Tuesday, February 22, 2011

ஈழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்து இளைஞர் பேரவை நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்து இளைஞர் பேரவை நிவாரணம்

Tuesday, 22 February 2011 10:19

களுவாஞ்சிக்குடி நிருபர் : வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று,காந்திபுர கிராம மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.யோகேஸ்வரனால் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



இதன்போது சரவணையடியூற்று கிராமத்தில் 161 குடும்பங்களைச் சேர்ந்த 598 பேருக்கும் காந்திபுர கிராமத்தில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 849 பேருக்குமான உலர்உணவு பொருட்களை பேரவையின் தலைவர் வழங்கி வைத்தார்.போரதீவுபற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராம சேவையாளர்கள் கிராம தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



லண்டனிலுள்ள ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், ஸ்ரீ கணபதி ஆலயம், ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்,ஸ்ரீ முருகன் ஆலயம்,சிவன் ஆலயம், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



Last Updated ( Tuesday, 22 February 2011 10:59 )

No comments: