Wednesday, February 23, 2011

அயனாவரத்தில் 2 பெண்களிடம் பணம், நகைகளைப் பறித்து, பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கிறிஸ்தவ பாதிரியார் செல்வராஜ் (53) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார்: பாதிரியார் கைது

First Published : 26 Jul 2010 01:29:15 AM IST
Last Updated :

சென்னை, ஜூலை 25: அயனாவரத்தில் 2 பெண்களிடம் பணம், நகைகளைப் பறித்து, பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கிறிஸ்தவ பாதிரியார் செல்வராஜ் (53) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விவரம்: அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது வீட்டின் மாடியில் ஜெபக்கூடம் என்ற பெயரில் திருச்சபை ஒன்றை நடத்தி வந்தாராம்.

அதே பகுதியில் வசிக்கும் சுகந்தி, மேரி மரியா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெபக்கூடத்தில் பணிக்கு சேர்ந்தனராம். கர்த்தர் தனது கனவில் வந்து பேசியதாகக் கூறி மேரியிடம் ரூ.3 லட்சம், 3 சவரன் நகைகளையும், சுகந்தியிடம் ரூ. 2 லட்சம், 5 சவரன் நகைகளையும் செல்வராஜ் வாங்கிக் கொண்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி பாலியல் ரீதியாக செல்வராஜ் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக மேரி மரியா, சுகந்தி ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அயனாவரம் போலீஸôர், பாதிரியார் செல்வராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

No comments: