Monday, April 09, 2007

பங்களாதேஷில் இந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி

பங்களாதேஷில் இந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த நாட்டின் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி எழுதுகிறார்.

வருத்தம் தரவைக்கும் செய்திகள்.

நன்றி ஆசியன் டிரிப்யூன்

Violation of Hindu Human Rights in Bangladesh
Mon, 2007-04-09 06:16
By Rabindranath Trivedi

Since Hindus in East Bengal turned Bangladesh participated in all nationalistic movements right from the beginning of our glorious Language Movement in 1948, 1952 and 1966 to the heroic War of Liberation in 1971 along with their co-linguistic brothers and sisters belonging to the major religious group of Bangladesh their hopes and aspirations have naturally become very high.

The so-called Bangladeshi nationalism in Bangladesh's politics is a revival of two-nation theory. Here " Bangladeshi " means the Muslim citizens of the land, others like Hindu, Buddhists, Christians and tribal origins are aligning citizens, they would be absorbed in the majority community by conversion or make them compelled to leave Bangladesh.

This has created a great divide in the society of Bangladesh. In Bangladesh, being a Hindu means being a victim of oppression, torture and discrimination. The educated Hindus, who could play a leadership role in the community, left the country. The poor, who lacked leadership qualities, stayed back. Eminent personalities of the minorities who stayed on in Bangladesh live in the cities, so there are none to look after them in times of distress.

What happened in the early fifties happened again in Bangladesh in 1992 and 2001. As a result the silent migration of Hindus from this country could not be stopped. The state failed to provide security to the minorities despite equal rights guaranteed to them in the constitution. The self-contradictory "State Religion Provision" and "Vested Property Act" compromised making the State pledge meaningless.

The condition of the minorities in professional life can be stated as: There is no Hindu Minister at the cabinet level since August 1975, total public and private services including Army, police, and cadre services less than 3%. (Resolution Ref: UN Documents, A/55/280/Add2)

மேலும் படிக்க...

8 comments:

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்
அன்பு சகோதரர் எழில் அவர்களே!
வங்க தேசத்து இந்து சிறுபான்மை மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய துறைகளான இராணுவம், காவல்துறை போன்றவற்றிலும் புறக்கணிக்கப்படுவதை கண்டு நானும் உங்களுடன் வேதனைபடுகிறேன். இதை வெளிவுலகுக்கு மனித உரிமை மீறல்கள் என்ற தலையங்கமிட்டு பதிவு இட்டது குறித்து உங்களை மனதார பாராட்டுகிறேன். தாங்கள் குறிப்பிடும் தகவல் உண்மையானதாக இருந்தால், சிறுபான்மை மக்களுக்கு உரிய போதிய பாதுகாப்புகளும், பொறும்பான்மை மக்களுக்கு நிகராக முன்னேற முடியாத சூழ்நிலையையும் வங்க தேசத்தின் அரசாங்கள் தொடர்ச்சியாக செய்து வருவதை நான் கண்டிக்கிறேன்.

நீங்கள் நியாயத்தின் பக்கம் இருப்பீர்கள் என்னும் நம்பிக்கையோடு, உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். சச்சார் கமிஷன் முஸ்லிம்கள் சமூக பொருளாதாரத்தில், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகத் துறையில் மிக மிக மேசமான சூழ்நிலையில் இருப்பதாக தனது வேதனையை வெளிபடுத்தி உள்ளதே? எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என்று தலையங்கம் இட்டு ஒரு பதிவை வெளியிட வேண்டும். சச்சார் அறிக்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனால் தரப்பட்ட அறிக்கை. தாங்கள் இங்கு பதிவு செய்துள்ளது ஒரு ஊடகச் செய்தியே. எனவே தாங்கள் பதிவு செய்துள்ள செய்தியை விடவும், முஸ்லிம்கள் இந்தியாவில் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகவும் ஆதாரப்பூர்வமான தகவலாகும். எனவே அடுத்த தங்களுடைய பதிவு "இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி கூறும் சச்சார் அறிக்கை" என்ற தலைப்பில் வரவேண்டும்.

"இறை நம்பிக்கையுடையோரே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இறைவனுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த சமூகத்தார் மீதம் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். இறைவனுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக இறைவன் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 5, வசனம் 8)

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

Anonymous said...

வெறுப்பை வளர்த்துவிட்டு, அப்புறம் நீதி நியாயம் என்று பேசும் பம்மாத்து... ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நிலத்தில்கூட சிறுபான்மையினர் உணர்வுகள் மருந்துக்கும் மதிக்கப்படுவதில்லை என்பதை வைத்து பார்த்தால், இது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று தெரியும்

சச்சார் கமிஷன் ரிப்போர்ட் என்பது காங்கிரஸ் அரசு உத்தர பிரதேச முஸ்லீம்களது ஓட்டுக்களை அள்ள போட்ட கேவலமான திட்டம். இந்துக்கள் ஜாதிவாரியாக ஓட்டுப்போடுகிறார்கள், முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் மதவாரியாக ஓட்டுப்போடுகிறார்கள் என்பதுதான் இத்தனை கூத்துக்கும் காரணம்..
சச்சார் ரிப்போர்ட் வரிக்கு வரி தப்பு என்று சுதந்திரமாக செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன

ஐபிஎன் நியூஸ் செய்தி
http://www.ibnlive.com/news/new-survey-busts-sachar-panel-report/37856-3.html

சச்சார் ரிப்போர்ட் ஒரு ஃப்ராடு..

In terms of expenditure, at Rs 40,327 the average Muslim household, in fact, spends slightly more than a Hindu household, which spends Rs 40,009 a year. The spending of a Sikh household is again the highest at Rs 60,475 while the Christians stand second at Rs 45,291.

இந்தியாவிலேயே மிகவும் குறைவாக செலவு செய்யும் திறனுள்ளவர்கள் இந்துக்கள்தான். மிகப்பெரிய பணக்காரர்கள் சீக்கியர்களும் கிறிஸ்துவர்களும்..

Anonymous said...

If all muslim gives birth to too many children their financial level goes down. SO if restrict to one or 2 then the family condition will be good.

If you spend whole day (5 times a day) pray god and Whole night to production of children then the family become begger....

SO they have depend on Madarasa....

So why they need reservation (to give birth to another few crores ????)

எழில் said...

சகோதரர் நைனா,

உங்களது கேள்வி என்னை நோக்கி எழுப்ப நியாயமே இல்லை.

முஸ்லீம்களுக்கு மற்ற மக்களுக்கு இல்லாத சலுகைகளை நிறைய வாரி வழங்கவேண்டும் என்று நினைக்கும் இந்துக்களின் எண்ணிக்கை, முஸ்லீம்களும் இந்துக்களும் இந்த நாட்டில் சமமாக நடத்தப்படவேண்டும் என்று நினைக்கும் இந்துக்களின் எண்ணிக்கையை விட மிக மிக அதிகம்!

பாஜகவிற்கு இந்தியாவின் வாக்கு எண்ணிக்கை சதவீதம் வெறும் 24 சதவீதம்தான். மற்ற எல்லா கட்சியினரும் அந்த கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களும் முஸ்லீம்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இப்படிப்பட்ட நிலை இந்தியாவில் இருக்கும்போது, பங்களாதேஷில் முஸ்லீம்களால் நாளோரு கொலை பொழுதொரு கற்பழிப்பாக திகிலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்களை ஒப்பிடுவது உங்களுக்கே அடுக்குமா?

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் எழில் அவர்களே!
இன்னும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இந்து சகோதர, சகோதரிகள் சிறுபான்மை மக்களுடன் மதநல்லிணக்கத்தையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், பதவி வெறியால் மத துவேசத்தை பரப்பி, மதவெறியூட்டி இந்து, முஸ்லிம்கள் மக்களை பிரித்து அதன் மூலம் ஆட்சி கட்டிலில் அமர்ந்து சுகம் காண நினைக்கும் பாஸிச பாஜகவின் பகல் கனவு இன்று வரை பலிக்கவில்லை என்பதே அதற்கு சாட்சி. ஆனால் இந்து, முஸ்லிம் மக்களிடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட சகோதர வாஞ்சை உணர்வுகள், இந்தியாவின் சாபக்கேடான பாஜக எப்போது பாபரி மசூதிக்காக ரத்த யாத்திரை நடத்தியதோ அன்றிலிந்தே கொஞ்சம், கொஞ்சமாக மங்கத் தொடங்கி விட்டது என்பது கடந்த காலங்களில் நடந்த மதக் கலவரங்களிலிருந்து நமக்கு புலனாகும் உண்மையாகும். பாஸிச வெறியர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மக்கள் கொஞ்சம் கொஞசமாக பலியாகி வருகிறார்கள் என்பதன் சாட்சியே பாஸிச பாஜக அமைத்த கூட்டணி ஆட்சியுமாகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும், மக்கள் சகோதர வாஞ்சையுடன் வாழ வேண்டும் என்பது நல்லிணக்கத்தை விரும்பும் நல்லோர்களின் கவலை. ஆனால், இதை குழி தோண்டி புதைத்திட, மக்கள் மனங்களில் மத வெறுப்பையும், குரோத எண்ணங்களையும் வளர்த்திட சங்பரிவார கும்பல்கள் இப்போது வலைபதிவிலும் முயன்று வருகிறார்கள் என்பதனையும் நாம் கண்டு வருகிறோம்.
//முஸ்லீம்களுக்கு மற்ற மக்களுக்கு இல்லாத சலுகைகளை நிறைய வாரி வழங்கவேண்டும் என்று நினைக்கும் இந்துக்களின் எண்ணிக்கை, முஸ்லீம்களும் இந்துக்களும் இந்த நாட்டில் சமமாக நடத்தப்படவேண்டும் என்று நினைக்கும் இந்துக்களின் எண்ணிக்கையை விட மிக மிக அதிகம்!//
மற்ற மக்களுக்கு இல்லாத என்னென்ன சலுகைகள் சுதந்திரமடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு என்று வழங்கப்பட்டுள்ளது, பட்டியலிடுவீர்களா? சகோதரர் எழில் அவர்களே! முஸ்லிம்கள் தங்களது மார்க்க வழிபாடுகளை தடையின்றி செய்வதற்கு, மற்ற எல்லா சமயத்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதை போல வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதே தவிர்த்து, சமூக, கல்வி, அரசியல், நிர்வாகம், பொருளாதர முன்னேற்றத்தில் முஸ்லிம்கள் மற்ற மக்களுக்கு சமமாக வளர என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?
// முஸ்லீம்களும் இந்துக்களும் இந்த நாட்டில் சமமாக நடத்தப்படவேண்டும் என்று நினைக்கும் இந்துக்களின்//
நீங்கள் குறிப்பிட்டுள்ள "சமமாக நடத்தப்பட வேண்டும்" என்னும் நயவஞ்சக கோரிக்கை, சமூக, கல்வி, அரசியல் பொருளாதர முன்னேற்றத்தில் முஸ்லிம்களும் மற்ற சமுதயாத்திற்கு இணையாக வளர்வதற்கான சமத்துவ எண்ணமா? இல்லையே. முஸ்லிம்கள் தாங்கள் திருமணம், விவாகரத்து, சொத்து பங்கீடு செய்வதில் ஷரீயத்தின் பிரகாரம் செய்ய இந்தியல் அரசியல் சாசனத்தில் வழிவகை காணப்பட்டுள்ளது. இந்த விஷேச சலுகையால் முஸ்லிமல்லாத சமூகத்தினருக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டுவிட்டதா? அல்லது இந்த விஷேச சலுகையை நீக்குவதால் முஸ்லிமல்லாத சமூகத்தினருக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டு விடுமா? கூறுங்களேன்.
இன்றைய முஸ்லிம்கள் நிலை, சுதந்திர இந்தியாவில் இந்து சமுதாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களின் நிலை எவ்வாறு இருந்ததோ, அந்த நிலையை விட மோசமான நிலையில் உள்ளது என்று சச்சார் கமிஷன் உண்மையை வெளிபடுத்தியவுடன், இஸ்லாத்தின் மீது குரோத எண்ணமும் கயமைவுள்ளமும் படைத்தவர்கள், மத ரீதியாக சமூக, கல்வி, அரசியல் மற்றும் பொருளாதார ஒதுக்கீடு வழங்கப்பட கூடாது என்று கொக்கரிக்கிறார்கள்.
மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாடி, பகைமை உணர்வை வளர்த்து மக்களின் நிம்மதியான வாழ்க்கையில் சூனியத்தையும், அவலத்தையும் ஏற்படுத்திய, ஏற்படுத்தி கொண்டிருக்கிற பாஸிச பாஜக கூறுகிறது, முஸ்லிம்களுக்கு சமூக, கல்வி, அரசியல், பொருளாதார சலுகைகள் வழங்கினால் மக்களை மதத்தால் பிரித்தாள்வதாக ஆகிவிடும் என்று கூறுவது மிக் பெரிய வேடிக்கையாகும்.
உத்திர பிரதேசத்தில் எத்தனை உயிர்களை காவு கொடுத்தாவது பதவியில் ஏறிவிட துடிக்கும் பயங்கரவாத பாஸிச பாஜக, முஸ்லிம்களின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி, மதத்தால் மக்களை பிளவுபடுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகக் கூடிய நாசகார செயலுக்கு விதை விதைக்கும் முகமாக ஒரு குறுந்தகட்டை வெளியிட, அது குறித்து மத நல்லிணக்கத்தை விரும்பும் மாந்தர்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் எழுப்ப, தேர்தல் கமிஷன், பாஜகவின் கட்சி அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று வினா எழுப்பியது, பாஸிச பாஜக தான் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்தாண்டு, கலவரத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்கிறது என்பதற்கான தெளிவான ஆதாரம் இல்லையா? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது பிரிவினை பற்றி பேசுவதற்கு?
சாதி வெறியால் சதி செய்து, தனது சொந்த சமூகத்தில் உள்ள மக்களையே சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரத்தில் மிகப் பெரும் பின்டைவில் வாழச் செய்தததற்கு, எப்படி தீர்வை தேடினோம்? சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்கியதால் தானே, அந்த மக்களை முன்னேற்றி கொண்டு வருகிறோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்படும், சமூக, கல்வி, அரசியல், பொருளாதார சலுகைகள் சாதி துவேஷத்தை வளர்க்கும் என்று யாரும் சொல்ல முடியாது. அது போல தானே முஸ்லிம்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார சலுகைகள் வழங்கினாலும் மத துவேஷத்தை வளர்க்கும் என்று சொல்ல முடியாது? ஆனால் முஸ்லிம்களுக்கு வழங்கினால் மட்டும் துவேஷத்தை வளர்க்கும் என்று பாஸிச பாஜகாவும் சங்பரிவார கும்பல்களும் கொக்கரிப்பது ஏன்? இந்த கொக்கரிப்பு அநீதமாக முஸ்லிம்களின் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வையல்லவா காட்டுகிறது.

சகோதரர் ராஜ் கூறுகிறார், அரசாங்கத்தின் உதவிவுடன் பலமாதங்களாக பல்வேறு துறைகளிலும் சுதந்திரமாக புள்ளி விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார, அரசியல், நிர்வாத்துறையில் எவ்வளவு கீழ் நிலையில் வாழுகின்றார்கள் என்று படம் பிடித்து காட்டிய சச்சார் கமிஷனின் அறிக்கை போலியானதாம். ஆனால், சச்சார் கமிஷன் அறிக்கை வெளிவந்த சில வாரங்களிளேயே புள்ளி விபரத்தை தரும் ஐபிஎன் நியூஸ் செய்தி உண்மையானதாம். பாருங்கள் முஸ்லிம்களின் மீது கொண்டிருக்கும் வெறுப்புணர்வின் வெளிப்பாடுகளை!
நோய்வாய்பட்டிருக்கும் போது மருந்து சாப்பிட கசப்பாக தான் இருக்கும். அதையே கஷ்டப்பட்டு சாப்பிட்டால் நோய் நீங்கி நிம்மதியான வாழ்வை பெறலாம். அது போல, பொய்யால் மூழ்கி கிடக்கும் போது உண்மைகளும் கசப்பாகவே தெரியும். அந்த உண்மையை கஷ்டப்பட்டு ஏற்று கொண்டு விட்டால் நாமும் வாழ்வில் வளமும், ஏற்றம் பெற்று விடுவோம்.

"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" திருக்குர்ஆன் அத்தியாயம் 2,வசனம் 42

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

Anonymous said...

நைனா, ஆனால் பெரும்பான்மையான முஸ்லீம்கள் மத வெறியே கொண்டிருக்கிறார்கள் .. இல்லையா?

Shankaran er said...
This comment has been removed by the author.
Shankaran er said...
This comment has been removed by the author.