Friday, April 15, 2011

ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா நாளை

ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா நாளை Friday, 08 April 2011 09:19 Hits: 18
திருக்கோவில் நிருபர் : ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்து மாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அதிதிகளாக நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சுவாமி சர்வ ரூபானந்தாஜீ,மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஞானமயானந்தாஜீ மகராஜ், அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர்,வி.கயிலாசபிள்ளை,இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விழாவில் சான்றோர் கௌரவிப்பு வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்,இந்து அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

No comments: