Wednesday, February 13, 2008

குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

குஷ்பு கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்ததில் இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டதாம்.. இந்து அமைப்புகளுக்கு உலகத்திலேயே மிகவும் முக்கியமான பிரச்னை இதுதானா? இஸ்லாமிய பயங்கரவாதிகளும், கிறிஸ்துவ மதமாற்றக்காரர்களும் அவிழ்த்துவிட்டாற்ற்போல தமிழகமெங்கும் திரிகிறார்கள். இதெல்லாம் விட்டுவிட்டு, குஷ்பு கால் மேல் போட்டுக்கொண்டிருந்தார் என்று கேஸ் போடும் இந்து அமைப்புகளுக்கும், இந்துக்களுக்கும் இன்னும் நல்லா வேணும்.

--
நன்றி தட்ஸ்டமில்
-
வல்லமை தாராயோ விவகாரம்: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

மேலும் புதிய படங்கள்கும்பகோணம்: சென்னையில் நடந்த வல்லமை தாரோயோ பட பூஜையின்போது இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கை கும்பகோணம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வல்லமை தாராயோ பட பூஜையின்போது இந்து கடவுள்களின் சிலைக்கு அருகே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்ததன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை குஷ்பு புண்படுத்தி விட்டதாக கூறி கும்பகோணம் மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இந்து முன்ணி சார்பில் அதன் செயலாளர் குருமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை. வழக்கின் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைப் பரிசீலித்தபோது 295, 295ஏ, 296 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வழக்கு அமையவில்லை.

எனவே இதை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதேபோன்ற வழக்கு சென்னை மற்றும் ராமேஸ்வரம் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

நல்லா இருங்க ரொம்ப சரியா மனசை சொல்லீட்டீங்க

Anonymous said...

முழுவதும் ஒப்புக்கொள்கிறேன்.