Sunday, March 23, 2008

பேர்ணாம்பட்டு அருகே விநாயகர் கோவிலில் சுவாமி சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பதட்டம்

ஸ்வாமி சிலை உடைப்பால் பேர்ணாம்பட்டில் பதட்டம்

வேலுõர்: பேர்ணாம்பட்டு அருகே விநாயகர் கோவிலில் சுவாமி சிலை உடைக்கப்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வேலுõர் அடுத்த பேர்ணாம்பட்டு அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. ஹிந்து அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், 15 ஆண்டுக்கு முன் நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல், நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், ராகு, கேது, புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஸ்வாமி சிலைகளின் தலைப்பகுதியை மட்டும் உடைத்து விட்டு சென்றனர். சனி பகவான் சிலை ய மட்டும் உடைக்கவில்லை. இது குறித்து கோவில் அர்ச்சகர் சிவக்குமார் மேல்பட்டி போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., கதிர்மணி விசாரிக்கிறார். ஸ்வாமி சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்த அந்த மக்கள், கோவிலில் வந்து பார்த்து சென்றனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

Anonymous said...

Some DK pedi's act?