Sunday, August 26, 2007

திருநாவுக்கரசர்-பாஜகவினர் உண்ணாவிரதம்

எம்.பி. தொகுதி ரத்து புதுக்கோட்டையில்
திருநாவுக்கரசர்-பாஜகவினர் உண்ணாவிரதம்

ஆகஸ்ட் 25, 2007

புதுக்கோட்டை: புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை ரத்து செய்த தேரத்ல் ஆணையத்தக் கண்டித்து இன்று முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் தலைமையில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தை மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். திருநாவுக்கரசர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இல.கணேசன் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரும் குழப்பத்ைத ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை மீண்டும் கொண்டு வர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கணேசன்.

No comments: