Saturday, December 02, 2006

சூரியனுக்கு முந்தைய உயிர்பொருட்கள்




சூரியன் தோன்றுவதற்கும் முன்னால் தோன்றிய உயிர் பொருட்கள்

கனடாவில் உள்ள டாகிஸ் என்னும் ஏரியில் Tagish Lake கிடைத்த ஒரு விண்கல்லில் இருக்கும் உயிர்ம பொருட்கள் நமது சூரியன் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவை என்று அறிவியலாளர்கள் அறிந்துள்ளார்கள்

இந்த விண்கல்லின் வயதை கணக்கிட்டால், அது ஏறத்தாழ நமது சூரியக்குடும்பத்தின் வயதைத்தான் ஒத்திருக்கிறது.

ஆனால், இந்த விண்கல்லில் இருக்கும் உயிர்ம பொருட்களை ஆராய்ந்து பார்த்தபோது அது இந்த விண்கல்லை விடவும். நமது சூரியக்குடும்பத்தை விடவும் மிகவும் முதிர்ந்தது என்று அறிகிறார்கள்.

இந்த விண்கல் தோன்றியபோது இதன் மீது இந்த உயிர்ம துகள்கள் வந்திருக்க முடியாது. இந்த கல் எங்கு பயணம் செய்தபோது இந்த துகள்களை பெற்றிருக்கும் என்பது ஆச்சரியமான விஷயம் என்று கூறுகிறார்கள் இந்த கல்லை ஆராய்ந்தவர்கள்.

http://news.nationalgeographic.com/news/2006/11/061130-meteorite.html

பல்வேறு மதங்களில் சூரியனுக்குப் பிறகுதான் உயிர்கள் உருவாக்கப்பட்டன (அல்லது தோன்றின) என்பது போன்ற கருத்து இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இந்து மதத்தில், சூரியன் ஒரு நட்சத்திரம் மட்டுமே. அதன் முக்கியம், இந்த பூமியை பொறுத்தது மட்டுமே.

கோடானுகோடி சூரியர்களையும் கோடானுகோடி பூமிகளையும் பேசுகின்றன இந்து சாஸ்திரங்கள்.

சூரியன் சந்திரன் பூமிக்கு முன்னரே உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்திருக்கின்றன என்பது இந்து மத ஞானத்தை நிரூபிக்கும் விஷயமாகவே பார்க்கலாம்.

13 comments:

கால்கரி சிவா said...

எழில்,

மனிதனே மிக அறிந்தவன்

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள எழில்,

இந்து புராணங்கள் மற்றும் வேதங்கள் பல்லாயிரம் கோடி சூரியன்களை குறித்து பேசுகின்றன. அதுவும் ஒரு கவித்துவ தன்மையுடன். உதாரணமாக பல்லாயிரம் கோடி சூரியர்களின் பிரகாசம் etc. ஆனால் எந்த இடத்திலும் அவை சூரியனை ஒரு விண்மீனாக கண்டதாக எனக்கு தெரியவில்லை. சூரியன் சந்திரனுடன் தான் bracket செய்யப்படுகிறது. ஆதவன் விண்மீனாக அறியப்பட்டது அண்மை நூற்றாண்டுகளின் அறிவியல் உண்மை. அதனை புராண வேதங்களை இயற்றிய அகஞானிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 'மனிதனே மிக அறிந்தவன்' 100 percent correct

அரவிந்தன் நீலகண்டன் said...

//சூரியன் சந்திரன் பூமிக்கு முன்னரே உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்திருக்கின்றன என்பது இந்து மத ஞானத்தை நிரூபிக்கும் விஷயமாகவே பார்க்கலாம்.//
சூரியன் சந்திரன் பூமிக்கு முன்னரே உயிர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்திருக்கின்றன என்பது இந்து தரும சிந்தனைக்கு எவ்விதத்திலும் புறம்பானதோ அல்லது ஊறு விளைவிப்பதோ இல்லை. மற்றபடி இந்து மத ஞானத்தை நிரூபிக்கும் விஷயமாகவே பார்க்கலாம் என்பது நீங்கள் சுவனப்பிரியன் பதிவுகளை ரொம்ப படித்து அந்த தாக்கத்தில் பேசுகிறீர்களோ என தோன்றுகிறது. :)

எழில் said...

நன்றி கால்கரி சிவா, நன்றி நீலகண்டன்

The Shatpatha Braahman 14:6, 9, 4. says., "The earth, the water, the heated bodies, the space, the moon, the sun, and other planets are all called Vasus or abodes, because they are abodes of living beings as well as of inanimate objects."

அவைகள் வசுக்கள் என்று அழைக்கப்படுகின்றன ஏனெனில் அவை வசிக்கும் இடங்கள்.

Rg Veda 1.59.1

O universal Godhead, thou art the navel-knot of the earths and their inhabitants; all men born thou controllest and supportest like a pillar.

எழில் said...

஡வோ ஆஃப் பிஸிக்ஸில் எவ்வாறு அக உணர்வுகள் மூலம் இந்து ரிஷிகள் அறிந்தவை புறவய பார்வையோடு குவாண்டம் மெக்கானிக்ஸுடன் ஒத்துப்போகின்றது என்று காப்ரா எழுதியிருந்தார்.

அது போன்ற ஒப்பீடுகளை தவறாக புரிந்துகொள்வது எளிது.

மேலே மேற்கோள் காட்டியது, ரிக்வேத கவிதைகளை புனைந்த ரிஷிகள் தங்களது அக பிழம்புகளால் உணர்ந்தவைகளில் அறிவியல் இருக்கிறது என்பதல்ல.

அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் போட்டி என்றும் இல்லை.

அப்படிப்பட்ட ஒரு கருத்தினை சில மதங்களை பரப்புபவர்கள் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு அவர்களது கடவுள் கொடுத்ததாக கூறப்படும் வேதங்களில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் தங்களது சால்ஜாப்புகளால் நிரப்பலாம்.

அவ்வாறு அறிவியல்பூர்வமாக தங்களது இறைவன் கூறியிருக்கிறார் என்று அவர்கள் கூறுவதில் உள்ள அபத்தங்களை இந்த பதிவில் நானும் இன்னும் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

ரிக்வேத ரிஷிகள் இந்த பூமிதான் உயிர்கள் வாழும் ஒரே ஒரு உலகம் என்று கருதவில்லை. அதற்கு பல்வேறு ஆன்மீக உணர்வுகளும், ஆழமான சிந்தனைகளும் உதவியிருக்கலாம்.

மனிதனின் அறிவு விரிந்துகொண்டே செல்கிறது. அறிவியலும், ஆன்மீகவியலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கின்றன. அதனால், ஐன்ஸ்டீனும் இந்து ரிஷிதான். நியூட்டனும் இந்து ரிஷிதான். ஆர்யபட்டாவும் இந்து ரிஷிதான். கதோபனிஷத் எழுதியவரும், மாதா அமிர்தனந்தமயியும், கிருஷ்ணமூர்த்தியும் இந்து ரிஷிகள்தான்.

அறிவியல் நமக்கு வெளியுலகைச் சொல்கிறது. ஆன்மீகம் நம் அக உலகைச் சொல்கிறது. இரண்டுக்கும் முரண் இல்லை. வெளியுலகின் மூலம் அக உலகை உணர்வதும். அக உலகின் மூலம் வெளியுலகை உணர்வதும் கூட இந்து பாரம்பரியத்தின் வழிதான்.

இந்த பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இறை, நம் உள்ளத்திலும் உணர்விலும் இல்லாதிருக்குமா?

அதனை நாம் உணரும்போது இறையை உணர்வோம். நாமே இறை என்று அப்போது உணர்வோம். அந்த சித்தி அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

மாயையால் கட்டுற்ற மனிதன் தன்னிடம் நேராக இறை கூறியது என்று கூறுவதை நாம் தமிழ் பழமொழியோடு அணுக வேண்டும்.

கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை.

இறையை உணர்ந்தவன் அதனை விளக்க மாட்டான்

தன்னிடம் இறை பேசியது என்று சொல்பவனிடம் இறை பேசியதில்லை.

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி எழில். ஆம் இத்தகைய விசயங்களில் கவனமாகத்தான் இருக்க வேணும்.
//மேலே மேற்கோள் காட்டியது, ரிக்வேத கவிதைகளை புனைந்த ரிஷிகள் தங்களது அக பிழம்புகளால் உணர்ந்தவைகளில் அறிவியல் இருக்கிறது என்பதல்ல.//
தங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி.

ஓகை said...

இந்து புராணங்களின் படியும், இந்திய ஜோதிட தத்துவங்களின் படியும் சூரியன் ஒரு நட்சத்திரம் அல்ல. அது ஒரு கோள். ஜோதிடம் சொல்லும் 27 நட்சத்திரக் கூட்டங்களும் துருவ நட்சத்திரமும் வான இயலின் படி சரியாகவே நட்சத்திரங்களெனச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் கிரகங்களாக விவரிக்கப்படுவனவற்றில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவையே கிரகங்கள். சந்திரன் ஒரு துணைக்கோள். சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனை நட்சத்திரம் என்று இந்து பூராணங்கள் எதிலும் சொல்லப்படவில்லை என்பது என் கருத்து. என் கருத்துகளில் தறு இருக்குமானல் தெரியப் படுத்த வேண்டுகிறேன்.

எழில் said...

நன்றி ஓகை

ஜோதிடம் பூமிக்கு அருகாமையில் இருக்கும் விண்பொருட்களின் சக்தியை கணக்கிட வேண்டி கோளாக கருதுகிறது.
ஆனால் இந்து விண்ணியல் சூரியனை நட்சத்திரமாகவே பார்க்கிறது
There is an old Sanskrit Sloka (couplet) which is as follows:

"Sarva Dishanaam, Suryaha, Suryaha, Suryaha."

This couplet means that there are suns in all directions. This couplet which describes the night sky as full of suns, indicates that in ancient times Indian astronomers had arrived at the important discovery that the stars visible at night are similar to the Sun visible during day time.

http://www.crystalinks.com/indiastronomy.html

Anonymous said...

பூமி சூரியனை சுற்றுகிறது என்று இந்துக்களும் கிறிஸ்துவ விஞ்ஞானிகளும் சொல்வதெல்லாம் பொய்.

சூரியன் தான் பூமியை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றி வந்து பிறகு அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் தங்கியிருந்து அடுத்த நாள் கிழக்கில் உதிக்க அல்லாவின் ஆணையை பெற்றதும் மீண்டும் கிழக்கில் உதித்து தன் வேலையை ஆரம்பிக்கிறது.

அப்படித்தான் நபிகள் நாயகம் முகம்மது பெருமானார் கூறியிருக்கிறார். நூறு கோடி முஸ்லீம் மக்கள் அப்படித்தான் நம்புகிறார்கள். அதனால் அதுதான் உண்மை.

Anonymous said...

மேலே ஒரு அனானி ஐயா குறிப்பிட்டடவைகளை யாராவது சொன்னதா?

இல்லாவிட்டால் இது வெட்டி வம்பு வளர்ப்பதற்க்கும், பதிவை திசை திருப்புவதற்குமே பயன்படும்.

Anonymous said...

இல்லை அய்யா,
குரானில் இருக்கும் " "And the sun Runs its fixed course for a term (decreed). That is The Decree of (Allah) The Exalted in Might, The All-Knowing."" என்ற வரிகளுக்கு விளக்கத்தை நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் விளக்கும்போது கீழ்கண்டதை கூறியிருக்கிறார்கள்.

Sahih Bukhari Volume 4, Book 54, Number 421

Narrated Abu Dhar:
The Prophet asked me at sunset, "Do you know where the sun goes (at the time of sunset)?" I replied, "Allah and His Apostle know better." He said, "It goes (i.e. travels) till it prostrates Itself underneath the Throne and takes the permission to rise again, and it is permitted and then (a time will come when) it will be about to prostrate itself but its prostration will not be accepted, and it will ask permission to go on its course but it will not be permitted, but it will be ordered to return whence it has come and so it will rise in the west. And that is the interpretation of the Statement of Allah: "And the sun Runs its fixed course for a term (decreed). That is The Decree of (Allah) The Exalted in Might, The All-Knowing."

அதாவது "It goes (i.e. travels) till it prostrates Itself underneath the Throne and takes the permission to rise again, and it is permitted and then (a time will come when) it will be about to prostrate itself but its prostration will not be accepted, and it will ask permission to go on its course but it will not be permitted, but it will be ordered to return whence it has come and so it will rise in the west.

சூரியன் தன் பிரயாணம் முடிந்து மேற்கில் மறைந்ததும் நேரே அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் வணங்கி நிற்கிறது. காலை நேரம் வரவேண்டிய நேரம் வரும் வரைக்கும் அது மீண்டும் கிழக்குச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. நேரம் வரும்போது அது அனுமதிக்கப்படும்.

நபிகள் நாயகமே இதன் விளக்கத்தை அல்லாவிடமிருந்து பெற்று தரும்போது உங்களுக்கு வேறென்ன வேண்டும்?

பொய்களை நம்பாதீர்கள். சூரியன்தான் கிழக்கிலிருந்து மேற்காக பகலில் பிரயாணம் செய்து பிறகு இரவு முழுவதும் அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் அடங்கி ஒடுங்கி நிற்கிறது. பிறகு அல்லாவின் அனுமதியுடன் கிழக்கில் மீண்டும் உதயமாகிறது.

குரான் அல்லாவின் வார்த்தைதான் என்று நம்ப வேறென்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?

இந்த பதிவை வேறு திசையில் எடுத்துகொண்டு போவதாக குற்றம் சாட்ட வேண்டாம்.

Quran 2: 29 It is He who hath created for you all things that are on Earth; THEN He turned to the Heaven and made them into seven firmaments (Skies).

பூமியில் உள்ள விஷயங்களை செய்தபின்னர்தான் அவர் வானத்தையும் அதில் உள்ள பொருட்களையும் படைத்தாரே தவிர, வானத்தை படைத்தபின் பூமியை படைக்கவில்லை.

இந்த விஞ்ஞானிக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்துக்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். சிந்திக்க வேண்டாமா என்று அறைகூவல் விடும் குரானை புரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாற வேண்டும்.

எழில் said...

???
scratching the head?

இந்த அனானி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லையே?

Anonymous said...

//சூரியன்தான் கிழக்கிலிருந்து மேற்காக பகலில் பிரயாணம் செய்து பிறகு இரவு முழுவதும் அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் அடங்கி ஒடுங்கி நிற்கிறது. பிறகு அல்லாவின் அனுமதியுடன் கிழக்கில் மீண்டும் உதயமாகிறது.//

உண்மையிலேயே இப்படித்தான் இஸ்லாமியர்கள் நம்புகிறார்களா?

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதனால்தான் மெக்கா இமாம் உலகம் தட்டை என்று சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.