Friday, February 04, 2011

தாயுடன் உறவு வைத்திருந்ததாக பாதிரியாரை மிரட்டிய வாலிபரிடம் நீதிமன்ற விசாரணை

தாயுடன் உறவு வைத்திருந்ததாக பாதிரியாரை மிரட்டிய வாலிபரிடம் நீதிமன்ற விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 04 பெப்ரவரி 2011, 10:39.31 மு.ப GMT ]
இத்தாலியின் வடபகுதியில் உள்ள பெல்லுனோ நகரில் போதை மருந்துக்கு அடிமையான 38 வயது வாலிபர் தன் தாயுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறி பாதிரியார் ஒருவரை மிரட்டினார்.
இவ்வாறு மிரட்டிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் கைது செய்யப்பட்டார். தன் தாய்க்கு பாதிரியார் எழுதிய உணர்ச்சிகரமான கடிதங்களை படித்து இவ்விடயம் பற்றி அறிந்ததாக தெரிகின்றது.

மேலும் இவ்விடயம் வெளிவராதிருக்க தனக்கு 700 யூரோ தருமாறு பாதிரியாரை மிரட்டிய போது, அவர் காவல்துறைக்கு புகார் அளித்தார். இதனால் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சட்ட நிபுணர்கள் இவ்வழக்கை அதிவிரைவாக முழக்கக் கேட்டுள்ளனர். பாதிரியாரின் கடிதங்களும், காவல்துறைக்கு தந்த குறியீட்டுடன் கூடிய பணம் ஆகியவை முக்கிய சாட்சியங்களாக வைக்கப்படும் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments: