Monday, February 26, 2007

மலேசியாவில் உடைக்கப்படும் இந்துகோவில்கள்-வீடியோ

மலேசியாவில் உடைக்கப்படும் இந்துகோவில்கள் பற்றிய வீடியோ



மலேசியர்கள் நல்வழிக்கு திரும்ப விரும்புவோம்!

8 comments:

கால்கரி சிவா said...

நெஞ்சு பதறது அய்யா.
ஒருவர் மிக அப்பாவியாக "சொல்லியிருந்தா நாங்க முறைப்படி கோவிலை மாற்றி வேறு இடத்திற்கு சென்றிருப்போம். ஆனால் இப்படி உடைத்து விட்டார்களே. அவர்களி பள்ளி வாசலை இப்படி உடைத்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா" என கதறுகிறார். விக்கித்து விட்டேன் ஐயா. இந்த அநியாத்தை உலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாம் ஆனால் சக இந்து, சக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. கருப்பு கொடி கேடிகள் தமிழ் என்ற உடன் ஓடி வருவார்கள். எங்கே அவர்கள்?

அரவிந்தன் நீலகண்டன் said...

அங்கு மட்டுமல்ல எழில், இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய தமிழ்நாட்டு கிராமங்களில் கூட இந்து கோவில்கள் உடைக்கப்படுகின்றன. காவு கோவில்கள், அய்யனார் கோவில்கள், அய்யாவழி பதிகள் இடிக்கப்படுகின்றன. சாதுவாக இருக்கும் இந்து சமுதாயம் தரும உணர்வு கொண்டு பொங்கி எழும் நாள் விரைவில் இல்லை. அன்று காடும் நாடும் தாங்காது.

அரவிந்தன் நீலகண்டன் said...

அங்கு மட்டுமல்ல எழில், இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் இந்திய தமிழ்நாட்டு கிராமங்களில் கூட இந்து கோவில்கள் உடைக்கப்படுகின்றன. காவு கோவில்கள், அய்யனார் கோவில்கள், அய்யாவழி பதிகள் இடிக்கப்படுகின்றன. சாதுவாக இருக்கும் இந்து சமுதாயம் தரும உணர்வு கொண்டு பொங்கி எழும் நாள் விரைவில் இல்லை. அன்று காடும் நாடும் தாங்காது.

Anonymous said...

They are breaking the temples since the Malays are coming to Hindu temples more and more.

And the Malaysian state does not want that.

Anonymous said...

இந்தக் கொடுமை இலங்கையிலும் தான் நடக்கிறது. எத்தனையோ கோயில்களை ஆக்கிரமிக்கிறார்கள், அழித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தான் சைவத்தையும், தமிழையும் பிரித்துப் பார்க்கும் பம்மாத்து உண்டு, மற்ற நாடுகளில் தமிழர்களைத் தாக்க விரும்புகிறவர்கள் இந்துக் கோயில்களைத் தான் முதலில் தாக்குகிறார்கள். இலங்கையிலும் ஒவ்வொரு இனக்கலவரத்திலும் இந்துக் கோயில்களையும், குருமார்களையும் தான் முதலில் தாக்கினார்களாம்.

இந்தியாவில் ஒரு மசூதி தாக்கப்பட்டால், பலரும் குரலெழுப்புவார்கள், ஆனால் முஸ்லீம் நாடாகிய முஸ்லீம் நாட்டில் இந்துக் கோயில்கள் அழிக்கப்படும் போது சும்மா ஒரு சாட்டுக்காகவாவது எந்த இந்திய முஸ்லீமும் இதைக் கண்டிக்கவில்லை. ஹிட்லர் யூதர்களின் கோயில்களை ஜேர்மனியில் அழித்த போது பல ஜேர்மன்காரர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர் ஆனால் தமிழர்களின் கோயில்கள் மலேசியாவில் இடிக்கப்படும் போது "தமிழர்களாகிய" சுல்தான்களும், சுவனப்பிரியர்களும், சாத்தான்குளத்தான்களும் ஒரு சாட்டுக்குக் கூட கண்டிக்கவில்லை. அப்படியானால் நாசிகளை விடவா "தமிழ்" முஸ்லீம்கள் மோசமானவர்கள்?

Anonymous said...

காதில் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது: "அந்த அளவு கேவலமாப் போய்ட்டமா"

Sundar Padmanaban said...

ஓமானின் மஸ்கட்டில் என்ன அழகான கிருஷ்ணன் கோவில் இருக்கிறது தெரியுமா? எதிரிலேயே அழகான சர்ச். அதே போல கார்னிஷ் தாண்டி சில கிலோமீட்டர்கள் பயணித்தால் மலைகளின் நடுவே அழகாக அமைந்திருக்கும் அருமையான சிவன் கோவில். அதற்கு அருகாமையிலேயே மசூதி. இக்கோவில்களின் காவலாளிகளாக ஓமானிகள். ஓமானின் ஓமானிகள் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சகிப்புத்தன்மை என்றால் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியதும் நிறைய உண்டு.

//மலேசியர்கள் நல்வழிக்கு திரும்ப விரும்புவோம்!//

மலேசியர்கள் இதை விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

இதை நடத்தும் அரசாங்கத்தின் ஆதிக்கவெறி மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


நம்மூரில் நடுரோட்டில் புதிதாக முளைத்த கோவில்களை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் இடித்து அகற்றினார்கள் - தகுந்த முன்னெச்சரிக்கை, முன்கூட்டிய தகவலுடன்.

ஆனால் நூற்றாண்டுகள் பழமையான கோவில்களையெல்லாம் இந்த ஒளிக்கோப்பில் பார்க்கும்போது அதைச் சுற்றி எழும்பியுள்ள ஆக்கிரமிப்புகளையல்லவா இடிக்க முனைந்திருக்கவேண்டும்.

இதற்கும் 'எங்கள் புனிதத் தலத்தின் மீது எழுப்பிக்கட்டப்பட்ட கோவில்கள்' அல்லது 'பார்ப்பன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி' என்று யாராவது கக்கினாலும் கக்குவார்கள்.

சக மனிதனையும் அவனது இறை மார்க்கத்தையும் இழிவு செய்து, துன்பப்படுத்தும் யாரையும் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.

எனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

Anonymous said...

இதில் உடைக்கப்படும் கோவில்களெல்லாம் முனீஸ்வரர், மாரியம்மன், முனீஸ்வரர், மாரியம்மன் என்று தான் காட்டுகின்றனர்.

திராவிடத் தமிழர்கள் இதெல்லாம் "அவர்கள் தெய்வங்கள்" என்று மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் கோவிலை மலேசிய இஸ்லாமிய அரசு உடைக்கும் போது சும்மா இருக்கிறார்கள்.