Wednesday, October 24, 2007

கோவில்பட்டி அம்பேத்கர் சிலை அருகே காரில் வெடிகுண்டுகள் கடத்திய தீவிரவாதி ஹைதர் அலி கோர்ட்டில் ஆஜர்


காரில் வெடிகுண்டுகள் கடத்திய வழக்கு தீவிரவாதி ஹைதர் அலி கோர்ட்டில் ஆஜர்




துõத்துக்குடி :டிரைவரை கட்டிப்போட்டு காரில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கடத்திய வழக்கில், தீவிரவாதி ஹைதர் அலி நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த கார் டிரைவர் மதுசூதனன். கடந்த 92ம் ஆண்டு மதுசூதனன் காரை, அல்.உம்மா தீவிரவாதிகள் இமாம் அலி, ஹைதர் அலி, அப்துல் முதலீப், அப்துல் காதர், செனட் முகமது, ஜாகீர் உசேன் ஆகியோர் வாடகைக்கு அமர்த்தினர். மதுசூதனனை காரின் பின்பகுதியில் கயிற்றால் கட்டிப்போட்டு தீவிரவாதிகளில் ஒருவர் காரை ஓட்டினார். கோவில்பட்டி அம்பேத்கர் சிலை அருகே கார் சென்ற போது, ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதையடுத்து காரிலிருந்த தீவிரவாதிகள் தப்பியோடினர். உயிர்தப்பிய டிரைவர் மதுசூதனன், கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். காரிலிருந்து வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். வழக்கு கோவில்பட்டி சப்.கோர்ட்டில் நடந்து வருகிறது. இமாம் அலி பெங்களூருவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.ஹைதர் அலி ஆஜர்: மதுரை மத்திய சிறையிலுள்ள தீவிரவாதி ஹைதர் அலி, நேற்று கோவில்பட்டி சப்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நவ.,13ம் தேதிக்கு நீதிபதி மஞ்சுளா ஒத்திவைத்தார்.

No comments: