Tuesday, October 16, 2007

திருநெல்வேலி: கிறிஸ்தவ தேர்தலில் மோதல்: 2 பாதிரியார்கள் மீது வழக்கு

கிறிஸ்தவ தேர்தலில் மோதல்: 2 பாதிரியார்கள் மீது வழக்கு
திருநெல்வேலி: தென்னிந்தியத் திருச்சபை தேர்தல் மோதலில் 2 பாதிரியார்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.,) நெல்லை திருமண்டலத்தில் லே செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடக்கிறது. திருமண்டல உறுப்பினர்கள் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் வரும் டிசம்பரில் லே செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய லே செயலாளர் தினகர் ஒரு அணியாகவும், வேதநாயகம் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் தொடர்பான மோதல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நெல்லை, கரிவந்தநல்லலூர், சுப்புலாபுரத்தில் நடந்த தேர்தலில் வேதநாயகம் அணியை சேர்ந்த அருளானந்தத்தை பாதிரியார்கள் கிங்ஸ்லின் ஜான், பர்ணபாஸ் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அருளானந்தம் காயமடைந்தார். எதிர் தாக்குதலில் பவுல் என்பவர் காயமடைந்தார். இரு தரப்பு புகார் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: