Wednesday, January 30, 2008

மீண்டும் தென்காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம் - பாஜக தலைவ கொலை

தென்காசியில் பாஜக தலைவர் படுகொலை
நெல்லை மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் ராஜபாண்டி, அடையாளம் தெரியாத நபர்களால் தென்காசியில் திங்களன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தென்காசியில் வசித்து வந்த ராஜபாண்டி (50), தனது வியாபார விஷயமாக இரு சக்கர வாகனத்தில் ஆலங்குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

காலை 7 மணியளவில் கல்லூத்து சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ராஜபாண்டியை அரிவாளால சரமாரியாக தாக்கினர். வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளதில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன் தென்காசி நகரில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது.

தற்போது பாஜக தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது தென்காசி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

Anonymous said...

இதுக்கெல்லாம் கோசுகுமாரன்கள் வரமாட்டார்களே?