Sunday, February 24, 2008

நாகர்கோவில் : இந்து முன்னணி செயலர் கொலை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த திருவிடைக்கோட்டை சேர்ந்தவர் தாணுபிள்ளை (எ) மணி (34). குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயலர். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பல உள்ளன. பூலான்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் தாணுபிள்ளை உடல் கிடந்தது. தலை மற்றும் முதுகுப் பகுதியில் காயம் இருந்தது. அவரை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: