Monday, February 21, 2011

பாதிரிகளோடு நெருங்கிப் பழகுகிறீர்களா? ஜாக்கிரதை!

பாதிரிகளோடு நெருங்கிப் பழகுகிறீர்களா? ஜாக்கிரதை!

பாதிரியார் கொலை: ஒருவர் கைது
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2011,23:43 IST
கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய


திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறைமாவட்டத்தில் பாதிரியாராக இருந்தவர் அமலன்(54). பாளை., குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் உள்ள தேம்பாவணி தோட்டத்தில் தங்கியிருந்த அவர், கிறிஸ்தவர்களுக்கான "குடும்ப நல்வாழ்வு ஆலோசகராக' செயல்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கை, கால்கள் கட்டிலில் கட்டப்பட்டிருந்தன. பாளை., போலீசார் விசாரித்தனர். அவரது மொபைல் போனில் பதிவாகியிருந்த எண்களை சோதித்தபோது, பாளையங்கோட்டை கீழநத்தத்தை சேர்ந்த பொன்ராஜ்(23) என்பவர் இவரது அறைக்கு அடிக்கடி வந்துசென்றது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பொன்ராஜ், பாதிரியாருடன் "நெருங்கி' பழகுவாராம். அவரது அறையில் ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போயிருந்தது. அதை தரும்படி பாதிரியார் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

No comments: