Tuesday, July 05, 2011

மாடு வாங்கவந்த முஸ்லீமுக்கு 11 வயது மகளை விற்ற தமிழர் !

மாடு வாங்கவந்த முஸ்லீமுக்கு 11 வயது மகளை விற்ற தமிழர் !
இவ் விடயம் 05. 07. 2011, (செவ்வாய்),தமிழீழ நேரம் 13:00க்கு பதிவு செய்யப்பட்டது

செய்திகள்50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு காங்கேயனோடையில் வைத்து பட்டிப்பளை காவல்துறையினர் நேற்று மீட்டுள்ளனர்.



மாடு வாங்க வந்தகாங்கேயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது மகளை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி விற்றுள்ளார்.



இந்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதாக கூறி நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.



சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங்கிய தகவலை அடுத்து பட்டிப்பளை காவல்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



பட்டிப்பளை காவல்துறையினர் நவ கிராமிய சிறுவர் அமைப்பு தலைவர் மா.பஞ்சலிங்கம்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் காங்கேயநோடைக்கு நேற்று சென்று காங்கயநோடையில் நயுமுதீன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர். அத்துடன் விலைபேசி வாங்கிச் சென்ற நயுமுதீனையும் கைது செய்ததுடன் விற்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் பட்டிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இன்று சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பாரப்படுத்துவதுடன் விற்ற தந்தையையும் கொள்வனவு செய்த நயுமுதினையும் இன்று பட்டிப்பளை காவல்துறையினர் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர்.



சிறுமியை விற்றவருக்கு மூன்று திருமணம் என்றும் ஏற்கனவே இரண்டையும் கைவிட்ட நிலையில் மூன்றாவது திருமணத்தில் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையே தற்போது அவர் முஸ்லீம் ஒருவருக்கு விற்றுள்ளார் என்றும் அறியப்படுகிறது. இந்த மாட்டு வியாபாரியான நயமுதீன் என்ற இந்த முஸ்லீம் 11வயது சிறுமியை வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

2 comments:

saarvaakan said...

வணக்கம் நண்பரே!!!!!!!!!

அந்த பெண்ணின் அப்பன் மனிதனா இல்லை மிருகமா!!!!!!!!
வாங்கியவனும் ஒரு மிருகம்!!!!!!!!
கொடுமை!!!!!!!!!!
நன்றி

Tamilan said...

//இந்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதாக கூறி நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.//

இதை படிக்கும் போது இரத்தம் கொதிக்கிறது... அந்த துலுக்கனுக்கும் , அந்த பெண்ணின் அப்பனையும் நடுரோட்டில் வைத்து தூக்கில் இடவேண்டும்.