Wednesday, April 20, 2011

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 08:58.23 மு.ப GMT ]
பிரிட்டனில் பர்தா அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும்போக்கு கொள்கையுடைய இந்த முஸ்லிம்கள் கிழக்கு லண்டனில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒரு பெண் மருந்தாளர் தான் பர்தா அணியுமாறு அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் அவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தியமை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேர்மிங்ஹம் தொகுதியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் மஹ்மூத் கருத்து வெளியிடுகையில்,"இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்துள்ளார். அதோடு இவர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் பர்தா அணிய வேண்டியது உங்கள் கடமை என்பதை சகோதர உணர்வோடு யாரும் யாருக்கும் ஞாபகமூட்டலாம். ஆனால் அதற்காக உங்களைக் கொல்லுவோம் என்று அச்சுறுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று பிரிட்டனில் உள்ள பிரபல முஸ்லிம் மதகுரு ஒருவரும் தெரிவித்துள்ளார்.

No comments: