Friday, July 18, 2008

வீரமாமுனிவர் என்ற பெஸ்கியின் தலித் விரோதம் அம்பலம்

நன்றி தினமணி

பேதக மறுத்தல்

அர்ஜுன் சம்பத்தின் கட்டுரையின் நோக்கம் வீரமா முனிவரின் தமிழ்ப்பணிகளை இருட்டடிப்பு செய்வதல்ல.
கட்டுரையின் இலக்கு இங்கு வாழ்ந்த வள்ளுவரையும் இங்கு வராத தாமûஸயும் வரலாறு மூலம் இணைக்கும் பெரும் பிழைக்கு ஆதாரத்துடன் எதிர்ப்புத் தெரிவித்தலே.
எ,ஒ என்ற உயிர் எழுத்துகளிலும் அந்த உயிர் எழுத்து கள் ஏறிய உயிர்மெய் எழுத்துகளிலும் (கெ-கே,கொ-கோ போன்று) குறில், நெடிலை வேறு படுத்திக் காட்டும் வடிவை முதலில் ஏற்படுத்தியவர் வீரமாமுனிவர் அல்ல.
அவருக்கு முன்பே, 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி யில் ராணி மங்கம்மாள் காலத்தில் மதுரை மீனாட்சி அம் மன் கோயிலில் வரையப்பட்ட ஓவியத்துக்கான விளக்க எழுத்துகளில் இக்குறில் நெடில் வேறுபாடு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதை தொல்லியல் அறிஞர் நாக சாமி தனது ஒரு கட்டுரையில் ஆவணப்படுத்தியுள்ளார்.
அடுத்து, வீரமாமுனிவரின் காலத்துக்கு முன்பு 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பர ரேவண சித்தரால் அகர வரிசையில் அகராதி நிகண்டு உருவாக்கப்பட்டுவிட்டது.
உ.வே.சா. நூலகம் அதை வெளியிட்டுள்ளது.
வரலாறு வீரமாமுனிவரின் தமிழ் முகத்தை மட்டு மல்ல...அவரது தலித் விரோத முகத்தையும், தமிழ் கிறிஸ் வத விரோத முகத்தையும் சேர்த்துக் காட்டுகிறதே...
தலித் மகளிர் தொடர்பாக அவர் எழுதியுள்ள அவதூ றான மொழியைப் பார்க்க அவரது "பேதக மறுத்தல்' என்ற நூலைப் பார்க்கவும்.
எஸ்.ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை.

4 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி
இந்த புத்தகத்தை ஆராய தூண்டியுள்ளீர்கள்

எழில் said...

கருத்துக்கு நன்றி

Anonymous said...

நன்றி

Anonymous said...

பேதக மறுத்தல் புத்தகம் எங்கே கிடைக்கும்?