Wednesday, February 23, 2011

குடும்ப நலன் வேண்டி பண்ணாரி அம்மாவை வேண்டி வணங்க வந்தேன்

பண்ணாரியம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு இன்று குடும்பத்துடன் தரிசனம்
February 4, 2011

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டுமல்ல.. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள். இந்த கோவிலில் அதிகாலை 5.30 மணியி லிருந்து 6.30 மணி வரை நடக்கும் அதிகாலை பூஜை மிகவும் விசேஷமானது.

இந்த பூஜையில் கலந்து கொண்டு பண்ணாரி அம்மனை வழிபட நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் குடும்பத்துடன் ஒரு காரில் வந்தார். நடிகர் வடிவேலுவை கோவில் பூசாரிகள் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அம்மன் முன் வடிவேலும் அவரது குடும்பத்தினரும் மன உருகி அம்மனை வழிபட்டு தரிசித்தனர். ஒரு மணி நேரம் நடந்த அதிகாலை பூஜையில் வடிவேலு கலந்து கொண்டார். அம்மனை தரிசித்து விட்டு வெளியே வந்த நடிவர் வடிவேலுவை மற்ற பக்தர்களும் ரசிகர்களும் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

அவரை பார்த்து உற்சாக மிகுதியால் கையசைத்தனர். பலர் அவருடன் கைகுலுக்கினர். வடிவேலும் ரசிகர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

என்ன திடீர்னு பண்ணாரி கோவிலுக்கு வந்திருக்கீங்க…? என்று பக்தர்களும் ரசிகர்களும் அவரிடம் கேட்டபோது, ““குடும்ப நலன் வேண்டி பண்ணாரி அம்மாவை வேண்டி வணங்க வந்தேன்”” என்று கூறினார். பிறகு அவர் குடும்பத்தினருடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

No comments: