Thursday, May 12, 2011

கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை



கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.




ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடியில் இந்து முன்னணி ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் தனபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



தனியாரிடம் இருக்கும் இந்து சமய
அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும். ஆலயங்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

உடையார்பாளையம் வழியாக செல்லும் பேருந்துகளில் ‘வழி உடையார்பாளையம்‘ என எழுத வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தில் உடையார்பாளையம் நகர தலைவர் குமார், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளார் ராமலிங்கம், ஒன்றிய தலைவர் ராமசாமி, ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் நகர அமைப்பாளர் பாலமுருகன், உடையார்பாளை யம் வெங்கடாசலம், குரு நாதன், ராமசாமி, சங்கர், புதுச்சாவடி ஜெயராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: