Saturday, August 23, 2008

தங்கமணி என்ர அரிவுஜீவிக்கு சுழியம் என்பார் அளித்த பதில்

தங்கமணி என்ர அரிவுஜீவிக்கு சுழியம் என்பார் அளித்த பதில்

(அனுமதியின்றி இங்கேபதியப்பட்டுள்ளது. எடுக்கவேண்டும் என்று இங்கே குறித்தால், எடுத்துவிடுகிறேன்)


வீரவேல் ! வெற்றி வேல் !

//எல்லா ஆக்கிரமிப்பும் ஒரே விதமான உத்தியைத்தான் கையாளுகின்றன. அவ்வளவுதான் என் கருத்து.//

ஆனால். ஒரே ஒரு ஆக்கிரமிப்பு இந்தியாவில் இருப்பதாகக் கூறிக்கொண்டு அதை மட்டுமே எதிர்த்து எப்போதும் எழுதுவதையும், பேசுவதையும், செயல்படுவதையும் கடமையாகக் கொண்டுள்ள தங்கமணி அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

//இதில் ஒன்றை உவந்து ஏற்பதும் மற்றொன்றைக் கண்டு பீதியடைவதும் அவரவர் அரசியல் அதனால் விளையக்கூடிய சுயநலன்.//

ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்.

சுயநலன் பாராது அடுத்தவர் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று கண்ணன் எனும் ஒரு தலித் பகவத்கீதையில் பகருகிறான். தன் ஜாதி, தன் மதம், தன் நாடு, தன் மொழி என்பதைத் தாண்டி ஒருவன் வாழவேண்டும் என சனாதன மதம் போதிக்கிறது. இவற்றிற்காக அரசியல் செய்பவர்களால் மனிதம் அழியும்.

இவர்களை எதிர்த்து அரசியல் செய்பவர்களால்தான் மனிதம் வாழுகிறது.

//பாரதியாரே ஒரு வங்காளி தமிழே சமஸ்கிருதத்தின் வழிவந்ததுதான் எனச் சொல்லக்கேட்டு கொதித்துபோய் தனித்தமிழில் பட்டு எழுதவில்லையா? //

அந்த வங்காளி எதனால் அப்படி சொன்னான்? என்பது போன்ற விஷயங்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமே.

ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்த ஆரிய-திராவிட இனவெறி போதிக்கப்பட்டவன் அந்த வங்காளி. ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வியைக் கற்றவன். ஆரிய இனம் உயர்ந்தது என்றும், திராவிடம் தாழ்ந்தது என்றும் ஆங்கிலேயர்கள் போதித்தார்கள். அந்த போதனையை அப்படியே நம்பிய அவன் தன்னை ஆரியனாகக் கற்பனை செய்துகொண்டான். உயர் இனமான ஆரியர்களிடமிருந்தே கலைகளும், இலக்கியங்களும், விஞ்ஞானமும் வந்தன என்று நம்பினான். அப்படி நம்புபவனுக்கு தமிழில் உள்ள உயர் கலைகளும் நுணுக்கங்களும் ஆரிய இனத்தில் இருந்தே வந்ததாகத் தெரிந்ததில் வியப்பென்ன. இப்படி நம்புபவர்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றுதானே சொல்லி இருக்கிறார்கள்.

ஆரிய-திராவிட இனங்கள் இருந்தன என்று நம்புகிற அனைவரையும் போல அவனும் நம்பி மறத்தமிழன் பாரதியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். பாரதி உண்மையை சொல்லிய பின்பும் திருந்தினானா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இனவெறியும், சாதிவெறியும் பெரிய படிப்பாளிகளையும் மூடர்களாகவே வைத்திருக்கும்.

தமிழின் தோற்றத்தை சந்தேகித்த அந்த வங்காளிக்கும், ஆரிய-திராவிட இனவாதத்தை இப்போதும் நம்புகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

//ஏன் சில வருடங்கள் முன்புவரை சதிராட்டமாய் இருந்து பரதநாட்டியமான நடனம், திடிரென்று பரதமுனிவரால் தான் உருவாக்கப்பட்டது என்று பரதமுனிக்கு பத்மா சுப்ரமணியம் தமிழகத்தின் தலைநகரிலேயே கோவில் கட்டவில்லையா? யாராவது பரதமுனிதான் இந்த நாட்டியத்தை உருவாக்கினாரா என்று கேள்வி கேட்டோமா? //

கேட்போமா? மாட்டோமே.

கேட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது தெரியும்போது நாங்கள் கேட்கவே மாட்டோம்.

தெரிந்துகொள்ள வேண்டிய விதயங்கள் உண்டு:

1. சதிராட்டமாக இருந்த போது, பரத முனிவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் இல்லாமல் இருந்தனவா?

2. பத்மா சுப்ரமணியத்தின் பாட்டி காலத்தில்தான் பரத முனிவர் கண்டுபிடிக்கப்பட்டாரா?

3. பரத நாட்டியம் அல்லது சதிராட்டத்தை பரத முனிவர் தோற்றுவிக்கவில்லை என்பதற்கு யூகங்கள் தாண்டிய ஆதாரங்கள் இருக்கின்றனவா?

4. சதிராட்டத்தை பரத முனிவர் தோற்றுவித்திருந்ததாக நிரூபிக்கப்பட்டால், அது திராவிடர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்று எடுத்துக்கொள்ளப்படவேண்டுமா?

5. பரதமுனிவர் திராவிடன் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

6. ந்யூட்டன் கண்டு பிடித்ததற்கு முன்பே புவி ஈர்ப்பு விசை இந்த பூமியில் இருந்ததால், புவி ஈர்ப்பு விசை பற்றிய விதியை ந்யூட்டன் கண்டுபிடித்தார் என்று சொல்லுவது தவறா?

7. யோக சூத்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று வடநாட்டுக்காரர்களும் சொல்லிவருவது ஆரிய சூழ்ச்சியா?

8. யோக சூத்திரம் எழுதிய தமிழன் அதை தமிழில் எழுதினானா?

எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான்: இல்லை.

இந்தியாவின் பெரும்பாலான இடங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் செங்கிருதமும் மிகுந்த புழக்கத்தில் இருந்தது. அதை எல்லா சாதியாரும், எல்லா வர்ணத்தாரும் கற்று பாடல்களும், கவிதைகளும் செய்தார்கள். அதே போலவே தமிழ் கவிதைகளும். சித்தர் பாடல்கள் எழுதியவர்களிலும், செங்கிருதத்தில் கவிதை வடித்தவர்களிலும் தலித்துகளும் உண்டு. கல்வி மறுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களால் எப்படி பாடல் எழுத முடிந்திருக்கும்?

கல்வி, சம உரிமை, பெண் விடுதலை போன்றவை மறுக்கப்பட்ட நிகழ்வுகள் அந்நிய மதங்களும், ஆக்கிரமிப்பு அரசியலும் இந்தியாவில் நுழைந்தபின்பே நடந்தன.

ஏன் ஆங்கிலேயர் காலத்தில்கூட செங்கிருதத்தில் புலவர்களாக பல தலித்துகள் இருந்தனரே. இந்தியாவின் சனாதிபதியாக இருந்த மதிப்பிற்குரிய நாராயணனின் தந்தை செங்கிருதத்தில் புலவர். நாராயண குரு என்னும் தலித்திற்கு செங்கிருதம் கற்பித்தவர் ஒரு தலித். தமிழ்நாட்டு தலித் சிங்கம் ஐயன்காளியின் மருமகன் செங்கிருதத்தில் புலவர். இப்படி எத்தனையோ தலித்துகள் செங்கிருதத்தில் புலமை வாய்ந்தவர்களாக இருந்ததை வரலாறு சொல்லுகிறது.

இதிலிருந்து தெரிவது என்ன? ஆங்கிலேயர் காலத்தில்கூட தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு செங்கிருதம் கற்கும் உரிமையும், போராடும் வலிமையும் இருந்தது. ஆனால், திராவிட கழக ஆட்சியில் அவர்களுக்கு செங்கிருதம் மட்டும் அல்ல, தமிழ்வழி கல்விகூட கிடைப்பதில்லை. ஈவேரா வழிவந்த ஆரிய-திராவிட இனவாதிகளால் அவர்களுக்கு புகட்டுப்படுவது மனித சாணிதான். ஈவேரா பிறந்த மண்ணில் கீழ்வெண்மணிதான் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையாக இருக்கிறது.

காரணம் என்ன?

ஆரிய-திராவிட இனவெறியும் சாதி வெறியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழியும். சாதியை ஒழிக்க ஆரிய-திராவிட இனவாதம் ஒழிய வேண்டும். ஆரிய-திராவிட இனவாதம் ஒழிய சாதி ஒழிய வேண்டும். இவற்றில் ஒன்றை மட்டும் எதிர்ப்பவர்கள் தங்கள் சாதிக்கு மற்ற சாதிகள் அடிமைப்படவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆங்கிலேயர் தயாரித்த ஆரிய-திராவிட இனவாத நம்பிக்கையை இந்தியர்களுக்கு விற்றுப் பிழைக்கும் இவர்கள் தொழில் வேசிகளின் விற்பன்னர்கள் தொழிலிலும் கீழானது.

இப்படிப்பட்ட ஆரிய-திராவிட கற்பனைகளை மறுக்கும் சுயமரியாதை உள்ள பச்சைத் தமிழனான எனக்கு, பல காப்பியங்களை, கலைகளை, இலக்கியங்களை, அறிவியல், தத்துவ உண்மைகளை தமிழர்கள் செங்கிருதத்திலும் படைத்தார்கள் என்று சொல்லுவதில் பெருமையே.

அறிவையும், உழைப்பையும், ஞானத்தையும் நிராகரிப்பது ஆக்கிரமிப்பு வெறி பிடித்தவர்களின் குணம். அது மூதாதையர்களுடையதாக இருந்தாலும், சமகாலத்து பாட்டாளியாக இருந்தாலும் உழைப்பையும், அறிவையும் போற்ற வேண்டும்.

சமகாலத்து பாட்டாளிகளின் உழைப்பை சுரண்டுவது, பெற்ற மகளை வைத்து பிழைப்பதற்கு சமம். இறந்தவர்களின் உழைப்பை சுரண்டுவதும், அவர்களை ஏளனம் செய்வதும் பிணங்களை பெண்டாளுவதற்கு சமம்.

ஆரியர்களான வட நாட்டவர்களோ அல்லது ஒரு குழுவோ, எல்லா ஆன்மீக, இலக்கிய, விஞ்ஞான, தத்துவங்களையும் செங்கிருதத்திலும், தமிழிலும், ஈரோட்டு திராவிடன் லாட்ஜில், 786ம் நம்பர் ரூமில் சரக்குப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பைபிளை எழுதியதுபோல உண்டாக்கினார்கள் என்று சொல்வது என் மூதாதையர்களின் அறிவை, உழைப்பை, ஞானத்தை கேவலப்படுத்தும் செயல்.

மாவோ போல ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஆயிரக்கணக்கில் கொலை செய்ததோ, செய்யத்தூண்டியதோ, அல்லது ஈவேரா போல பிராமணர்களை கொலை செய்யத் தூண்டியதோ, தலித்துகளை எரித்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதோ என் தமிழ் ரத்ததில் இல்லை. தெய்வீகத் தமிழ் எனக்கு இவற்றை போதிக்கவில்லை.


//இராமர் பிறந்து தொப்புள் கொடி அறுத்துப்போட்ட இடமே அடையளம் கண்டு பிடிக்கப்படுகையில் தேடிப்பார்த்தால் தாமஸ் நடந்து வந்த காலடித்தடங்களை கண்டுபிடிக்கமுடியாதா? //

//ராமர் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலமே கண்ணுக்குத் தெரிந்து அது நாட்டையும், கோர்ட்டையும் உலுக்கும் போது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தாமஸ் வந்ததா அதிசயம்?//

அது அதிசயம் இல்லை. ஆனால், ஏசுவின் சீடரான தாமஸ் இந்தியா மட்டுமல்ல, உலகின் மேலும் 7 இடங்களில் செத்துப் போய் புதைக்கப்பட்டிருப்பது அதிசயம் அல்லவா? உலக அதிசயங்கள் 7ஆக அவை அறிவிக்கப்படவேண்டும் அல்லவா?

ஒரே தாமஸ் எப்படி அய்யா ஒம்போது இடங்களில் செத்துப்போய் சமாதியானான்?

ஆனால், இந்த ராமனைப் பாருங்கள். உலகில் எத்தனையோ ராமாயணங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ராமன் அயோத்தியில்தான் பிறந்ததாக சொல்லுகின்றன. திராவிட கழகம் வெளியிட்ட கீமாயணம்கூட அப்படிச் சொல்லுவது ஆரிய சூழ்ச்சியாகவே இருக்கவேண்டும்.

வேண்டுமானால், வராத தாமஸ் பற்றி வந்திறங்கிய கதைகளைப்போல, தமிழறிஞர் தங்கமணி அவர்கள் புதிதாக ஒரு ராமாயண ஏட்டுச் சுவடிகளை அவர் வீட்டின் கொல்லைப்பக்கத்தில் குழி தோண்டும்போது கண்டுபிடித்ததாகவும், அதில் ராமன் ஈரானில் பிறந்ததாக சொல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லலாம்.

ராமர் பாலத்திற்காகவும், ராமர் கோயிலுக்காகவும் போராடுபவர்கள் அறிவியல் பூர்வமான அகழ்வாராய்ச்சி நடத்தவேண்டும் என்று போராடினார்கள். ஆனால், அவர்களை எதிர்க்கும் ஈவேரா வழிவந்த நாம், நம்முடைய கண்டுபிடிப்பான கொல்லைப்புற ராமாயண ஏட்டுச் சுவடிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பிற்போக்குவாதிகளாக மாறமாட்டோம்.

//திடிரென்று 61 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் தவிர, சமணர்கள், பெளத்தர்கள், பழங்குடிகள் உள்ளிட்ட அணைவரும் இந்துக்களாக அறிவிக்கப்பட்டது போல //

அறிவித்தது யார் என்பதையும் சொல்லிவிடலாமே. சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. எதனால் அறிவித்தது? ஹிந்துக்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே என்று நிறுவ நடந்த முயற்சி அது. அப்போது, அண்ணல் அம்பேத்கார் முதலான ஆன்றோர்களின் வழிகாட்டுதலின்படி நீங்கள் சொல்லுகிற அறிவிப்பு வெளியானது.

இப்படி சொல்லுவதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த தீர்ப்பிற்கு பின்பு, 61 ஆண்டுகளுக்கு முன்புதான் சமணர்களும், பௌத்தர்களும், பழங்குடிகளும் ஹிந்துக்களாக பெயர் சூட்டப்பட்டார்கள். அதுவரை அவர்கள் ஹிந்துக்களே இல்லை. அவர்களை ஹிந்துக்கள் என்று அறிவித்த இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய சதிவேலை என்கிறீர்கள் போலிருக்கிறது.

அப்படிப் பார்த்தால் தமிழை செம்மொழியாக 2004ல்தான் அறிவித்தார்கள். அதுவரை அது செம்மொழியாக இருந்ததே இல்லையா?

//எல்லோருக்கும் பொதுவான கல்வி என்பதே இந்திய மரபுக்கு எதிரான கிறிஸ்த்துவ சிந்தனைதான் என்பதைச் சொன்னால் கூட உண்மையாய் இருக்கும்), எல்லோருக்கும் மருத்துவம், சில இடங்களில் சமத்துவம் போன்றவற்றைச் சொல்லலாம். //

அடடே. நீங்கள் ஈவேரா வழிவந்த இனமான சிங்கம் போல் இருக்கிறது. கேழ்வரகு நெய்யில் நீங்கள் தயார் செய்யும் பதார்த்தங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.

ஆங்கிலேயர்களது ஆரம்ப கால ஆட்சிவரை கல்விமுறை அனைவருக்கும் வழங்கப்பெற்றது. கல்லாதவர்கள் இந்தியாவில் மிகக் குறைவு. ஆனால், ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து அங்கே கிருத்துவ மிசநரிகளின் கல்விமுறையைப் புகுத்தினர். எல்லா வகையிலும் இந்திய கல்விமுறையான குருகுலக் கல்விமுறை தலையெடுக்கவொட்டாமல் அழித்தனர். இத்தகைய இந்திய கல்வி முறையில் எந்த எந்த சாதிக்காரர்கள் கல்வி பெற்றார்கள், எத்தனை கல்வி நிலையங்கள் இருந்தன, அவற்றை ஆங்கிலேயர்கள் எப்படி அழித்தனர் என்பது குறித்து தரம்பால் என்பவர் மிகத் தெளிவாக ஆதாரங்களோடு நிறுவியுள்ளார். தேடிப் பிடித்துப் படியுங்கள்.

இப்படி அழித்த ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்? ஆரிய-திராவிட இனங்களை போதித்தார்கள். அதை நம்பிய வங்காளிகள் மறத்தமிழர்களிடம் சூடு பட்டுக்கொண்டார்கள்.

ஆரிய-திராவிட இனவாதம் போன்ற ஆப்பிரிக்காவிலும் ஹுடு-டுட்ஸி இனவாதத்தை அவர்கள் புகுத்தினார்கள். அவற்றை உங்களைப்போல நம்பிய ஆப்பிரிக்கர்கள் உருத்தெறியாமல் அழிகிறார்கள். இப்படி இந்தியர்களும் அழியவேண்டும் என்று எழுதுவதும் போராடுவதும்தான் முற்போக்கு வாதிகளின் பகுத்தறிவுப் பார்வையில் விளைந்த மனிதநேயம் போலும்.

ஆரிய-திராவிட இனவாதத்தை நம்புபவன் தன்னை அடிமை, அறிவிலி என்று ஒத்துக்கொள்கிறான், தனது அழிவிற்கு தானே குழி தோண்டிக்கொள்கிறான் என்பது சுரணையுள்ள, புத்தியுள்ள மறத்தமிழனுக்கு தெரியும்.


//எந்த பழங்கலை வடிவமும் மக்களிடம் இருந்தே தோன்றுகின்றன. அதுவும் உழைக்கும் மக்களிடமிருதே.//

உண்மை. சத்தியம். கலையும்-உழைப்பும் பிரிக்க முடியாதவை. உண்மையில் இரண்டும் ஒன்றே. கலையுணர்வற்ற உழைப்பு உழைப்பே அல்ல. உழைப்பில்லாவிட்டால் கலை உருவாகவே முடியாது.

உழைப்பாளிகளால்தான் கலையை உருவாக்க முடியும். உழைப்பாளிகளால்தான் கலையை ரசிக்க முடியும். அதிலும் தான் கண்டடைந்த உவகையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற மனப்பான்மை உழைப்பவர்களுக்குத்தான் வரும். கலை குறித்த நுண்ணுணர்வு இதிலிருந்தே வளர்கிறது.

உழைக்க முடியாத சோம்பேறிகள் திராவிட கழகம் போன்ற கலை நுணுக்கமற்ற, நுண்ணுர்வற்ற இயக்கங்களையே உருவாக்குகிறார்கள். காசு கொடுக்கும்போது திட்டாமல் இருப்பதும், காசு கொடுக்காதபோது திட்டுவதுமாக ப்ளாக்மெயில் செய்வதை சமூக சேவையாகக் கொண்டார்கள் இந்த உழைப்பு திருடர்கள்.

கலைகளும், இலக்கியமும், மனித உறவுகளும் நுண்ணுணர்வு சார்ந்தவை. இவை குறித்த இந்த உழைப்பு திருடர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் படியுங்கள். நுண்ணுணர்வு எனபதே அவர்களுக்கு கிடையாது என்பதும், உழைப்பில்லாமல் பிழைத்தவர்கள்/பிழைப்பவர்கள் அவர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும்.

வாழிய செந்தமிழ் ! வாழிய நற்றமிழர் !

வாழிய பாரத மணித்திருநாடு !

வந்தே மாதரம்.

5 comments:

எழில் said...

சிறப்பான பல விளக்கங்களை அளித்துள்ள சுழியம் என்பவரை பாராட்டுகிறேன்

Anonymous said...

அருமையான கட்டுரை
சுழியத்துக்கு பாராட்டுகள்.

சுழியத்தின் இணைய முகவரி என்ன?

Anonymous said...

கிழி கிழி என்று கிழித்து எடுத்திருக்கிறார்.

நான் நம்பிக்கொண்டிருந்த பல விஷயங்கள் பொய் என்பது தெரிந்தது.

வெளியிட்டதற்கு நன்றி.

Anonymous said...

Thangamani ellam oru aalunnu oru post waste pannittengalae.

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி