Wednesday, February 23, 2011

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மருதேப்பள்ளி: கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் பலாத்கார புகார்

கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் பலாத்கார புகார்



பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் மீது மற்றொரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். பாதிரியார் தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார் (47). கிறிஸ்தவ பாதிரியாரான இவர் மீது, போச்சம்பள்ளி அடுத்துள்ள சின்னமுத்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (24) என்பவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த 15ம் தேதி பாதிரியார் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாதிரியார் குமார் மீது மற்றொரு பெண் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா(18). கடந்த 2005ம் ஆண்டு இவர்கள் வீட்டுக்கு வந்த குமார், ÔÔசங்கீதாவை திருமணம் செய்து தாருங்கள்ÕÕ என கேட்டுள்ளார். பெண்ணை விட மிகவும் வயதானவர் என்பதால் சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதையடுத்து, சங்கீதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றிய குமார், அவரை கடத்திச் சென்றுள்ளார். மருதேப்பள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். ÔÔஇந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்ÕÕ என சங்கீதாவை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தமயந்தி வழக்கில் பாதிரியார் குமார் கைது செய்யப்பட்டது தெரிந்ததும், அவர் மீது கந்திக்குப்பம் போலீசில் சங்கீதா புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில், சப்&இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

No comments: