Monday, April 28, 2008

ராமர் பாலத்தை காக்க கோரி கடலில் பெண்கள் தீப வழிபாடு

ராமர் பாலத்தை காக்க கோரி கடலில் பெண்கள் தீப வழிபாடு
திங்கள்கிழமை, ஏப்ரல் 28, 2008



ராமேஸ்வரம்: ராமர் பாலத்தை காப்பாற்றக் வேண்டி பெண்கள் கடலில் தீபமேற்றி வழிபட்டனர்.

ராமர் பலம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று பேரணி மற்றும் வழிபாடு நடந்தது. ராமேஸ்வரம் கோசுவாமி மடத்திலிருந்து அக்கினி தீர்த்த கடற்கரைக்கு ஊர்வலம் சென்றனர். இயக்க செயற்குழு உறுப்பினர் தில்லை பாக்கியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டி பெண்கள் கடலில் தீபம் ஏற்றி சிறப்பு பிராத்தனை செய்தனர். தீப விளக்குகளை கடலில் மிதக்கவிட்டனர்.

பின்பு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்ற அவ்வியக்கத்தினர் அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினர்.

2 comments:

Unknown said...

ராமர் பாலம் ஒரு பொய். னம்பாதே

வைதீக சைவம் said...

ஏண்டா ஜயசங்கர் ஜகநாதா, சுவாமி பெயரை வைத்துக்கொண்டு,முட்டாள் தனமாக பிதற்றுகிறாயே ?? மூடனே,நீ சொல்வதுதான் பொய்