Tuesday, July 31, 2007

தினமலர் நிருபருக்கு திமுக அரிவாள் வெட்டு?

தினமலர் நிருபருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர் : திருவாரூர் தினமலர் நிருபரை பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் பிரதாம ராமபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையன் மகன் ராஜ்கண்ணன்(42). திருவாரூர் தினமலர் நிருபராக பணி செய்கிறார். திருவாரூர் கமலாலய குளம் அருகில் உள்ள கிளப்பில் நடப்பவை குறித்து செய்தி வெளியானதால் திருவாரூர் நகர தி.மு.க., செயலரும், நகராட்சி கவுன்சிலருமான சங்கர் மற்றும் அவரது ஆட்கள் சிலர், நிருபர் ராஜ்கண்ணனை தேடி வந்தனர். நேற்று காலை நகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு அனைத்து நிருபர்களுடன் ராஜ்கண்ணனும் சென்று திரும்பினார். திருவாரூர் கடைவீதியில் அவர் வந்தபோது, இரு பைக்கில் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். "ராஜ்கண்ணன் யார்' என்று உடன் வந்த சக நிருபர்களிடம் மர்ம நபர்கள் கேட்டனர். "இவர் தான்' என்று சக நிருபர்கள் அடையாளம் காட்டியதும், மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ் கண்ணனை சரமாரியாக வெட்டினர். சற்று தொலைவில் வந்து கொண்டிருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் ஓடி வரும் முன், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணன் அனுமதிக்கப்பட்டார். நிருபரை மர்ம கும்பல் வெட்டியது குறித்து, திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் விசாரித்து வருகிறார்.


நன்றி தினமலர்

No comments: