Friday, February 18, 2011

காயத்ரி மந்திரம்: பெண்களுக்கு இலவச பயிற்சி

காயத்ரி மந்திரம்: பெண்களுக்கு இலவச பயிற்சி


சென்னை:சென்னை நகர பெண்களுக்கு, காயத்ரி மந்திரம் மற்றும் பூஜை குறித்த இலவச பயிற்சியை ஸ்ரீமடம் தருகிறது.கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடத்தை அடுத்த அரிகரபுரம் ஸ்ரீமடம் சார்பில், சென்னை நகர பெண்களுக்கு, காயத்ரி மந்திர ஜெபமுறைகள் மற்றும் பூஜை குறித்த, 10 நாள் இலவச பயிற்சி தரப்படுகிறது. இப்பயிற்சியை பெற விரும்புவோர் 15 பேர் குழுவை அமைக்க வேண்டும். இவர்களுக்கு அவரவர் பகுதியில் உள்ள கோவில்கள் அல்லது அவர்கள் குறிப்பிடும் இடத்தில், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வீதம் பயிற்சி தரப்படும். பயிற்சியின் முடிவில், காயத்ரிதேவி உருவம் பொறித்த விக்ரகம் மற்றும் காயத்ரி மந்திரங்கள் அடங்கிய "விஷ்வ காயத்ரி உபஷக் பரிஷத்' புத்தகமும் தரப்படும். இதற்கு கட்டணம் 125 ரூபாய். 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.ஸ்ரீ மடத்தின் நிர்வாகி சதீஷ் கூறும்போது, "காயத்ரி மூல மந்திரத்தை ஆண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், காயத்ரி ஜெபமந்திரத்தை பெண்களும் சொல்லலாம். இம்மந்திரத்தை முறையாக சொல்லவும், காயத்ரி தேவியை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய "சோடஷ உபசாரம்' எனும், வர்ணிப்பது, அலங்கரிப்பது, தியானிப்பது உள்ளிட்ட 16 பூஜை முறைகள் குறித்தும் இப்பயிற்சியில் கற்றுத் தரப்படும்' என்றார்.மேலும் விவரங்களை, 98404 03004, 98415 82869 எண்களில் பெறலாம்.

No comments: