Monday, March 28, 2011

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றத்தின் சிவராத்திரி, பரிசளிப்பு விழாக்கள்
Thursday, 03 March 2011 16:38
மட்டக்களப்பு நிருபர் : மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்றம் நடத்திய மகாசிவராத்திரி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

பெரியகல்லாறு இந்து இளைஞர் மன்ற தலைவர் வ.ஜனார்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எஸ். சிவலிங்கம், பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கே.பேரின்பராசா, இலங்கை போக்குவரத்துச்சபையின் பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ். கனகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்வித்துறைக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர்கள், இந்துமத வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை நடத்திய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், மகாசிவராத்திரியை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: