தூத்துக்குடி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் நியமனம்
குலையன்கரிசல், ஆக. 6-
தூத்துக்குடி ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி மண்டல முறைப்படுத்தும் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட பார்வையாளர் அன்புராஜ் நடத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, மாவட்ட பிரசார அணி தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட சிறப்பு பார்வை யாளர் கனகராஜ் மற்றும் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் தூத்துக்குடி ஒன்றிய துணை தலைவ ராக கூட்டாம்புளி பட்டு முருகேசன், முள்ளக்காடு கணேஷ்குமார், தாளமுத்துநகர் தங்கராஜ், மேலத்தட்டாப்பாறை சந்திரன், பொதுச் செயலாளராக முத்தையாபுரம் செண்பகராஜ், அமைப்பு செயலாளராக முத்தம்மாள், காலனி குருசாமி, ஒன்றிய செயலாளராக கூட்டாம்புளி கனிராஜ், ராஜீவ் நகர் பாப்பா, முடிவைந்தானேந்தல் புகழும் பெருமாள், பொருளாளராக புதுக்கோட்டை ஜெயபிர காஷ் ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
புதுக்கோட்டையில் கூட் டாம்புளி செல்லும் மெயின் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும்.
தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் இருந்து வாகைகுளம் வரை உள்ள 4 வழி சாலை உடனே அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் பக்கம் உள்ள பார் வசதி கொண்ட அரசு டாஸ்மார்க் கடையை வேறு இடத்திற்கு உடனே மாற்ற வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நன்றி மாலைமலர்
No comments:
Post a Comment