் அரசு இந்த நாட்டின் தன்மானத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டது. அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவை அதிர்ந்துபோகச் செய்த எங்களது அரசுடன் அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் இந்த அரசை ஒப்பிடும்போது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி 9 சதவிகிதத்தை முதல்முறையாக எட்டியிருக்கிறது. இவையெல்லாம் உங்கள் பார்வையில் படுவதே இல்லையே ஏன்?

அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்திருக்கிறது. சரி. வளர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. சரி. ஆனால், தெருவோரம் வசிக்கும் ஏழையின் விழியில் வெளிச்சம் ஏற்படவில்லையே, ஏன்? விலைவாசி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறதே, ஏன்? அடுத்தவனிடமிருந்து கடனை வாங்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு நானும் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது வளர்ச்சியல்ல. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை மன்மோகன் சிங் காலத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக ஆட்சியைப் பற்றி உங்களது அபிப்பிராயம்தான் என்ன?

தமிழகத்தில் ஆட்சி எங்கே நடக்கிறது? திமுக எதைச் செய்தாலும் அதிமுக விமர்சிக்கிறது. அதிமுக எதை விமர்சித்தாலும், உனது ஆட்சிக் காலத்தில் எப்படி இருந்தது என்று திமுக பதிலளிக்கிறது. இதை மக்கள் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தரம் தாழ்ந்த அரசியல் நடந்து வருகிறது. இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியில் இருக்கும் அரசு இது. இலவசங்களை அதிகரிக்க டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்க நினைக்கிறார்கள். கரும்புத் தொழிற்சாலைகளை எத்தனால் தயாரிக்காமல் மதுபானம் தயாரிக்க பயன்படும் "மொலாசஸ்' உற்பத்தியைப் பெருக்கச் சொல்கிறார்கள். எத்தனால் தயாரித்தால் கரும்பு விவசாயிக்கு அதிகம் பணம் கிடைக்கும். "மொலாசஸ்' தயாரித்தால் அவனுக்கு என்ன பயன்?

கடந்த ஆட்சியில் நடந்தது தொடர்கிறது. அவ்வளவுதானே? அதற்கு இந்த அரசை மட்டும் எப்படிக் குறை சொல்ல முடியும்?

வன்முறை அதிகரித்து வருகிறது. அதுவும், ஆளும் கட்சியினரே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விசித்திரம். அதுவும் அதிநவீன வெடிகுண்டு சக்திகளைப் பயன்படுத்தித் தாக்கிக் கொள்கிறார்கள். தேர்தல் என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது. பயங்கரவாதிகள் நிறைந்திருக்கும் ஜம்மு காஷ்மீரில் வெற்றிகரமாகத் தேர்தல் நடத்த முடிந்த தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை நடத்த முடியாது என்று கடிதம் கொடுத்த வெட்கக்கேடு வேறு எங்காவது நடக்குமா? இந்த ஓராண்டு ஆட்சியில் மிகப்பெரிய சாதனை வன்முறைகள்தான். நேபாளத்திலிருந்து நெல்லூர் வரை என்றுதான் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போதோ நக்ஸல் இயக்கங்கள் உத்தமபாளையத்துக்கும் சின்னமனூருக்கும் வந்திருக்கிறது என்றால் என்னதான் அர்த்தம்? வீரப்பனை அடக்கிய விஜயகுமாரை அனுப்ப வேண்டிய அளவுக்கு தீவிரத் தன்மை இருக்கிறது என்று அரசே ஒப்புக் கொள்கிறது. பெருமைப்படும்படியாக இந்த ஓராண்டில் இந்த அரசு எந்தச் சாதனையும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

இந்த நிலைமைக்கு என்னதான் மாற்று?

வெற்றி பெறும் அணிக்கு வாக்களிப்பது என்கிற மனப்பான்மை மாற வேண்டும். இது என்ன குதிரைப் பந்தயமா, வெற்றி பெறும் குதிரையில் பணம் கட்ட? வெற்றி பெற வேண்டிய கட்சி எது என்று தீர்மானித்து அதை வெற்றி பெறச் செய்வதுதான் இந்த நிலைமைக்கு மாற்றாக இருக்கும். அப்படிச் செய்யாத வரையில், திமுகவும் அதிமுகவும்தான் தமிழகத்தின் தலையெழுத்தாக இருக்கும்.

தேமுதிகவின் வளர்ச்சி உங்களது கட்சியைப் பாதித்திருக்கிறதா?

எங்களைப் பாதித்திருப்பதைவிட திமுகவை எதிர்க்கிற மற்ற கட்சிகளைப் பாதித்திருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியும், தேமுதிகவும் இணைந்து செயல்பட்டால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக ஒரு பலமான அணி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதுதான் எனது கணிப்பு.

படங்கள்: கணேஷ்

கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.

நன்றி தினத்தந்தி
கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.வினர் குறைகளை கேட்டறிந்தனர்
விரும்பும் இடத்தில் வீடு கட்டி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை


கடலூர், ஆக.5-


கடலூர் மீனவ கிராமங்களில் பா.ஜ.க.வினர் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது தாங்கள் விரும்பும் இடத்திலேயே வீடுகட்டி தர வேண்டும் என அவர்களிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடற்கரை மாமன்றம்

பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பில் திருவெற்றிïர் முதல் திருச்செந்தூர் வரையுள்ள மீனவ கிராமங்களில் கடற்கரை மாமன்றம் என்ற தலைப்பில் மீனவர்களை நேரில் சந்தித்து குறைகேட்கும் நிகழ்ச்சி சென்னை திருவொற்றிïரில் கடந்த 30-ந் தேதி தொடங்கியது.

இதை தொடர்ந்து கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களுக்கு நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். அதன்படி நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் மாநில மீனவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் இணை அமைப்பாளர்கள் கண்ணன், சாந்தகுமார் ஆகியோர் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் மாவட்ட பொது செயலாளர் வரதராஜன், துணை தலைவர் செல்வகுமார், செயலாளர் முரளி, மாநில இளைஞரணி செயலாளர் குணசேகரன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் டேவிட், ஒன்றிய அமைப்பாளர் பரந்தாமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விரும்பும் இடத்தில்...

பின்னர் மீனவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-

கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறேன். அப்போது மீனவர்கள் விரும்பும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும், நிவாரண உதவியை உபகரணங்களாக வழங்குவதற்கு பதில் பணமாக தர வேண்டும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மீனவர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் வருகிற 9-ந் தேதி நிறைவடைகிறது. அப்போது மீனவர்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளையும், குறைகளையும் கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் நான் அறிக்கையாக கொடுப்பேன். பின்னர் இது தொடர்பாக வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சரையும், அதை தொடர்ந்து திருநாவுக்கரசு எம்.பி. தலைமையில் டெல்லியில் பிரதமரையும் சந்தித்து பேச இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து தாழங்குடா, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை ஆகிய கடலோர கிராமங்களுக்கும் சென்று மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

மதானி விடுதலை பாதிக்கப்பட்ட இந்துக்கள் கோபம்

மதானி விடுதலையானது கோவை குண்டுவெடிப்பில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதானி இது போல பொதுமக்கள் மீது இன்னும் அதிகமான தாக்குதல்களை நடத்தமாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்று கோபம் கொண்டிருக்கிறார்கள்.

Madhani's acquittal disappoint families
Sanjay Pinto
Thursday, August 2, 2007 (Coimbatore)


The families of victims who died in the serial blasts in coimbatore are angry. They say the court verdict on PDP leader Madhani is disappointing.

A mother's memory of an only son is fresh as ever, long after his death.

On that fateful day in Coimbatore, 15-year-old Ramesh had ventured out of his home in the Kempatti colony after he heard a loud noise.

But before he found out what had happened another blast killed him.

On every birth anniversary his mother has been buying new clothes for him and stacking them in her cupboard.

The 45-year-old housewife is yet to come to terms with the terrible reality.

Grief turns into anger
The court's acquittal of eight accused persons in the serial blasts case has turned grief into anger.

''They should have been given severe punishment. What guarantee is there that they will not repeat such crimes?,'' said Vijayalakshmi, Mother.

Not far away in the textile shop another life was cut short.

22-year-old Chitra was working in the shop when a bomb planted there exploded.

Chitra's mother went into a shell since that black day and her parents now struggle to make ends meet, with a meager monthly pension of 1500 rupees.

Her father says the judgment which found less than half of those accused guilty of criminal conspiracy is a big let down.

''How can we be satisfied? We have lost our only child. Now we have no one to comfort us,'' said Venkatraj, Father.

There were 56 others who were killed in the blasts and have left behind grieving families. Families that now expect suitable sentences for the guilty.

Thursday, August 02, 2007

இந்து முன்னணியினருக்கு திமுகவினர் அடி-உதை

பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 இந்து முன்னணியினருக்கு திமுகவினர் அடி-உதை!

ஆகஸ்ட் 02, 2007

கரூர்: கரூரில் மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு கருப்புக் கொடி காட்டிய இந்து முன்னணியைச் சேர்ந்த 3 பேரை, திமுக தொண்டர்கள் சுற்றி வளைத்து அடித்து, உதைத்தனர்.

ராமர் பாலத்தை இடிப்பதில் அமைச்சர் டி.ஆர்.பாலு பிடிவாதமாக இருப்பதாகவும், அவர் இன்று கரூருக்கு வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் கரூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராசா அறிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், நெடுஞ்சாலை ஆய்வுப் பணிக்காக கரூர் வருகை தர உள்ளார் டி.ஆர்.பாலு. ராமர் பாலத்தை இடித்தே தீருவேன் என்றும், ஆட்சி அதிகாரம் இருப்பதால் எதையும் செய்வேன் என்று கூறும் பாலுவுக்கு பாடம் புகட்ட மாபெரும் கறுப்பு கொடி பேராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந் நிலையில் இன்று மாலை கரூர் வந்தார் பாலு. கரூர்-வேலூர் இடையிலான நான்கு வழிச் சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர் கரூர் நோக்கி அவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலாயுதம்பாளையம், நாலு ரோடு சந்திப்பு என்ற இடத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மூன்றே மூன்று பேர் கருப்புக் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாபெரும் பேராட்டம் நடத்தப்படும் என ராசா கூறியிருந்தாலும் 3 பேர் மட்டுமே பேராட்டத்துக்கு வந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடி அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். மூன்று பேரும் தப்பி ஓடி விட முடியாத அளவுக்கு திமுக தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால் மூன்று பேருக்கும் சரியான அடி விழுந்தது.

பின்னர் திமுகவினரிடமிருந்து எப்படியோ தப்பி மூன்று பேரும் அங்கிருந்து ஓடினர்.

தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள் திமுகவினரும் கலைந்து ஓடி விட்டனர்.

நன்றி தட்ஸ்டமில்
--

வன்முறை மார்க்கத்தில் செல்லும் திமுகவினர் அமைதி மார்க்கத்தை கண்டு அன்பு வழி வர இறையை இறைஞ்சுவோம்.