Tuesday, July 31, 2007

சாமியார் படத்துக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி அரசுக்கு கடிதம்

சாமியார் படத்துக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சி அரசுக்கு கடிதம்

கோவை : ஆன்மிக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் எடுக்கப்படும், சாமியார் சினிமா படத்தை, ஆரம்பத்திலேயே தடைசெய்ய வேண்டும்'' என, இந்து மக்கள் கட்சி, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் செந்தில்குமார் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: இந்து மதத்தையும், மடாதிபதிகளையும் கேவலப்படுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் அடிக்கடி நடக்கிறது. எந்த அரசியல் கட்சியும் இதற்காக கவலைப்படுவதில்லை. கடவுளை நம்புவோர் பல கோடி பேர் உள்ளனர்; கடவுளை நம்பாதவர் சில நுõறு பேர் மட்டுமே. மேல்மருவத்துõர் அடிகளார், காஞ்சி சங்கர மடம், சத்ய சாய்பாபா, போன்ற மகான்களை கேவலப்படுத்தும் வகையில், சாமியார் என்ற சினிமா படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த படத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடை செய்ய வேண்டும். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கங்களும் இதில் தலையிட்டு, சாமியார் சினிமா படத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் செந்தில்குமார் கூறியுள்ளார்.

நன்றி தினமலர்

No comments: