Thursday, February 10, 2011

மீனவர் ஜெய‌க்குமா‌ர் குடும்பத்துக்கு சுஷ்மா நேரில் ஆறுதல்

மீனவர் ஜெய‌க்குமா‌ர் குடும்பத்துக்கு சுஷ்மா நேரில் ஆறுதல் செ‌ன்னை, வெள்ளி, 4 பிப்ரவரி 2011( 10:59 IST )
இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொடூரமாக கழு‌த்து நெ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர் ஜெய‌க்குமா‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு பா.ஜ.க மூ‌த்த தலைவரு‌ம், நாடாளும‌ன்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவருமான ‌சு‌ஷ்மா ‌சுவரா‌ஜ் நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌‌த்து ஆறுத‌ல் கூ‌றினா‌ர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‌இல‌ங்கை கட‌‌ற்படை‌யினரா‌ல் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

பலியான மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் வந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் உடன் வந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புஷ்பவனம் கிராமத்துக்கு செ‌ன்ற சுஷ்மா சுவராஜ், அங்கு ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவித் தொகை வழங்கினார்.

No comments: