Saturday, June 23, 2007

திசையன்விளையில் மாணவியை கடத்திய கிறிஸ்துவ போதகர் கைது

5. மாணவி கடத்தல் : மத போதகர் கைது

திசையன்விளை: திசையன்விளையில் பள்ளி மாணவியை கடத்திய மத போதகரை போலீசார் கைது செய்தனர்.
கஸ்துõரிரங்கபுரம் ஆமையடியைச் சேர்ந்தவர் மனோகரன்; இவரது மகள் மேனகா (16); கஸ்துõரிரங்கபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரை, கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. ஆமையடியில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றும் முத்துக்குமார் (33) என்பவர், மேனகாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து மனோகரன், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., அதிசயராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் மத போதகரை தேடி வந்தார். மத போதகர் முத்துக்குமாரும், மாணவி மேனகாவும் பல இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு ஊர் திரும்பினர். அவர்களை, போலீசார் கைது செய்தனர். மேனகாவை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.

No comments: