Saturday, September 27, 2008

5 குழந்தைகளை வெற்றிகரமாக இஸ்லாமிய போராளிகள் கொன்றனர்

ஈராக் தாக்குதல்:5 குழந்தைகள் பலி
Tuesday, 23 September, 2008 10:49 AM

.
மோசுல், செப். 23: ஈராக்கில் உள்ள மோசுல் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சாலையோரம் விளையாடி கொண்டிருந்த 5 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
.
நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மோசுல் காவல் துறை உயரதிகாரி முகமது சாதிக் தெரிவித்துள்ளார். 5 குழந்தைகளின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்த மூன்று பேரில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், அவர்கள் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே பாக்குபா என்ற இடத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து ஈராக் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 வயது சிறுமி கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

No comments: