Wednesday, January 03, 2007

இயேசு என்ற கற்பனை?

என் நண்பர் கிறிஸ்துமஸ் பரிசாக(?) எனக்கு அனுப்பி சமீபத்தில் படிக்க ஆரம்பித்த வலைப்பக்கம் இது

http://www.jesusneverexisted.com/
இயேசு என்று ஒருவர் இருந்ததில்லை என்று சாதிக்கிறது.

பழங்காலத்தில் உலவிய பல கதைகளை தொகுத்து உருவாக்கிய ஒரு கதை என்று சொல்கிறது.
நாசரத் என்ற ஊரே முதலாம் நூற்றாண்டில் இல்லை என்று ஆதாரத்துடன் நிறுவுகிறது.
12 அப்போஸ்தலர்களும் கற்பனையே என்று சொல்கிறது. ஆரம்பகால சர்ச்சுகளை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட கதைகள்தான் 12 அப்போஸ்தலர்கள் என்று கூறுகிறது. கன்னிமேரி சமாச்சாரமும் கிறிஸ்துவத்துக்கு போட்டியாக இருந்த மதங்களிடமிருந்து பெறப்பட்ட கற்பனையே என்று கூறுகிறது

200 வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று கூறுகிறது. குறைந்தது எனக்கு இது புதிய விஷயம். இந்த ஏமாற்றுவேலையை ஷோ பண்ணி பணம் பண்ண ஒரு பெரிய தொழிலே நடந்துகொண்டிருக்கிறது என்றும் கூறுகிறது.

அலெக்ஸாண்டிரியாவில் தோன்றிய மதம் இந்த கிறிஸ்துவம் என்று கூறுகிறது. கத்தோலிக்க மதம் அதன் சடங்குகளை எகிப்திலிருந்து பெற்றது என்று கூறுகிறது.

பெர்ஷியாவிலிருந்து மித்ரா வழிபாடு கொடுத்த உடையை பூண்டு இந்த கலப்பு மதம் தோன்றியது என்றும் கூறுகிறது.

யூதர்களது வடக்கு ராஜ்யம் அழிந்ததும் அதனால் பாபிலோனில் வசிக்க நேர்ந்த யூதர்கள் உருவாக்கியதுதான் யூதக்கதைகள் என்றும் கூறுகிறது.

டேவிட் சோலமன் ஆகியோர் எல்லோரும் வெறும் கதைகளே என்றும் அவர்கள் உண்மையான வரலாற்று நபர்கள் அல்ல என்றும் கூறுகிறது.

கிறிஸ்துவத்துக்காக பொய் சொல்வதும் கிறிஸ்துவர்களுக்கு உகந்ததாம். அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள்தாம் அப்போஸ்தலர் ஆகியவை என்றும் கூறுகிறது.

கிறிஸ்துவ சர்ச்சில் நடந்த ஊழல்களையும் பொய் பித்தலாட்டங்களையும் காமக்களியாட்டங்களையும் பட்டியல் போடுகிறது.

எவ்வாறு கொடூரமான முறையில் கிறிஸ்துவம் பரப்பப்பட்டது, பரப்பப்படுகிறது என்றும் பட்டியல் போடுகிறது.

படிக்க ஆரம்பிக்கவில்லை.

படித்துவிட்டு என் விமர்சனத்தை எழுதுகிறேன்.

45 comments:

Unknown said...

எழில்,

கிறிஸ்துவை பற்றி பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.அவை அமெரிக்காவில் ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் சூடாக விவாதிக்கப்படுகின்றன.

பிரபல ஜர்னலிஸ்ட் லீ ஸ்ட்ரோபெல் கடும் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர்.case for christ எனும் புத்தகத்தில் ஏசு இருந்தது உண்மை என கூறுகிறார்.அதில் இதுபற்றிய அனைத்து தகவல்களும், விவாதங்களும் இருக்கின்றன.

மேலதிக விபரங்களுக்கு

http://www.leestrobel.com/Christ.htm

எழில் said...

செல்வன்,
உங்கள் கருத்துக்கு நன்றி

நான் முன்பு நாத்திகனாக இருந்தேன் இன்று ஆத்திகனாகிவிட்டேன் என்று டுமீல் விடுவதெல்லாம் பழைய பரப்புரை கதை ஆயிற்றே?

லீ ஸ்றபோல் என்று கூகுளினால் வரும் பக்கம்

http://www.infidels.org/library/modern/jeff_lowder/strobel.html

Case for Christ is a creative, well-written contribution to Christian apologetics. Moreover, Strobel is to be commended for summarizing the work of so many leading apologists for Evangelical Christianity in such a compact and easy-to-read format. Yet Strobel did not interview any critics of Evangelical apologetics. He sometimes refutes at great length objections not made by the critics (e.g., the claim that Jesus was mentally insane); more often, he doesn't address objections the critics do make (e.g., the unreliability of human memory, that non-Christian historians do not provide any independent confirmation for the deity of Jesus, etc.
...

If Strobel's book had been promoted only as an apologetic, I would have no objection. But Strobel's book was promoted as more than just another Christian apologetics book; it was promoted as the result of an investigation into Christianity by an investigative reporter. My point was simply that we would normally expect a journalist to identify their sources, and Strobel's refusal to even mention my name is yet another example of how Strobel's book was not written according to the standards of contemporary journalism.

என்று விமர்சகர் ஜெப்ரி லாடர் கூறுகிறார்..

உங்களது இணைப்புக்கு நன்றி படிக்கிறேன்.

Unknown said...

எழில்

ஸ்ட்ரோபெலின் புத்தகம் நாத்திகர்களின் வாதங்களையும் அதற்கு கிறிஸ்தவர்களின் பதிலையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்குகிறது என்பதாலேயே அதை குறிப்பிட்டேன்.ஸ்ட்ரோபெலின் புத்தகத்துக்கு பல மறுப்புரைகள் எழுதப்பட்டுள்ளன. அந்த புத்தகங்களையும் மறுத்து கிறிஸ்தவர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர்.

படைப்புவாதம்-பரிணாமவாதத்துக்கு அடுத்து அமெரிக்காவில் ஆதிகர்- நாத்திகர் வாதம் கிறிஸ்து என்பவர் இருந்தாரா, இல்லையா என்பதையே மையப்படுத்தி சுழல்கிறது.Lord,Liar or lunatic எனும் வாதம் கிறிஸ்தவர்-நாத்திகர் இடையே மிகவும் சுவையாக விவாதிக்கப்பட்ட ஒன்று.

Unknown said...

எழில்

இந்த தளத்தில் ஜீசஸ் காஷ்மிர் வந்ததாகவும், பவிஷ்யபுரானத்தில் அவரது பெயர் இருப்பதாகவும், புராணத்தில் வரும் சாலிவாகன மன்னனை சந்தித்ததாகவும் சொல்லி இருக்கின்றனர்.


http://www.tombofjesus.com/

http://jesusinkashmir.com/

Anonymous said...

// இந்த தளத்தில் ஜீசஸ் காஷ்மிர் வந்ததாகவும், பவிஷ்யபுரானத்தில் அவரது பெயர் இருப்பதாகவும், புராணத்தில் வரும் சாலிவாகன மன்னனை சந்தித்ததாகவும் சொல்லி இருக்கின்றனர்.
/////////


அப்பிடி ஓங்கிப் போடுரா அருவாளை :)))

Anonymous said...

// இந்த தளத்தில் ஜீசஸ் காஷ்மிர் வந்ததாகவும், பவிஷ்யபுரானத்தில் அவரது பெயர் இருப்பதாகவும், புராணத்தில் வரும் சாலிவாகன மன்னனை சந்தித்ததாகவும் சொல்லி இருக்கின்றனர்.
/////////


புராணமே சொல்லீக்குதா. அப்பம் உண்மையாதான் இருக்கும்

எழில் said...

நன்றி செல்வன்,

இயேசு ஒரு சாமியார் என்றும், அவரை அவரது சீடர்கள் கடவுளின் ஒரே மகன் என்று ஓவராக ஏற்றிவிட்டுவிட்டார்கள் என்று நினைத்திருந்தேன்.

வெள்ளைக்காரர்கள் கையில் காசு இருப்பதால், அதற்கு சொம்படிக்க ஒரு கூட்டம் எப்போதுமே தயாராக இருக்கும். (கொஞ்சம் அடிமைப்புத்தியும் கூடவே)

அதனால், இப்படி இயேசு காஷ்மீர் வந்தார், நேத்திக்கு என் கிட்ட பேசினார் என்று ரீல் விடுவதெல்லாம் நடக்கும். (டிஜிஎஸ் தினகரனுக்கு இயேசுதான் வீட்டு பிளான் எல்லாம் போட்டுத்தராராம். அப்படித்தான் ஒரு கூட்டத்தில் அவர் சொன்னார். பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்துவ நண்பர் நமுட்டலாக சிரித்தார்)

ஆனால் இந்த பக்கத்தில் என் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி ஒரு ஆளே இல்லை என்று சாதிப்பதுதான்..

அதனால்தான் அதனை இங்கே பதிந்தேன்.

நன்றி
எழில்

Anonymous said...

"அதனால், இப்படி இயேசு காஷ்மீர் வந்தார், நேத்திக்கு என் கிட்ட பேசினார் என்று ரீல் விடுவதெல்லாம் நடக்கும்."


that is usual evangelical strategy.

Anonymous said...

பதிவுக்கு நன்றி

எனக்கு கொடுத்தார்கள் நீங்களும் சாப்பிடுங்கள் என்று கொடுத்திருக்கிறீர்கள்..

வாழ்க

பகுத்தறிவாளன் said...

//படிக்க ஆரம்பிக்கவில்லை.

படித்துவிட்டு என் விமர்சனத்தை எழுதுகிறேன்.//

அப்படின்னா படிக்காமலேயே விட்ட புருடாவா இது?

சரி சரி. நா சத்தம் போட்டு சொல்லல.

நீங்க படிச்சுட்டு வாங்க. அப்புறமா வச்சிக்கலாம்.

பகுத்தறிவாளன்

எழில் said...

//நீங்க படிச்சுட்டு வாங்க. அப்புறமா வச்சிக்கலாம்.//

என்னத்தை?

Anonymous said...

I have been reading the webpage you have suggested. it is hard to think that Jesus did not exist. Being a christian for all these years may have an impact in my thinking. But to be fair to the site, his arguments are pretty convincing.

Anonymous said...

பார்த்து எழில்,
கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும் நாள் இது.
எல்லா பிளாக்குகளையும் தடை செய்துவிடப்போகிறார்கள்.
டாவின்ஸி கோடு ஞாபகம் இல்லையா?

Anonymous said...

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

BadNewsIndia said...

ஏசு என்று ஒருவர் இருந்ததில்லை என்பதும், சிவன், முருகன், விநாயகன், விஷ்ணு எல்லாம் aliens என்றும் கூறுபவர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடவுள் என்ற concept ஒரு நல்ல காரணத்திர்க்காக உருவாக்கப்பட்டு இன்று நம்மிடையே பரவிக் கிடக்கிறது.

ஏசு என்பவர் இருந்தார். ஆனால், அவர் இன்று சித்தரித்துள்ளபடி தேவ தூதர் எல்லாம் கிடையாது. socrates போல் ஒரு சாதாரண philosopher. அவர் மறைந்து 300 வருடங்களுக்கு பிறகுதான் he was portrayed as 'Gods son' by a group for political reasons, என்று கூறுபவர்களும் உண்டு.

சில விஷயங்கள ரொம்ப ஆராயக் கூடாது. அனுபவிக்க இஷ்டம் இல்லன்னா ஒதுங்கிடனும்.

:)

ramachandranusha(உஷா) said...

எழில், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் கிருஷ்ணர் வரை, கல்கி இன்னும் வரவில்லை (டூப்ளிகேட் கல்கி பகவானை ஆட்டத்தில் சேர்க்கவில்லை), பீமன், அனுமார், ராகவேந்திரர்- வாயு புத்திரர்கள், ஆதிசங்கர்- சிவனின் அம்சம். பட்டியலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படி சிவ,பிரம்ம, வைகுண்ட சாமிகள் பூமியில் பிறக்கிறார்கள் என்கிறது இந்துமதம். இதைக்குறித்து உங்கள் பதில் என்ன?

*தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை*- கண்ணதாசன்

எழில் said...

//
எழில், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் கிருஷ்ணர் வரை, கல்கி இன்னும் வரவில்லை (டூப்ளிகேட் கல்கி பகவானை ஆட்டத்தில் சேர்க்கவில்லை), பீமன், அனுமார், ராகவேந்திரர்- வாயு புத்திரர்கள், ஆதிசங்கர்- சிவனின் அம்சம். பட்டியலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்படி சிவ,பிரம்ம, வைகுண்ட சாமிகள் பூமியில் பிறக்கிறார்கள் என்கிறது இந்துமதம். இதைக்குறித்து உங்கள் பதில் என்ன?
//
என் கருத்து உங்களுக்கு முக்கியமாக இருந்தால், இதோ அது.
ஆமாம். இந்தியாவின் புராணங்களும் இதிஹாசங்களும் சொல்கின்றன.
அது நடந்ததுதான் என்று நான் நினைக்கிறேன்.

//
*தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை*- கண்ணதாசன்
//
கண்ணதாசன் இங்கே கீதையின் சாரத்தை சொல்கிறார். சிலை என்று பார்ப்பவர்களுக்கு சிலை. எல்லா பொருட்களிலும் உறைந்திருக்கும் இறை என்று பார்ப்பவர்களுக்கு இறை. அந்த கல்லில் இறை உண்டு என்று சொல்பவர்களுக்கு அதில் இறை இருக்கும். அதில் இல்லை என்று சொல்பவர்களுக்கு இறை இருக்காது.

எழில் said...

சகோதரர் மரியகுமாரன்,

உங்கள் சர்ச்சுகளில் வைத்திருக்கும் சிலுவையில் இருக்கும் அணுக்கள் முன்பு " கிராமப்புறங்களில் பொட்டல்வெளி கழிவரைக்கு காலடியில் வைக்கும் செங்கல்"களில் இல்லாமல் இருந்தது என்பதற்கு நீங்கள் நிரூபணம் தர முடியுமா?

எல்லைக்கல்களில் விநாயகர் உற்பத்தி செய்வது இருக்கட்டும். தெருவுக்குத் தெரு மாதா பீடங்கள் வருகின்றனவே அதில் இருக்கும் அணுக்களும் முன்பு கழிவறைகளில் இல்லை என்று கூற முடியுமா? எங்கே பாறை கிடைத்தாலும் சிலுவை வரைந்து வைக்கிறீர்களே அந்த பெயிண்டில் இருக்கும் அணுக்கள் முன்பு கழிவறைகளில் இல்லை என்பதற்கு நிரூபணம் தர முடியுமா?

அப்படிப்பட்ட கழிவறை அணுக்களும் சாணிகளில் இருந்த அணுக்களும் சர்ச்சுகளாகவும் மசூதிகளாகவும் ஆகவில்லை என்பதற்கு நிரூபணம் தர முடியுமா?

சற்று சிந்தித்துவிட்டு மற்ற மதங்களின் நம்பிக்கை சரியா என்று விவாதியுங்கள்.
_

Anonymous said...

Dear ezil,

Mariyakumaran is a Muslim.Not a christian.

Anonymous said...

Dear brother ezil,


Assalamu alaikum.

I accept your statements about jesus. He never existed as god. But he was a slave of god alimighty.

I saw the website you quoted. jesusneverexisted.com is a good site. In many places it speaks highly of arabs.

But I felt offended by reading the following lines

'''John, indulging himself of the tolerance of the caliph, Abd al-Malik, denounced Muhammad as 'immoral,' a scandalous polygamist promising an afterlife in carnal paradise, and an imposter who had invented 'revelations from God' as it suited him. John was in no doubt that the 'Saracens' and 'Ishmaelites' were a derivative of 4th century Arianism and 5th century Nestorianism, though he admired their single-minded monotheism.'''

This is highly defamatory. Request the website to remove these derogatory lines.

எழில் said...

சகோதரர் சுலைமான்,

எனக்கு இந்த பக்கத்துக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என் நண்பர் அனுப்பிய பக்கத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான். உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், அந்த பக்கத்தை வைத்திருப்பவருடனே தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி
எழில்

Anonymous said...

எழில்
இந்த பக்கத்தை பாருங்கள்.
சிரித்து வயிறு புண்ணாகிவிடும்

http://www.landoverbaptist.org/

http://www.landoverbaptist.org/bible-verses.gif

எழில் said...

Thanks Anony

Anonymous said...

இந்த வலைத்தளம் பொய் சொல்கிறது என்பது நான் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

எல்லாம் வல்ல இறைவன், எங்கள் இறைத்தூதர் மூலம் பிரசுரித்த கடைசிப் பதிப்பான अल குர் -ON இல் ஏசு பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

அப்ப அது எப்படி தப்பாக முடியும்.?

ramachandranusha(உஷா) said...

நன்றி எழில். இதுதான் இறை என்பதை யார் வரையறுப்பது? மதமும், கடவுளும் அவரவர்
நம்பிக்கை. உங்களுக்கு பத்துவயது பையன் கோவர்த்தனகிரிவை சுண்டுவிரலில் தூக்கினான் என்றால் கன்னியின் வயிற்றில்
இறைவன் உதித்ததும், இறைவனே தன் தூதனிடம் தன் சொற்களை சொன்னதும் ஒன்றே. இதில் உலகில் உள்ள ஏராளமான தெய்வங்களையும், காட்டுவாசியின் தெய்வம் உட்ப்ட சேர்த்துக் கொள்ளுங்கள். பிறர் நம்பிக்கையை கேலி செய்வதால்தானே அனைத்து பிரச்சனையும் வருகிறது.
உடனே அவனை நிறுத்துங்கள், நான் நிறுத்துகிறேன் என்று ஆரம்பிக்காதீர்கள். பிரச்சனை முடிவுக்கு வர வேண்டாம் என்று நினைப்பவர்களின் வார்த்தை அது.

எழில் said...

//பிறர் நம்பிக்கையை கேலி செய்வதால்தானே அனைத்து பிரச்சனையும் வருகிறது.//

மிகச்சரியான வார்த்தை ராமச்சந்திரன் உஷா.

அனைத்து பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரும்பாலான பிரச்னைகள் அதனால்தான் வருகின்றன.

என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்,
ஒரே இறைமகன் இவர்தான் என்று சொல்வதாலும் இந்த மதங்களின் அடிபப்டையே மற்ற மதங்களை இழிவு படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

சில வேளைகளில் அப்படி இறையை கட்டுப்படுத்துவது அவர்கள் வைத்திருக்கும் "கட்டற்ற இறை" என்ற இலக்கணத்துக்கே பொருந்தாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

கால்கரி சிவா said...

உஷா மேடம், உங்கள் கருத்துபடி எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் என் வேதம்தான் 100% கடவுள்தந்தது மற்றதெல்லாம் கலப்படம் சொல்லி ஆளாதிக்கம் செய்ய நினக்கும் கருத்துக்குதான் எதிர்கருத்து.

நம் புராணங்கள் கதை என ஏற்றுக் கொள்ளும் அறிவு நம்மிடம் இருக்கிறது.

இறைத்தூதன், இறைமகன் என்பவைகளும் கற்பனைகளே என ஏற்றுக்கொண்டுவிட்டால் ப்ரச்னைகள் இல்லையே. அந்த அறிவு இல்லாதால்தானே இவ்வளவு ப்ரச்னைகளும்.

நான் நிறுத்திவிட்டேன். அவன் நிறுத்தவில்லை என்பதை அவனுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் அவசியம் வந்துவிட்டது

ramachandranusha(உஷா) said...

//ஆனால் என் வேதம்தான் 100% கடவுள்தந்தது மற்றதெல்லாம் கலப்படம் சொல்லி ஆளாதிக்கம் செய்ய நினக்கும் கருத்துக்குதான் எதிர்கருத்து.//

சிவா, அப்படி யாரும் எழிலிடம் வந்து சொல்லவில்லையே. என்னிடம் வந்து சொன்னால் கூட உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று சொல்லுவேன். ஆனால் அவரவர் கடவுளை குறித்து எழுதுவது தவறில்லையே! குமரனும், ராகவனும், நா.கண்ணனும், கண்ணபிரானும் நாளும் எழுதவில்லையா? கிறிஸ்துவர்களுக்கு டிசம்பர் கடைசியில் இருந்து ஜனவரி ஆரம்பம் வரை பண்டிகை நாள். அந்நேரம் இந்த தலைப்பு கொஞ்சம் உறுத்தலாய் இருந்ததால் உள்ளே நுழைந்தேன்,
நான் எதிர்ப்பார்த்தப்படியே பதிவும், புது புது பெயர்களில் சேற்றை ஒருவர் மேல் மற்றவர்கள் இறைத்துக் கொள்ளுதலும் நடந்துக்
கொண்டு இருந்தது. யாரும் இங்கு உங்களிடம் எங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று அறிவிக்காதப்பொழுது,
அவர்கள் கடவுள் கடவுளே இல்லை என்று நீங்கள் ஏன் பறை சாற்ற வேண்டும் என்பதே என் கேள்வி.
ஒரு நேயர் விருப்பம், உங்கள் பதில் தேடி கிடைக்கவில்லை. ஒரு பாட்டு போட்டு இருந்தீர்களே, அதை எடுத்துப் போடுங்கள்.
எந்த கடவுளை கும்பிட்டால் என்ன, பாவ் சே போலோ, பியார் சே போலோ - அந்த பஜன் பாட்டு.

Anonymous said...

உஷா மேடம்,

தினகரனும் மற்ற கிறிஸ்தவ மத பிராச்சாரகர்களும் தீபாவளி,பொங்கல் என்றில்லாமல் அனைத்து நாட்களிலும் தெருத்தெருவாக இந்துகடவுள்களை சாத்தான்கள், பிசாசுகள் என பேசிவருகின்ற போது அதற்கு பதிலாக ஒரே ஒரு பதிவை போட்டதில் என்ன குறையை கண்டுபிடித்தீர்கள்?

அவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டுமா என கேட்காதீர்கள். புறமுதுகு காட்டுவது தமிழர் வழக்கமல்ல.

இந்த பதிவில் வந்து யாராவது பேசினால் தான் திருப்பி பேச வேண்டும் என்பதில்லை. இதுபோன்ற பதிவுகள் உருவாக காரணமே அம்மாதிரி பேச்சுக்களும், செயல்களும் தான்.

இந்த சண்டையை எழில் ஆரம்பிக்கவில்லை. அவரோடு இது முடியப் போவதுமில்லை.

Anonymous said...

ராமச்சந்திரன் உஷா சொல்வது நியாயமானது போலத் தோற்றமளிக்கிறதே தவிர எதார்த்தமாகப் பார்த்தால் அது வழக்கமான மதில்மேல் பூனை கதைதான்.
இந்தியா இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாகி 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அரை நூறாண்டுகளாகத் தலைஎடுத்து வருகிறது. இந்தக் காலகட்டத்திலும் மூன்று புறமும் இந்தியாவை உருக்குலைக்க என்ன வழி என்று பார்த்துத் தொடர்ந்து ஆயுதமேந்தி நிற்கும் மூன்று நாடுகள். அவற்றிற்குப் பின்னே உள்ள இரு மதங்களின் சார்பாளர்களான பண்பாட்டு ஏகாதிபத்தியங்கள்- முன்னாள் காலனியவாதிகள்.

எவையெவை அந்த ஏகாதிபத்தியங்கள் என்று நான் சொல்லி அவருக்குத் தெரிய வேண்டாம், அந்தச் சிறு தகவல்/ வரலாறு பள்ளிப் படிப்பு முடித்த எவருக்கும் இந்தியாவில் தெரிந்திருக்கும். ஆனால் அது ஏதோ நடக்காத ஒன்று போலவும் இந்துக்கள் தொடர்ந்து ஏமாளிகளாகவே இருக்க வேண்டும், மறுபடி அடிமைகளாக ஆக வேண்டும் என்று அந்த ஏகாதிபத்திய மதங்களின் பிரச்சாரகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களின் கைப்பாவைகளாக இந்தியர்களே இயங்கும் ஆபத்தை என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மற்ற இரண்டு ஏகாதிபத்திய முயற்சிகளும் தொடர்ந்து இந்தியாவில் தம் பண்பாட்டுக் காலனியத்தை எப்படியாவது திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று பலவிதமாக இழி பிரசாரங்களையும், மக்களைக் குழுவாரியாகப் பிரித்துப் பகை ஊட்டித தம்பக்கம் இழுப்பதையும், ஆங்காங்கே தம் மதக் குழுவுக்கு ஒரு அளவு ஆள்பலம் சேர்ந்ததும் இந்தியாவில் இருந்து தம் பகுதியைப் பிரிக்க இயக்கம் நடத்தத் தூண்டுவதுமாக ஒரு அமில அரிப்பு இயக்கம் நடத்துகிறார் என்பதை அவர் தன் தாராள சகிப்பு நிலையில் இருந்து பார்க்க மறுக்கலாம். ஆனால் இந்தியா மறு ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு அடிமையாகாமல் உலகில் பெரும் வன்முறையை எங்கும் பரவ விட்ட இரண்டு மதங்களின் காலனியாகாமல் இருக்காமல் காக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அப்படி ஒரு பொறுப்பை எழில் எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது.
அவர் மற்ற இரு மத காலனியங்களும் இந்துக்கள் மீது சுமத்திய பழிச் சாட்டைச் சாதாரணமாக அவர்கள் மீது திருப்பி இருக்கிறார். அதாவது உங்கள் மதம் ஒரு பெரும்கட்டுக்கதை, அதற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது வெறும் அடக்கு முறைதான். சில ஆளும் குழுக்கள் மற்றவரை அடக்கச் செய்த சூழ்ச்சி என்று இந்தியாவில் எங்கும் பிரச்சாரம் நடத்துகிறார்கள்
அவர்கள். தெருத்தெருவாகத் தமிழ்நாட்டில் ஒரு நாற்பதாண்டுகள் இந்து மதம் இழிக்கப் பட்டு இருக்கிறது. பள்ளிகளில் கூட அதற்கு எதிராக, மற்ற மதங்களுக்குச் சாதகமாக போதனை நடக்கிறது. அவர் தன் போக்கில் போவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஒரு நாள் திரும்பிப் பார்த்தால் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், ஆப்பிரிக்காவில் பல நாடுகளிலும் நடந்த பண்பாட்டு அழிப்பும், முழு மூளை சலவையும் இந்திய மக்களுக்கும் நடந்து முடிந்திருக்கும். அவருக்கு ஒருவேளை அதனால் என்ன, மக்கள் அமைதியாக வாழ, வளமாக வாழ வழி கிட்டினால் போதாதா என்று ஒரு கருத்து இருக்கலாம். காலனியாதிக்கத்தில் மனிதரின் அறிவு மட்டுமல்ல ஆன்மாவே சூனியமாகி விடும் என்பது எழில் போன்றாரின் கருத்து.

அதற்குள் நம் தாராள 'செக்யுலர்' மிதவாதிகளுக்கு உடலில் பெரும் பதற்றம் வந்து விடுகிறது. ஏதோ மற்ற மதத்தினரை நாடு கடத்த முயற்சிப்பது போல. எழில் சொல்வதெல்லாம் மிகவும் சாதாரணக் கருத்து. அவர் ஒன்றும் அமெரிக்க, ஐரோப்பிய கிருத்தவத் தீவிர வாதிகளைப் போல தன் மதம் தவிர மற்றெல்லா மதத்தினரும் காட்டு வாசிகள், அவர்கள் மீட்சி பெற ஒரே வழி இந்துமதம்தான் இல்லாவிடில் அவர்கள் பாழிருளில் வீழ்வார்கள் என்று சொல்லவில்லை. நாளொரு வீதி பொழுதொரு முடுக்கு என்று குண்டு வைத்துக் கொல்ல ஆணை பிறப்பிக்கும் கோழைத்தன, கொலைகார முயற்சிகளுக்குத் தம் கடவுளின் ஆதரவும் முழு அங்கீகாரமும் உண்டு என்று சொல்லிக் கொலை வெறியைப் பரப்பவில்லை. நிறவெறியையும் அடிமை ஆட்சியையும் செல்வச் செழிப்பால் வரும் மமதையையும் இங்கு கொட்டவில்லை.

முன்னாள் அடிமைகளான இந்தியருக்கு, இன்னமும் முழு விடுதலை கிட்டவில்லை, நாற்புறமும் பகைமை சூழ்ந்திருக்கிறது, உள்நாட்டிலும் தாராளவாதிகளின் அங்கீகாரத்தோடு பகைப் பிரச்சாரம் தொடர்கிறது என்று எச்சரிக்கிறார். பகைப் பிரச்சாரத்தின் பணபலத்தால் உருப்பெருக்கப் பட்ட 'உண்மை வரலாறு்லாறு' நம் மிதவாதிகளாலும், பகுத்தறிவுகளாலும், இடதாலும் தொடர்ந்து இழித்துப் பேசப்படும் இந்து மதத்தின் சாதாரணமான அற நெரி போதிக்கும் ஆன்மிகம் தூண்டும் குறியீட்டுக் கதைகளை விட எந்த விதத்திலும் மேலானவையுமல்ல, வரலாற்றில் காலூன்றிய 'பேருண்மைகளும்்' அல்ல. மாறாக அவை வன்முறையிலும் சூழ்ச்சியிலும், பிற பண்பாடுகளின் மீது அடங்காக் குரோதமும் கொலைவெறியும் கொண்ட பொய்க் கதைகளே என்று சுட்டுகிறார்.
அவர்களை அக்கதைகளை நம்பாதீர்கள் என்றும் பிரச்சாரம் செய்யவில்லை, அதை நம்புவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் அந்த மதப் பாசறைகளில் உள்ள 'அமைதிப் படையினரை'ப் போல உலகவலையில் பிரகடனம் செய்யவில்லை.
உலகில் இன்று இருக்கும் நாடுகளில்,்களில் பெருமளவு அமைதிப்பாதையையும், ஆயுதமேந்திப் போரிடுவதில் எந்தப் பயிற்சியுமற்ற பெரும் மக்கள் திரளையும் கொண்ட ஒரேநாடு இந்தியாதான். அது தன் சுதந்திரத்தையும் சுயப் பண்பாட்டையும் இழக்காமல் இருக்க எடுக்கும் தற்காப்பு முயற்சிதான் எழிலின் முயற்சி. இது புரியாதவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.
























































Anonymous said...

Every christian & muslim beleives and says that his religion isthe true religion and it is his duty to spread the true religion by converting others.

Christians know that taking his religious beleifs to the muslims would invite daggers & violence.

Muslims know that they can't convert christians. Christians are already brainwashed to the hilt.

So both these cults try to satisfy their lust for human blood by converting the gullible hindus. They lure the hindu with money, jobs, education, social status, political patronage and in some rare cases lure them through violence.

When all other religions are poaching hindus, what is wrong with hindus trying to do the reverse? I think that ezhil is right in this respect.

One way of inviting others to follow the hindu dharma is to project the harmful effects of theirs, to show how wrong they are in wasting their entire life based on a never existed religious personality. All other religions project the dark faces of hinduism. Here ezhil is showing them that they don't have a face per se!

I congradulate ezhil for this bold initiative and am waiting to see this happening in every street, village and town of tamilnadu.

எழில் said...

கிறிஸ்துமஸ் பற்றி கால்கரி சிவா பதிவு போட்டபோது, என்னவாக இருந்தால் என்ன எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தால் சரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று போட்டேன்.

என் நண்பருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்த பின்னூட்டத்தை பார்த்து எனக்கு இந்த பக்கத்தை அனுப்ப நானும், ஏதோ நாத்திகர்களிடமிருந்தும் முஸ்லீம்களிடமிருந்தும் நல்ல பெயர் கிடைக்கும் என்று (தவறாக) நினைத்து இந்த பக்கத்தை எழுதித்தொலைத்தேன்.

இப்போது என்னடாவென்றால், நிலையே தலைகீழாக இருக்கிறது
//
ஆனால் இந்தியா மறு ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு அடிமையாகாமல் உலகில் பெரும் வன்முறையை எங்கும் பரவ விட்ட இரண்டு மதங்களின் காலனியாகாமல் இருக்காமல் காக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அப்படி ஒரு பொறுப்பை எழில் எடுத்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது.
//

என்று என் சின்ன அப்பாவி தலைமீது பெரும் பனங்காயை வைக்க முயற்சிகள் நடக்கின்றது!

கால்கரி சிவா said...

//பாவ் சே போலோ, பியார் சே போலோ//

இந்த பாடலை நான் தினம் தினம் பாடுகிறேன் கேட்கிறேன் ஆனால் இது இணைவைக்கும் பாடல் என நீங்கள் வாழும் ஊரில் குற்றம் சாட்டப்படும்.

கிறிஸ்துமஸ் வந்த நாள் முதல் அமெரிக்காவின் ஊது குழல் CNN பெரும்பாலன கிறித்துவர்கள் வாழும் வட அமெரிக்காவில் இதே கருத்தை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நிகழ்சிகளை ஒளிபரப்பினார்கள். அதனால் இங்கே கலவரங்கள் வெடிக்கவில்லை.

//என்னிடம் வந்து சொன்னால் கூட உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று சொல்லுவேன்.//

நான் அபுதாபி (ரூவைஸில்) இருக்கும் போது என்னிடம் வந்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உங்களைபோல் உன் வேலையை பார்த்து போ என சொல்லும் தைரியம் எனகிருந்ததில்லை. அந்த அசட்டு தைரியம் உங்களுக்கும் வேண்டாம்.

எழில் said...

சகோதரர் மரைக்காயர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

//என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்,
ஒரே இறைமகன் இவர்தான் என்று சொல்வதாலும் இந்த மதங்களின் அடிபப்டையே மற்ற மதங்களை இழிவு படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

சில வேளைகளில் அப்படி இறையை கட்டுப்படுத்துவது அவர்கள் வைத்திருக்கும் "கட்டற்ற இறை" என்ற இலக்கணத்துக்கே பொருந்தாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.//

இறை என் தூதரிடம் மட்டும்தான் சொல்வார். அதற்குபின் வேறு யாரிடமும் சொல்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்று அடாவடியாக சொல்வது இறையை கட்டுப்படுத்துவது என்பதுதான் இந்த வரி சொல்வது.

நாளை இறைவன் என்ன செய்ய முடியும் முடியாது என்பதினை யார் அறிவார்?

இறைவனின் புகழ் மிகவும் பெரியது என்று சொல்வது அல்ல. அது வேறு இது வேறு.

--

ramachandranusha(உஷா) said...

சிவா, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாய் இங்கு இருக்கிறேன், ஓரே ஒருமுறை, ஒரு மருத்துவர் என் பொட்டு (திலகத்தை)கிட்டிசைஸ் செய்தார். நான் சாதாரண குரலில் அது என் சொந்த விஷயம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்துவிட்டேன். பல முஸ்லீம் பெண்களுடன் எனக்கு நட்பு உண்டு. இங்கு போன வாரம், ஏமானி (முஸ்லீம்) பெண் மருத்துவரிடம் பேசும்பொழுது சொன்ன வார்த்தைகள்- உன்னுடனான நட்பு என்பது, உஷா என்ற பெண்ணுடனான நட்பு மட்டுமே, நீ யார் என்ன, எந்த மதம், இனம் என்பது எனக்கு தேவை இல்லை என்றார். இப்படி பலரும் இருக்கிறார்கள்.பேச்சு ஆங்கிலம் என்பதால் பொதுவாய் படித்தவர்கள். சமூகம் என்ற ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல, மெத்த படித்த எல்லாம் தெரிந்த மேதாவிகள் கக்கும் விஷம் மொத்த சமுக்கத்தையே சீரழித்து வருகிறது.ஆனால், மதம் என்பது தனிப்பட்ட விஷயம், மத தீவிர வாதம் வாழ்க்கையை அழித்திவிடும் என்பதை எல்லாரும் அறிந்து வருகிறார்கள். இதை எல்லாம் அமீரகத்தில் இருந்து நான் பயந்துக் கொண்டு எழுதுகிறேன் என்று
நீங்கள் நினைத்தால் பொறுங்கள், ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்து விடுகிறேன் அப்பொழுது பல "உண்மை'" சம்பவங்களை எழுதுகிறேன்.:-)

எழில் said...

//பன்னிரெண்டு ஆண்டுகளாய் இங்கு இருக்கிறேன், ஓரே ஒருமுறை, ஒரு மருத்துவர் என் பொட்டு (திலகத்தை)கிட்டிசைஸ் செய்தார். //

பரவாயில்லையே.. சென்னையில் பீச்சில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியவில்லை. இயேசுவை விற்க வந்துவிடுகிறார்கள்.

தினந்தோறும்...

S.L said...

Ezhil,


//இறை என் தூதரிடம் மட்டும்தான் சொல்வார். அதற்குபின் வேறு யாரிடமும் சொல்வது தடுக்கப்பட்டிருக்கிறது என்று அடாவடியாக சொல்வது இறையை கட்டுப்படுத்துவது என்பதுதான் இந்த வரி சொல்வது. //

kalakiteenga..

North indiala neraya christiansum muslimsum inthu matham thirumpi varangannu padichiruken.

Namathu thamiz naatilum ithu arambithullathu romba santhosamarukuthu.

vazhthukal....

Hariharan # 03985177737685368452 said...

//பரவாயில்லையே.. சென்னையில் பீச்சில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியவில்லை. இயேசுவை விற்க வந்துவிடுகிறார்கள்.

தினந்தோறும்... //

எழில்,

வண்டலூர் zooல் மிருகங்களின் பெயர்/வழிகாட்டும் போர்டுகளுக்கு இணையாக இன்னொரு போர்டு "இங்கு மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்" என்பது.

வண்டலூர் ரயில்வே டிராக்குக்கு அந்தப்புறமாக இருக்கும் கல்வாரி ஜெபவீட்டிலிருந்து கிளம்பிவந்து பொதுமக்கள் காட்டுமிருகங்களைகூடக் கண்டு மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்!

இடம் பொருள் ஏவல் பார்க்காமல் இவனுங்க வந்து நம்மிடம் "தட்டுங்கள் திறக்கப்படும்.. கேளுங்கள் கொடுக்கப்படும்னு இவனுங்க தட்டுற ஜல்லி... கிள்ளிப் பார்த்துக்கணும் கிறிஸ்துஸ்தானில் இருக்கிறோமா என்று!

இயேசு தோன்றிய பெத்லஹேமில் கூட இப்படிக் கூப்பாடு இருக்காது! :-)))

கால்கரி சிவா said...

உஷா மேடம்,

ருவைஸில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று ஒரு கிளப் உண்டு. போன புதிதில் ஆர்வ கோளாறு அதிகமாகி என் மனைவியும் அந்த கிளபிற்கு செல்வார். அங்கு வரும் 5 வயது குழந்தையும் நீ இந்தி? நீ இந்து வா என கேட்கும்?. கள்ளம் கபடமற்ற குழந்தைக்கும் இந்து/முஸ்லிம் என கற்றுக் கொடுப்பது அரபு சமுதாயத்தில் மட்டும் தான் ( இந்திய முஸ்லிம்களை சொல்லவில்லை.)

அரபுகள் பெரும்பான்மையாக இருக்குமிடத்தில் நீங்கள் இருந்திருந்தால் நான் பார்த்த உண்மைகளைப் பார்த்திரூப்பீர்கள். நல்லவேளை என் அளவிற்கு நீங்கள் பாவம் செய்யவில்லை.

அராம்கோவில் வேலை பார்க்கும் போது ஒரு அரேபிய முல்லா குரானைப் பற்றியும் முஸ்லிமாக மாறுவது எப்படி என்பது பற்றியும் ஆங்கில புத்தகங்களை குடுப்பார். நாங்கள் வாங்கி வைத்துக் கொள்வோம். பிறகு சில நாட்கள் கழித்து அந்த புத்தகத்தை படித்தீர்களா என்று கேட்பார். நாங்களும் படித்தோம் என ஒப்புக்கு சொல்வோம். பிறகு இந்த சாப்டர் இந்த வசனம் பற்றி கேள்விகள் கேட்பார். நாங்கள் முழிப்பதைப் பார்த்தவுடன் சத்தம் போடுவார். நீங்கள் இஸ்லாமை அவமதிக்கிறீர்கள் என சத்தம் போடுவார். நாங்களும் அவரிடமிருந்து தப்பிக்க ஐயா எங்களுக்கு ஆங்கிலம் பேசவரும் ஆனால் எங்கள் தாய் மொழி தமிழ் அளவிற்கு புரியாது என சொல்ல அந்த மனிதர் மறுநாள் தமிழில் மதப்ரசார பேப்பர்களை தந்தார். பிறகு நான் சிறிது கடுமையாக "நாங்கள் பொறியாளர்கள். இந்த பேப்பரை படிக்க நேரமில்லை அதில் அக்கறையிமில்லை. இதற்காக உங்கள் நாட்டை விட்டு போக வேண்டுமென்றால் நாங்கள் ரெடி" என சொல்லவும் அந்த ஆள் சாமி வந்து ஆடியது என் கண்முன் நிற்கிறது. அங்கே எங்களின் பணி தேவையாய் இருந்தது அவர்களுக்கு.

என்னிடமும் நிறைய உண்மையான உண்மைகள் உள்ளன.

பெண்களுக்கு அரபு நாட்டில் விடுதலை கம்மிதான் ஆண்கள் அளவிற்கு உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை என்பதே மிகப் பெரிய உண்மை

சாரி எழில் பதிவிற்கு சம்பந்தமில்லாதது

Anonymous said...

எழில்,

கட்டுப்படுத்தபட முடியாத இறை என்பது முட்டாள்தனமான ஒரு கோட்பாடு. இறைவன் தன் பக்தனின் அன்புக்கு கட்டுப்படுவான் என்பது இந்துமத கோட்பாடு.அன்புக்கு கட்டுப்படாத இறைவன் வெறும் அரக்கனாகத்தான் இருக்க முடியும்.

இறைவனை தாயாகவும், தந்தையாகவும் காண்பது இந்துமதம். தாயும்,தந்தையும் குழந்தையின் அன்புக்கு கட்டுப்பட்டே தீருவார்கள். அதே சமயம் குழந்தை தவறு செய்தாலும் அன்போடு கண்டிக்க தவறமாட்டார்கள். இந்துமதத்தின் இப்படிப்பட்ட கோட்பாடுகளால் தான் பாரதியால் 'கண்ணன் என் தோழன்,கண்ணன் என் சேவகன்' என்று எழுத முடிந்தது.

"பக்தி ஒன்றுக்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன்" என கீதையில் கண்ணன் கூறுகிறான்.

இறைவனை தாயாகவும், தந்தையாகவும் பார்ப்பதால் தான் இந்துமதத்தில் நித்திய நரகம்,இறைமறுப்போருக்கு நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லை.ஆனால் ஆபிரகாமிய மதங்களில் மனிதன் இறைவனின் அடிமையாக தான் கருதப்படுகிறான். அதனால் தான் அவர்கள் இறைவன் கட்டுப்பாடற்றவன் என்றூ சொல்லி அரக்க குணங்களை இறைவனுக்கு கற்பிக்கின்றனர்.

இறைமறுப்போரை நரகத்தில் தள்ளி வறுத்தெடுக்க கட்டுப்பாடற்ற அரக்க குணம் படைத்த இறையால் மட்டுமே முடியும். அன்புக்கு கட்டுப்படும் இறையால் அப்படி செய்ய இயலாது.

Anonymous said...

எழில்,

கட்டுப்படுத்தபட முடியாத இறை என்பது முட்டாள்தனமான ஒரு கோட்பாடு.இறைவன் தன் பக்தனின் அன்புக்கு கட்டுப்படுவான் என்பது இந்துமத கோட்பாடு.அன்புக்கு கட்டுப்படாத இறைவன் வெறும் அரக்கனாகத்தான் இருக்க முடியும்.

இறைவனை தாயாகவும்,தந்தையாகவும் காண்பது இந்துமதம்.தாயும்,தந்தையும் குழந்தையின் அன்புக்கு கட்டுப்பட்டே தீருவார்கள்.அதே சமயம் குழந்தை தவறு செய்தாலும் அன்போடு கண்டிக்க தவறமாட்டார்கள்.இந்துமதத்தின் இப்படிப்பட்ட கோட்பாடுகளால் தான் பாரதியால் 'கண்ணன் என் தோழன்,கண்ணன் என் சேவகன்' என்று எழுத முடிந்தது.

"பக்தி ஒன்றுக்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன்" என கீதையில் கண்ணன் கூறுகிறான்.

இறைவனை தாயாகவும்,தந்தையாகவும் பார்ப்பதால் தான் இந்துமதத்தில் நித்திய நரகம்,இறைமறுப்போருக்கு நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லை.ஆனால் ஆபிரகாமிய மதங்களில் மனிதன் இறைவனின் அடிமையாக தான் கருதப்படுகிறான்.அதனால் தான் அவர்கள் இறைவன் கட்டுப்பாடற்றவன் என்றூ சொல்லி அரக்க குணங்களை இறைவனுக்கு கற்பிக்கின்றனர்.

இறைமறுப்போரை நரகத்தில் தள்ளி வறுத்தெடுக்க கட்டுப்பாடற்ற அரக்க குணம் படைத்த இறையால் மட்டுமே முடியும்.அன்புக்கு கட்டுப்படும் இறையால் அப்படி செய்ய இயலாது.

எழில் said...

கட்டுப்படுத்துவது என்ற வார்த்தைக்கு பல பொருட்கள் இருக்கின்றன.

இறைவன் தன் பக்தனின் அன்புக்கு கட்டுப்படுவான் என்பது வேறு.

இறைவனை இந்த காரியம் செய்யக்கூடாது என்று உங்களால் தடுக்க முடியும் என்பது வேறு.

To say in english, Mother and father love the kid and responds to him for his requests is one thing.
But thinking that the kid controls the father is a different thing.

பக்திக்கு கண்ணன் கட்டுப்படுகிறான். அதன் பொருள் பக்தனுக்குள் ஆன்மீக விளக்கை எரிய தூண்டுகிறான் என்பதே. Bakthi provides fast route to realization.

மனத்தை பாத்திரமாகவும் பிரம்மத்தை கடலாகவும் உருவகித்தால், முயற்சி செய்தால், கடலின் ஒரு துளியை நம் பாத்திரத்தில் மொள்ளலாம். பக்தி அதற்கு உதவும்.

ஆனால், கடலை முழுவதும் பாத்திரம் மொண்டுவிடுமா? கடல் பிரம்மாண்டமானது. பாத்திரத்தில் இருப்பதும் கடல்தான். வெளியே இருப்பதும் கடல்தான்.

அதே உருவகத்தை பல்வேறு கடவுளின் உருவகங்களுக்கும் கொண்டுவரலாம். இறைவன் முருகனாகவும் இருக்கிறான். இறைவன் சிவனாகவும் இருக்கிறான். இறைவன் கண்ணனாகவும் இருக்கிறான். இறைவன் சரஸ்வதியாகவும் இருக்கிறான். இறைவன் சுடலை மாடனாகவும், அய்யனாராகவும் இருக்கிறான். அந்தந்த பாத்திரங்களில் இருப்பதும் கடல்தான். அதற்கு வெளியே இருப்பதும் கடல்தான். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஈசனை உருவகங்களில் அடைத்துவிட முடியாது. அதனால்தான் இறைவனை கூறும் தமிழ் வார்த்தை கடவுள் என்று இருக்கிறது. உருவகங்களை கடந்து உள்ளே இருப்பவன் கடவுள்

Anonymous said...

எழில்,
குருவி தலையில் பனங்காயைத் தானே வைக்க முயற்சி நடந்தது். பலாக்காயை வைக்கவில்லையே?
ராமச்சந்திரன் உஷா சொன்னது போல பத்து வயதுச் சிறுவனின் சுண்டு விரலில் கோவர்த்தனகிரியே தூக்கி நிறுத்தப் படுவதை நம்புகிறேன் என்கிறீர்கள். குருவியால் பனங்காயைத் தூக்க முடியாதா என்ன? சில நூறு 'புரட்சிக் காரர்களை' வைத்துக்கொண்டு லெனின் ரஷ்யாவைக் கைப்பற்றவில்லையா? [அந்த சில நூறு பேர் புரட்சியாளரில் பெரும்பாலாரை அவரும் ஸ்டாலினும் பின்னால் கொன்று கூறு போட்டதை நாம் நினைவு கொள்ளாமல் இப்போதைக்கு விடுவது நல்லது இல்லையா?]
'பெருந்தலைவர்' மாவோவும் அதே போல சில ஆயிரம் விவசாயிகளைப் பஞ்சம் பட்டினி எல்லாம் கடந்து அழைத்து வந்து சீனாவைக் கைப்பற்றவில்லையா?
இன்று ஒரு பத்தாயிரம் அமேச்சூர் புரட்சித் திலகங்கள் மத்திய இந்தியாவையே கைப்பற்றி வைத்துக் கொண்டு இந்திய ராணுவம், போலீஸ் எல்லாவற்றுக்கும் கடுக்காய் கொடுக்கவில்லையா?
நீங்களே செய்தி தரும் உல்ஃபா மட்டும் என்ன? இந்திய அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்களே? நந்திகிராமத்தில் ஆனானப்பட்ட சிபிஎம் சில பல்கலை மாணவர்களால் தூண்டி விடப்பட்ட கிராமத்தினரின் ஆர்ப்பாட்டத்தைக் கையாள முடியாமல் விழி பிதுங்கி நிற்கவில்லையா?
ஏன் புரட்சி சூரியன் மாவோவின் கொடுங்கோலாட்சி கவிழ இருந்த பல காரணங்களில் இந்தக் குருவிகளும் ஒரு கணிசமான பங்கு வகித்ததுதான் மறந்து விட்டீர்களா?
குருவியாய் இருந்து காலைக் கீச்சிடல்களில் எத்தனையோ கோடி மக்களின் வாழ்வில் ஒலியால் ஒளியை மலர வைக்கும் ஒரு பிராணி/ ஜீவன் என்ன சாதாரணப் பிறவியா? 'காற்றை முத்தமிடும்' அதிருஷ்டம் செய்த பிறவியாயிற்றே?

இந்த கடவுள்- அனைத்தையும் கடந்து உள்ளே இருப்பவன் என்பதெல்லாம் சும்மா வார்த்தைப் பந்தல் இல்லையா? அனைத்து ஜீவராசிகள், அனைத்துப் பொருட்கள், அனைத்து சக்திகள் என்று மனித அறிவுக்கு எட்டியது எட்டாதது எல்லாவற்றையும் தாண்டியதும், அதுவேயானதும் அதுவல்லாததும், எல்லாமானதும் எதுவுமில்லாததும் தானே பரம்பொருள்?
என் சிறு வயதில் ஒரு நண்பர் பலமாகச் சொல்வார்- அவருக்கு வடமொழி தெரியும். எனக்குத் தெரியாது. அவர் சொன்னதில் ஒரு சொற்றொடர், இல்லை ஒரு phrase மட்டும் என் மனதில் தங்கியது. அவர் சொன்னார்- அது, பூர்ணாது பூர்ணதரம் என்றார். விளக்கமாகச் சொன்னபோது, முழுமைக்கும் அது உட்படாதது, ஏனெனில் முழுமையையும் அது உள்ளடக்கியது, சூனியத்தையும் என்று விளக்கினார். அப்படிப் பட்ட ஒன்றை அன்பால் கட்ட முடியும், பக்தியால் கட்ட முடியும் என்பதெல்லாம் anthropocentric thinking. Anthropomorphic longing or desire என்றுதான் என்னால் கருத முடிகிறது. ஆனால் அதே நேரம் இதை வெறும் பேராசை, அல்லது விழைவு என்று நான் ஒதுக்கவில்லை. எங்கும் நிறை ஒன்றால், எல்லாம் வல்ல ஒன்றால் பக்தர் அல்லது அன்பர் அல்லது முழு ஈமான் உள்ளவரிடம் கட்டுப்படுவது போல நடிக்கவோ அல்லது ஒரு தோற்றம் தரவோ முடியாது என்று சொல்ல நாம் யார்?
இதை நான் நம்புகிறேன் என்றில்லை. இதை ஒரு தர்க்க அறிக்கையாக முன் வைக்கிறேன்.
கடவுளின் இயல்பாக இந்த சர்ச்சையைத் திசை திருப்பாமல், முதலில் துவங்கிய புள்ளியில் மறுபடி திரும்புவது நமக்கு உதவலாம். அதாவது, பிற மதங்கள் பண்பாடுகளெல்லாம் வெறும் குப்பை, தம் மதம் மட்டுமே, இறை மட்டுமே, அறம் மட்டுமே, வேதப் புத்தகம் (சுவிஷேசம்) மட்டுமே புனிதமானது, உண்மையானது என்று தான் நம்புவதோடு நில்லாமல் உலக மாந்தர் அனைவரையும் கடைத்தேற்றியே தீர்வோம் அல்லது அவர்களை நரகத்திற்கு ஒப்பான நிலையில் தள்ளுவோம் என்று இரு பண்பாட்டு ஏகாதிபத்தியங்கள் கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு, அணுகுண்டு சகிதமாக நம்மை அச்சுறுத்தும் ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதில் இருந்து மீண்டு நாம் நாமாக வாழ்வதற்கு, நம் பெண் மக்கள் ஒரு துணிக் கூடாரமாக வாழும் அவலம் அவர்களுக்கு நேராமல் இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையாய்த் திரண்டு, எங்களுடைய மதம் புனைகதையானாலும், பழங்கதையானாலும், எதுவானாலும் சரி, அது எங்கள் தேர்வு, எங்கள் வாழ்வு, எங்கள் அறம், விலகி நில்லுங்கள், ஆக்கிரமிப்பை உலகாளும் பேராசையைக் கை விடுங்கள் என்று சொல்வதற்கு ஒரு ஆரம்பச் சுழி போட்டீர்களே அங்கு திருப்புங்கள் விவாதத்தை. ஊருப்படியாக ஏதாவது விளையும்.
ராமச்சந்திரன் உஷா சொல்வதில் ஒரு கருத்தை நான் ஏற்கிறேன். விமர்சனத்தையும் இழிவுபடுத்தாமல் உண்மை விவரங்களோடு எழுதினால் அதற்கு மேலான விளைவு இருக்கும். அவர் எதையும் சகியுங்கள், நன்மை விளையும் என்று சொல்ல முயல்கிறாற்போல எனக்குத் தெரிகிறது. எப்போதும் ஒதுங்குவது அறம் நிலவும் மண்ணில் வேலை செய்யும். உலகம் அறநிலைக் களம் அல்ல. மறக் களம்.

எழில் said...

சகோதரர் ஸயீத் அவர்கள் நான் எழுதியதை மேற்கோள் காட்டி சகோதரர் மரைக்காயர் பதிவில் விளக்கியிருக்கிறார்கள்.
http://maricair.blogspot.com/2007/01/blog-post_08.html
//
//"என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்//

எழில்.

தவறு அனைத்து சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒன்று. இறைத்தூதர் என்றால் எதோ இராஜங்கப்பதவி ஒன்றுமில்லை ஒரு மனிதருக்கு இறைவனைப்பற்றி அறிவிக்க கிடைக்கும் ஒரு பாக்கியம் அவ்வளவே. அவர்களிடத்திலும் அவர்களின் பொறுப்புப் பற்றி விசாரிக்கப்படும்.
//
அவர்களின் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படும் என்றால் என்ன பொருள்? முஹம்மது அவர்கள் தன் பொறுப்பை நன்றாக செய்தாரா இல்லையா என்பது அல்லா அவர்களுக்கு தெரியாதா? அப்படி அவர் சரியாக செய்யவில்லை என்று நினைத்தால் இன்னொரு தூதரை அல்லா அவர்கள் அனுப்புவாரா?

இஸ்லாமியரது பக்கங்களை படித்தவகையில், முன்பு என் கேள்விகளுக்கு அன்புடன் பதிலளித்த சகோதரர்களது பக்கங்களை படித்த வகையில் முஹம்மது அவர்களே இறுதிதூதர். அவருக்குப் பின் யாரும் வரமாட்டார்கள் என்பதுதான் அவர்களது கொள்கையாக நான் அறிந்தது. அவ்வாறு கூறுவது இறையை கட்டுப்படுத்துவதாகும் என்று நான் நினைப்பது.

Anonymous said...

"தவறு அனைத்து சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒன்று."

A muslim has criticised this approach and has exposed this islamic fraud.

http://www.geocities.com/nvkashraf/claims-crit/md-jesus.html




A RESPONSE TO M.N. ANDERSON'S ARTICLE:
"Prophet Muhammad in Hindu Scriptures?"

Mr. Anderson, while attempting to answer the claims of prophecy about Prophet Muhammad in Hindu scriptures alleges that the Hindu scriptures have been continuously modified to incorporate Christian and Islamic ideas [1]. He has substantiated his view with citations from the Rig Veda, Bhavishya Purana, Upanishads and Bhagavad Gita. We will soon realize that Mr. Anderson has drawn his conclusions from translations taken mostly from the works of Mr. Aravindaksha Menon and Dr. Z. Haq [2,3], who have mistranslated and interpolated many verses to extract what they wanted.
Mr. Anderson's view is probably true in the case of the Puranas but not in the case of Bhagavad Gita, Rig Veda and the Principal Upanishads. In this article, I produce original translations of the verses and compared them with those cited by Mr. Menon and Dr. Haq to prove my point.
I have been studying the Muslim claims on the prophecy of Muhammad in Hindu scriptures for quite some time now. I have also produced my thoughts on this much disputed claim.


SECTIONS

1
Muhammad and Jesus in Hindu scriptures

2
Biblical verses in the Rig Veda?

3
The concept of `hell' in Hinduism

4
Machine, Electricity and Oxygen in Hindu scriptures?

5
Conclusion




(1) Muhammad and Jesus in Hindu scriptures
Being a tolerant faith, Hinduism offers a great degree of freedom to interpret its scriptures. Ironically, this freedom has been abused by Muslim and Christian scholars to read their ideas into these texts. We will soon see that their claims of prophecies from the Vedas are a result of mistranslations and misinterpretations.

(i) The status of the Puranas
As regards to Muhammad in Hindu scriptures, I have the following comments to make about Bhavishya Purana. Hindu scriptures have been categorized into two: Sruti and Smriti. The Srutis (="Heard" or Revealed texts) are the primary ones, while the Smritis (="Remembered") are the secondary ones. While Srutis contain mostly information of transcendental nature meant for saints and rishis, Smritis contain mostly teachings of worldly nature for the general public. The secondary scriptures Smritis were composed by great sages based on Vedic truths.
Says Swami Mukhyananda: "It is laid down that Vedic truths must be elaborated and expounded through the Ithihasas and Puranas. The Smritis derive authority from the Vedas and are subordinate to them. They may undergo changes and modifications in time. However, anything in them transgressing the Vedic truths, loses its authority and is inoperative" [6]
Of all the 18 Puranas, only Srimad Bhagavatam (or Bhagavata Purana) is the most popular one and widely quoted [4]. Citing anything from the Puranas to prove a point has no weightage. In fact there are more Puranas that the traditional number of 18. Swami Mukhyananda says: "Though the traditional number 18 is kept up, actually the number of Maha-Puranas and Upa-Puranas exceeds 18 as new ones have been added". [6]
Other scholars also hold the same view that the Puranas have undergone change. Talking about Puranas, Sidharth says on page 52 in his famous book "The Celestial Key to the Vedas": "Unlike the core Vedic literature, the Puranas have suffered additions and alterations" In spite of the Puranas being classified as Smritis by Hindus themselves, Muslim scholars like Vidyarthi and Ali have desperately tried to elevate their status as Revealed literatures or Words of God [5]. The only Smriti literature to be considered as the Word of God is the Bhagavad Gita and certainly not the Puranas. Vidyarthi and Ali even state that the Bhavishya Purana is the chief among the 18 Puranas. How ridiculous!

(ii) Prophecies in Sama, Rig and Atharva Vedas
Mr. Anderson also quotes, from Dr. Haq's article, a verse from Sama Veda (II:6.8) which supposedly prophecies the advent of Prophet Muhammad:

Ahmad acquired religious law (Shariah) from his Lord. This religious law is full of wisdom. I receive light from him just as from the sun.


The copy of Sama Veda I have, follows a different numbering system [7] and I am therefore unable to comment anything on the authenticity of this translation. However, I have a comment to make on the verse from Rig Veda (V.27.1) which Dr. Haq quotes to prove the prophecy of Muhammad [3].



The wagon-possessor, the truthful and truth-loving, extremely wise, powerful and generous, Mamah [Mohammad] has favored me with his words. The son of the All-powerful, possessing all good attributes, the mercy for the worlds has become famous with ten thousand [companions].



Dr. Haq has reproduced this translation from the work of Vidyarthi and Ali [5]. But this is how Griffith translates the same verse:



THE Godlike hero, famousest of nobles, hath granted me two oxen with a wagon. Trvrsan's son Tryaruna hath distinguished himself, Vaisvanara Agni! with ten thousands.



The difference is there for all of us to see (corresponding words have been highlighted in both translations). Vidyarthi's 'translation' is nothing but a wrong interpretation or a wrong translation. Is Muhammad in anyway the son of the All-powerful? How did Dr. Haq miss these words while presenting the `translation'? Don't these words suit Jesus better than Muhammad?
Dr. Haq also talks about more Prophecies in Atharva Veda! He quotes three verses from Chapter 10 as a proof for the prophecy about Ka'ba, the holy house of Muslims. Here I have compared the translations he has produced with that of the translations by Devi Chand.


Translations in Dr. Haq's article
Translations by Devi Chand

[On Ka’bah]
Whether it is built high, its walls are in a straight line or not, but God is seen in every corner of it. He who knows the House of God, knows it because God is remembered there..

Atharva Veda X, 2, 28:
Was man created in Heaven or the atmosphere or in all directions is a question worth considering. He who knows the creation of God, can best answer the question. The soul is called Purusha as it lives in the world created by God.

[On Holy Sanctuary (House) and Ka’bah]
This abode of the angels has eight circuits and nine gates. It is unconquerable, there is eternal life in it and it is resplendent with Divine light.

Atharva Veda X, 2, 31:
This citadel of the body, unconquerable by the ignorant, equipped with circles eight and portals nine, contains the soul of full of myriad power, ever marching on the joyful God, surrounded by the Refulgent Supreme Being.

[On Abraham & more on Holy Sanctuary & Ka’bah]
Brahma (Abraham) stayed in this abode which is illumined by heavenly light and covered with Divine blessings. It is the place that gives (spiritual) life to the people and is unconquerable.

Atharva Veda X, 2, 33:
God resides in the soul, bright with exceeding brilliancy, beautiful, compassed with glory round about, multipowered never subdued.


I have highlighted (in bold, underline or colour) the corresponding differences in these two translations. Only the last translation (of verse X, 2, 33) looks similar. Dr. Haq of course interprets it differently.
Devi Chand's translation clearly indicate that the series of verses in Chapter 10 of Atharva Veda refer to man and his soul and not the Ka'ba as Dr. Haq (to be precise Dr. Vidyarthi and Ali) interpret. The words for "creation of God" has been translated as "House of God", and the words for "created in Heaven" as "built high". In the next verse, we see the soul ("the citadel of the body", as Devi Chand translates) being translated as "abode of the angels"!!
Translator Devi Chand remarks that the eight circles or circuits are the eight parts of the Yoga: Yama, Niyama, Asana, Pranayamam Pratyahara, Dharna, Dhyana and Smadhi. By `interpreting' the eight circles as hills surrounding Ka'ba, Mr. Vidyarthi has let his imaginations run wild!
And what about the 9 gates? According to Vidyarthi and Ali, it is a reference to Ka'ba!

"The House of God has nine gates - Baab-e-Ibrahim (Abraham) , Baab-al-Wedaa, Baab-as-Safa, Baab-e-Ali, Baab-e-Abbas, Baab-un-Nabi, Baab-as-Salaam, Baab-az-Ziyarat, and Baab-e-Haram. Further, the eight circuits are the natural lines enclosing the areas between the surrounding hills, the names of which are: Jabal-e-Khaleej, Jabal-e-Qaiqaon, Jabal-e-Hindi, Jabal-e-Laalaa, Jabal-e-Keda, Jabal-e-Abu Hadidah, Jabal-e-Abi Qabees, and Jabal-e-Umar".



The reference to 9 gates occur quite commonly in many Hindu scriptures and one would expect Mr. Vidyarthi to have cited these verses also to `substantiate' his claim. There are only two possibilities: Either he was not aware of its occurrence in other texts or he ignored them as they clearly refer to the body.
Here I have reproduced slokas from the Gita, Upanishad and Thirumandiram to prove that the 9 gates in these verses refer to the 9 portals in human body: 2 eyes, 2 ears, 2 nostrils, mouth, anus and genital.


Nine Gates in Tirumandiram

He fashioned this body,
Into that body He breathed life;
And set gates nine; (470)
Nine Gates in Svetasvatara Upanishad

It is He who resides in the body,
The city of 9 gates. He is the soul
That sports in the outside world..." (3:18)

Nine Gates in Bhagavad Gita

The stable person, renouncing work through knowledge,
Neither acts himself, nor forces action on others,
But takes refuge in the body, the city of 9 gates (V: 13)


The verse from Svetasvatara Upanishad clearly proves that the 'city' is the Body, 9 `gates' are the apertures and 'He' refers to the soul which resides in the body! All texts of Vedanta, the Upanishads in particular, predominate with the thesis that the "Atman" (or the individual "soul") is one with Brahman, the Absolute [22]. This is the message reiterated again and again, in the verses of Atharva Veda and Upanishad cited above. And not Ka'ba or anything of that sort!
I do not say that all the other translations which Dr. Haq has produced to prove the prophecy of Muhammad are mistranslated ones. I don't have the translations of Bhavishya Purana with me. Soon I will find out the truth. If the above `translations' of Rig and Atharva Veda are an indication, I have every reason to doubt the validity of their other `translations' also!
Muslims have invariably tried to understand other religions from their point of view. Sanskrit words that sound similar to those in Arabic were often distorted to fit similar equivalents. The best of all examples is the mistaken identity of `Brahma' for `Abraham' [3,8]. Dr. Haq mentions a series of similar mistaken identities: Manu for Nuh (Noah), Saraswathi for Sarah, and of course Mamah for Muhammad! Indeed, some Muslim scholars have let their imaginations run wild!

(iii) Semitic prophecies in Vedic texts & Vedic seers in Semitic texts
The most important point is this. How can Muslims point out Muhammad's name in Hindu scriptures which the Qur'an doesn't even mention? Or for that matter, from Vedic texts which are built on the contrasting doctrine of Samsara (rebirth)? My question is applicable to Christians too who claim about Jesus in Hindu scriptures [2]. It makes sense to look for Muhammad's name in the Judeo-Christian scriptures as he not only referred them frequently in the Qur’an but also regarded his revelation as a confirmation of the earlier ones.
Some Muslims also claim that the `Kalki' avatar of Hindus, the `Maitreya' Buddha of Buddhists and the `Soeshyant' of Zoroastrians refer to Muhammad! [5,9,10]. These claims leave us in an interesting scenario. While the Hindus, Buddhists and Magians are eagerly expecting the arrival of the saviour, the Muslims claim that he has already come and gone! How will the Hindus, Buddhists and Parsis accept some one who appeared in an alien land and disappeared without their own knowledge? Muhammad remained unknown to these natives for all these years and the Muslims had to come, `interpret' their scriptures and tell them that their Kalki, Maitreya and Soeshyant have already come and gone! What use are prophecies then?
There are also Muslim scholars who claim that Zul-Kafil of the Qur’an (21:85) is the Buddha [10]. How can the Quran mention about the Buddha, who was an agnostic? The Muslims never address these issues but try to convince others that Buddha's original teaching was built around monotheism! [10]. This is a classic example of Muslims trying to understand other religions through Islamic eye. The belief of Islam as `God's Original Religion' has forced Muslims to somehow read their ideas into other's scriptures. And of course also to convince (or confuse?) the Buddhists and attract some converts. Interestingly, the Khalifite web site (www.submission.org) contains a glossary which states that Zul-Qurnain was most probably the Buddha! First and foremost, Buddha never claimed to be a prophet. His teachings were based on the Vedic doctrine of Karma (Action), Samsara (Rebirth) and Moksha (Liberation) and no way even remotely related to the Judeo-Christian beliefs!