Saturday, April 26, 2008

விலைவாசி உயர்வைக் கண்டித்து மே 2-ல் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் : பாஜக அழைப்பு

மே 2-ல் தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் : பாஜக அழைப்பு
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 ( 16:49 IST )

விலைவாசி உயர்வைக் கண்டித்து மே 2-ம் தேதியன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்த தமிழக பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே அவதிப்பட வேண்டியுள்ளது. எனவே விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.முதல் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்வானி தலைமையில் மனிதச் சங்கிலி நடத்தி போராட்டத்தை துவக்கியுள்ளார்கள்.

டெல்லியில் வெங்காயம் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறையை மட்டுமே காரணம் காட்டி பாரதிய ஜனதா அரசை, காங்கிரஸ் வீழ்த்தியது நினைவிருக்கும். இன்று எல்லா பொருட்களும் விலை ஏறியுள்ள நிலையில் இந்த அரசை மாற்றியே ஆகவேண்டும்.

'விலைவாசியை குறைத்துக் காட்டு இல்லையேல் ஆட்சியிலிருந்து நடையை கட்டு' என்கின்ற கோஷத்துடன் மே மாதம் 2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திட பாரதிய ஜனதா அறை கூவல் விடுக்கிறது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

அன்றைய தினம் மாலை முக்கிய நகரங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் இல.கணேசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: