Tuesday, May 24, 2011

இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை தகர்ப்போம் லஷ்கர்-இ-தொய்பா மிரட்டல்!

இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை தகர்ப்போம் லஷ்கர்-இ-தொய்பா மிரட்டல்!
பதிவு செய்த நாள் 5/24/2011 2:27:42 PM


பக்வாரா : ஒசாமா பின்லேடன் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜூன் 5ம் தேதி இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. பஞ்சாபின் பக்வாராவில் உள்ள சீதா கோயில் பூசாரி கமல் கிஷோருக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பக்வாரா எஸ்பி கமல்ஜித் சிங் கூறினார்.

ஒரு கடிதத்தில், 'அமர்நாத் குகைக் கோயில் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள கோயிலுக்கு வரும் யாத்ரிகர்களை கொல்வோம்' என்றும் மற்றொரு கடிதத்தில், 'இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் அமிர்தசரஸ், பக்வாரா, பாட்டியாலா, கபுர்தலாவில் உள்ள கோயில்கள் உள்பட 8 முக்கிய கோயில்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டல் கடிதங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: