Saturday, September 27, 2008

தாராபுரத்திலும் சர்ச் மீது தாக்குதல் - இயேசு சிலை உடைப்பு

தாராபுரத்திலும் சர்ச் மீது தாக்குதல் - இயேசு சிலை உடைப்பு
சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2008



தாராபுரம்: ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் சர்ச் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் குழந்தை ஏசு சிலை உடைந்தது.

ஈரோடு மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ளது புனித அலோசியஸ் சர்ச். இதன் நுழைவு வாயிலில் குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் நுழைவு வாயிலில் உள்ள குழந்தை ஏசு, மற்றும் மைக்கேல் அதிதூதர் சிலைகளை தாக்கியதில் இந்த சிலைகள் உடைந்தன. கண்ணாடிக் கூண்டுகள் நொறுங்கியன. மேலும் சர்ச் மீது கற்களையும் வீசியுள்ளனர்.

காலையில் சர்ச்சுக்கு பிராத்தனை செய்ய வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பங்கு தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சர்ச்க்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட குழந்தை ஏசு சிலையை பார்வையிட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 28 ம் தேதி அன்று கிறிஸ்வது சபைகள், அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

பரமத்தி வேலூர், மதுரை, நாகர்கோயிலை அடுத்து தாராபுரத்திலும் சர்ச் மீது கற்களை வீசி மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: