Wednesday, July 25, 2007

3 பேர் கொலை: அல்-உம்மாவினர் 7 பேருக்கு ஆயுள்

3 பேர் கொலை: அல்-உம்மாவினர் 7 பேருக்கு ஆயுள்

ஜூலை 25, 2007

திருநெல்வேலி: நெல்லையில் கடந்த 1997ம் ஆண்டு 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த 1997ம் ஆண்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், டாக்டர் செல்வக்குமார், டெய்லர் சங்கர், பூக்கடை சங்கர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நெல்லை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்

No comments: