Friday, September 26, 2008

நாமக்கல் சர்ச் மீது தாக்குதல்

நாமக்கல் சர்ச் மீது தாக்குதல்


Tuesday, 16 September , 2008, 12:40

பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுகள் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது செப்-14 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜைக் காயப்படுத்தியதோடு அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். தேவாலய கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.

இதே போல் நரசேய திருச்சபைக்குச் சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச்செல்வனைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

இது குறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். அங்கு கலவரம் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

priyamudanprabu said...

POTHANUR IS MY HOME DOWN , AM ALSO HEAR THAT NEWS
IT BAD...