Sunday, February 27, 2011

இந்து அமைப்புடன் தொடர்புடைய 109 பேர் மலேசியாவில் கைது

இந்து அமைப்புடன் தொடர்புடைய 109 பேர் மலேசியாவில் கைது

First Published : 27 Feb 2011 03:27:31 PM IST


கோலாலம்பூர், பிப்.27: தடை செய்யப்பட்ட இந்து அமைப்புடன் தொடர்புடைய ஒரு இயக்கத்தைச் சேர்ந்த 109 உறுப்பினர்களை மலேசிய போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
உயர்கல்வி பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டவிரோதமாக பேரணி நடத்த முயன்ற குற்றத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஹிண்ட்ராஃபின் கிளை அமைப்பான இந்து உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணி நடத்த வேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தோம். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவரும், துணை கமிஷனருமான ஜுல்கிஃப்லி அப்துல்லா தெரிவித்தார்

No comments: