Tuesday, September 16, 2008

கிறிஸ்துவ பயங்கரவாதிகள் அட்டூழியம்: ஒரிசாவில் இந்து கோவில் தாக்குதல்;அனுமார் சிலை தகர்ப்பு

ஒரிசாவில் இந்து கோவில் தாக்குதல்;அனுமார் சிலை தகர்ப்பு
திகதி : Tuesday, 16 Sep 2008, [Sindhu]

ஒரிசாவில் மர்ம கும்பல் இந்து கோவிலில் புகுந்து தாக்கியது.இதில் அனுமார் சிலை உடைக்கப்பட்டது.ஒரிசாவில் இந்து சாமியார் ஒருவர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். ஆலயங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இப்போது கலவரம் அடங்கி அமைதி திரும்பி வருகிறது. இந்த நிலையில் அங்கு இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்ட்டது.

அங்குள்ள சுந்தர்கார் மாவட்டம் சாக்பால் என்ற இடத்தில் புகழ்பெற்ற அனுமார் கோவில் உள்ளது.

இங்கு நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று புகுந்தது கோவில் கதவை தீவைத்து எரித்து உடைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

அங்கிருந்த அனுமார் சிலையை தகர்த்தனர். பின்னர் கோவிலில் உள் வளாகத்துக்குள் தீவைத்து எரித்தனர்.

காலையில் இதுபற்றி தகவல் தெரியவந்தது. இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.இதனால் சக்பால், பாலிசங்கர், பொரு படா ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது கலவரம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

No comments: