Wednesday, August 20, 2008

இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையுடன் சென்று கலெக்டரிடம் மனு

அனுமதி கோரி விநாயகர் சிலையுடன் சென்று கலெக்டரிடம் மனு
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 19, 2008



கோவை: கோவையில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி விநாயகர் சிலையுடன் சென்று கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சியினர் அனுமதி கோரினர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர்.

போலீஸாரை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி விநாயகர் சிலையுடன் கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றனர். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: