Monday, March 28, 2011

இந்து மதத்துக்கு எதிரான நாசகாரச் செயல்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டு.மாவட்ட எம்.பி. கி.யோகேஸ்வரன்

இந்து மதத்துக்கு எதிரான நாசகாரச் செயல்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது மட்டு.மாவட்ட எம்.பி. கி.யோகேஸ்வரன்.
Monday, 21 March 2011 06:19
இந்து மதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நாசகாரச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் இனம் தெரியாதோரால் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள், சிலைகள் 2 பெறுமதிவாய்ந்த சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்ககையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்து வழிபாட்டுத் தலங்களிலுள்ள பெறுமதிவாய்ந்த சொத்துக்களை திருடுபவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தக்க பாடம் மிகவிரைவில் புகட்டுவார். இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை உடன் இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

இதுபோன்ற மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள்தான் மதப்பிரச்சினைகளை எற்படுத்திக்கின்றனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: