Tuesday, October 31, 2006

இறைதூதர் - 4

அன்பு சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,

முதலில் தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். வேலைப்பளு அதிகம்.

///
சகோதரர் எழிலுக்கு!

//கிறிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//

அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.
///


ஆக ஒரு புத்தகம் இறைவேதம் என்பதற்கு ஆதாரம் அது எளிமையாக, எளியவரும் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் ஆனால் மிக உயர்ந்த தரமாக, உயர்ந்த கருத்துக்களை (பாரதியார் கவிதைகள் போன்று, அல்லது எளிய வார்த்தைகளில் அற்புதமான இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகளை எழுதிய கண்ணதாசன் போன்று) இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பாரதியாரின் கட்டுரை நடையும், கவிதை நடையும் வெவ்வேறானவை. கவிதையில் இருக்கும். பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?

///
//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//

ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?

நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.
///


திருக்குறள் பற்றிய ஒரு சிறு விளக்கம். அந்த குறளில் சிவனின் தலையை பற்றி திருக்குறள் பேசவில்லை. சந்திர கிரகணம் வரும்போது, சூரிய கிரகணம் வரும்போது ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குகின்றன என்பது இலக்கிய கற்பனை. அந்த கவித்துவமான உவமையை இங்கே திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். சந்திர கிரகணம் வரும்போது ஒளி மிகுந்த சந்திரன் மங்கி ஒளி இழப்பதுபோல என் உடல் ஒளி இழந்தது என்று தலைவி சொல்வதாக கவிதை. இதே போல, குரானில் ஒரு கவித்துவ சிந்தனை (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன? கூற மாட்டீர்கள் தானே? அது போல நீங்கள் உபயோகித்த குறள் தவறான உதாரணம். எனக்குத் தெரிந்து அப்படிப்பட்ட அறிவியல் தவறுகள் திருக்குறளில் ஏதும் இல்லை.

கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.


//'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு // என்று தவறாக குறித்திருக்கிறீர்கள். நான் அப்படி ஒருபோதும்கேட்கவில்லை. நான் இறைதூதருக்கான இலக்கணம் கேட்டேனே அன்றி, குரான் இறைவேதமா என்பதையோ அல்லது முகம்மது நபி இறைதூதரா என்பதையோ நான் கேட்கவே இல்லை. தயவு செய்து இப்னுபஷீர் அவர்களுக்கும் உங்களுக்கும் எழுதிய பதில்களை தயை கூர்ந்து படிக்க வேண்டுகிறேன். எந்த இடத்திலும் நான் ஜனாப் முஹம்மது பெருமானாரை இறைதூதரா என்றோ குரானைப் பற்றியோ கேட்கவே இல்லை. ஏனெனில் அதில் என் அறிவு பூஜ்யம். நீங்கள் கூறுவதை வைத்து அதன் மீது சில கேள்விகள் எழுப்புகிறேன். ஆனால், எனக்கு ஜனாப் முஹம்மது நபி பெருமானார் பற்றியோ அல்லது குரான் பற்றியோ ஏதும் தெரியாது. அதனை நீங்களே என் கேள்விகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கலாம்.

நான் கேட்டதெல்லாம் இதுதான். இறைதூதருக்கான இலக்கணம் என்ன? அதற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
இயேசு காலத்துக்கு முந்திய காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கும்போது இரண்டு மூன்று பேர்கள் தங்களை இறைதூதர் என்று கோரினால், யாரை இறைதூதர் என்று ஏற்றுக்கொள்வீர்கள், ஏன்?

நீங்கள் மீண்டும் குரான் மற்றும் முகம்மது கூறிய அறிவியல் உண்மைகளை குறிப்பிடுகிறீர்கள். இது முன்பு சொன்னது போலவே எனக்கு பிரச்னை. நான் அவற்றை பேச விரும்பவில்லை. ஆனாலும் இறைதூதர் என்ற உதாரணத்துக்கு ஜனாப் முஹம்மது பெருமானாரை காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

இரண்டாவது இதே போல குரானில் இருப்பதாக குறிப்பிடும் அறிவியல் உண்மைகளைப்பற்றி எனக்கே மாற்றுக்கருத்து இருக்கிறது.

உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். ரோம சாம்ராஜ்யம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பை எடுத்துக்கொண்டால், அவர் இதுபோல முன்னறிவித்து நடைபெறாத ஏதேனும் வாக்கியங்கள் இருக்கும் அல்லவா? (எனக்கு தெரியாது. என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் முஹம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா?

மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அரிஸ்டாட்டிலின் அறிவியல் போதனைகள் இங்கே

http://www.perseus.tufts.edu/GreekScience/Students/Tom/AristotleAstro.html

அதே போல அந்த காலத்தில் வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆணும் பெண்ணும் இருவரும் கொடுக்கும் திரவத்திலிருந்து உயிர் உண்டாகிறது என்றும் கூறியிருக்கிறார் என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே இன்று தெரிந்த ஒரு விஷயத்தை நான் திரும்பச்சொன்னால், அது அற்புதமாகிவிடாது என்று கூறலாமே. (உதாரணமாக நான் ஆணின் விந்துதான் ஒரு குழந்தை ஆணாக பிறக்கிறதா பெண்ணாக பிறக்கிறதா என்பதை நிர்ணயிக்கிறது, அதுவும் கருவுற்ற அந்த வினாடியே அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதும் நிர்ணயமாகிவிட்டது என்று சொன்னால் அது அற்புதம் இல்லை அல்லவா? ஏனெனில் எனக்கு முன்னரே மருத்துவ விஞ்ஞானம் அதனை கூறிவிட்டது.)


///
//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//

அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.

இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.

அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.
///


இன்றும் பலர் சுவிசேஷக்கூட்டங்களுக்கு சென்று அற்புதங்களை கண்டு கிறிஸ்துவர்களாக ஆகிறார்கள். அவர்களை கொன்றாலும் பலர் வேறுமதத்துக்கு செல்ல மாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். சுவிசேஷ கூட்டங்கள் இறை ஆசியால்தான் நடைபெறுகின்றன என்று கூறுவீர்களா?

///
//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//

இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.

'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா

உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
///


நபித்துவ முத்திரையான முதுகு நடுவில் புறா முட்டை போன்ற மச்சம் இருக்கும் நபர்கள் எனக்கு வந்த வேதம் என்று கவிதைகள் பொழிந்தால் அதனை இறைவேதம் என்று ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள்.

ஏறத்தாழ இதனைத்தான் நான் கேட்டேன். இதுவரை வந்த அனைத்து இறைதூதர்களுக்கும் இது போல நபி முத்திரை இருந்தது என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிறிஸ்து, மோஸஸ், ஆபிரஹாம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும்.

மேலும் //உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். //

இஸ்லாம் எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டவர்களுக்கும் பொருந்தி வருமா? குரான் பரிணாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறுகிறீர்கள். ஆக குரான் இறைவேதம் அல்ல என்று கூறுவீர்களா?

என்னுடைய கேள்விகளை (ஓரளவுக்கு விதண்டா வாதம் போன்று தோற்றமளிப்பவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய எழுதும் முறையில் உள்ள குறையாக இருக்கலாமே தவிர என் எண்ணத்தில் இல்லை என்று உறுதி கூறுகிறேன்) மதித்து, அதற்கு விளக்கம் அளிக்கும் இனிய சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு என் தாழ்மையான மனம் கனிந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்
எழில்

----------------------
///
எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!

//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //

இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.

'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.
///


கேள்வி இறைவனின் படைப்பு பற்றியதல்ல.

கேள்வி கேட்டவர்கள் "முகம்மது நபி இறைதூதர்தானா? அதற்கு என்ன அத்தாட்சி?" என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக குரான், அவ்வாறு கேட்பவர்கள் அறியாதவர்கள் என்று சொல்கிறது. இதுதான் பிரச்னை.

வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் அத்தாட்சி கொடுங்கள் என்று கேட்பவர்கள் "அறியாதவர்கள்" என்று அவமானப்படுத்துவது சரியல்ல என்பதுதான் என் எண்ணம்.

///
//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//

நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.

இறைவனே மிக அறிந்தவன்!
///


1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.
2) முஹம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?
3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.

--
நண்பர் சுல்தான் அவர்கள் எனக்கு ஒரு பதில் எழுதியிருக்கிறார்.

//ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.

இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது
//


இல்லை எனக்கு கோபம் வராது. நீங்கள் கூறுவது உண்மைதானே. ஏன்
அமமாதான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று காட்டமுடியும். ஏனெனில் அது அம்மாவுக்குத்தான் தெரியும்.
அதே போல இறைவன் தான் ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் இறைதூதர் என்று காட்ட முடியும். ஏனெனில் அது இறைவனுக்குத்தான் தெரியும்.

//
'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.
//


அப்போதும் அம்மாவின் வாக்குமூலம் நம்பத்தகுந்ததுதானே? அம்மா ஒருவரை அடையாளம் காட்டி இவர்தான் உன் தந்தை என்று கூறாத வரையில், யார்வந்து நான் தான் உன் தந்தை என்று கூறினாலும், ஆதாரம் என்ன என்று கேட்க மாட்டோமா? யார் வந்து சொன்னாலும், அவரை தந்தை என்று ஒப்புக்கொள்வோமா?
--
இன்னொருவர் அவரது பதிவில் அவரது பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை என்று குறை கூறியிருந்தார். அது ஆபாசமில்லைதான். ஆனால், மிகுந்த ஆர்வத்துடனும், அர்பணிப்புடனும் எழுதும், அக்கறையுடன் எனக்கு பதில் எழுதும் சகோதரர்கள் அபுமுஹை, சுவனப்பிரியன், இப்னுபஷீர் ஆகியோரையும் சேர்த்து அது அவமதிக்கிறது. அது சரியல்ல என்பதால் அதனை அனுமதிக்கவில்லை.
--

என் கேள்விகளுக்கு பொறுமையாக நாகரிகமாக பதில் எழுதும் இனிய சகோதரர் அபுமுஹை, இனிய சகோதரர் இப்னுபஷீர், இனிய சகோதரர் சுவனப்பிரியன் ஆகியோருக்கு தாழ்மையான நன்றிகள்

அன்புடன் எழில்

25 comments:

Anonymous said...

எழில்

அந்தக் காலத்தில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் இடையிலும், வைணவர்களுக்கும் புத்தர்களுக்கும் இடையிலும் தர்க்க ரீதியாக விவாதங்கள் நடக்கும் என்றும், அதில் விவாதத்திலும் தர்க்கத்திலும், அறிவிலும் மிகச் சிறந்த அடியார்கள் தங்கள் பக்கத்தின் நியாயம் காரணமாகவும், தர்க்க மேன்மை காரணமாகவும் வென்று பெரும் புகழ் பெறுவார்கள் என்று படித்திருக்கிறேன். உங்களது தர்க்கங்கள் நேர்மையானதாகவும், மிகவும் பண்புடனும் , அமைதியாகவும் அதே நேரத்தில் மிகுந்த வலிவுடனும் காணப் படுகிறது. உங்கள் புத்தி சாதுர்யம் மற்றும் தர்க்க சாஸ்திர அறிவும் வியக்க வைக்கிறது. உங்கள் கேள்விகளிலும்,பதில்களுக்கு நீங்கள் அளிக்கும் நிதானமான விளக்கங்கங்களும் இணையத்தில் பலரும் கற்றுக் கொள்ள வேண்டியவை. உங்களைப் போன்ற அறிஞர்கள் ஈடுபடும் இது போன்ற விவாதங்கள் பயனுள்ளவையாகவும், பல்வேறு விஷயங்களைத் தெளிவு படுத்துபவையாகவும் உள்ளன. நிச்சயம் இந்த விவாதத்தின் முடிவில் இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஒத்துக் கொண்டு அவை நீக்கப் பட வேண்டும் என்பதை ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அருமையான விவாதங்கள். இதை நிதான முறையில் எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.

இது வரை நிகழ்ந்த விவாதங்களில் உங்கள் கருத்துக்களே நியாயமானவையாகவும் பலமானதாகவும் வெற்றி பெற்றூள்ளதாகவும் தெரிகின்றன.

அன்புடன்
வரதன்

எழில் said...

உங்களது பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி வரதன்

இந்த வாதிடுவதற்காகவோ, அல்லது இஸ்லாமியர்கள் தவறான கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபிப்பதற்கோ அல்ல.

மேலும் எல்லா இஸ்லாமியரும் ஒரே கருத்தை கொண்டிருப்பதில்லை என்று நினைக்கிறேன். பல இஸ்லாமிய மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பரிணாமத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் மருத்துவர்களாக இருக்கவே முடியாது. ஆகையால் ஒரு சில முஸ்லீம்கள் பரிணாமத்தத்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், இஸ்லாம் பரிணாமத்தத்துவத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறமுடியாது என்பது என் கருத்து.

அன்புடன்
எழில்

எழில் said...

இப்னுபஷீர் எழுதிய அடுத்த பதிவு. தமிழ்மணத்தில் வராதது. இங்கே இருக்கிறது

suvanappiriyan said...

இறைத் தூதர் - சகோதரர் எழிலுக்கான இரண்டாவது பாகம்!

//பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? //

//கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.//


குமர குருபரரின் இலக்கியம் இறை வேதம் என்று எங்காவது அங்கு குறிப்பு இருக்கிறதா? அல்லது குமரகுருபரர்தான் இறைத் தூதர் என்று சொல்லியிருக்கிறாரா? இறுதி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இறைவனால் இறை வேதங்கள் என்று கூறப்பட்ட பைபிளும், தோராவும் பின் பற்ற கூடாததாகி விடும் போது குமரகுருபரரின் இலக்கியம் எப்படி இறை வேதமாகும? இலக்கியத்தைப் பற்றி நண்பர் சடையப்பா தந்த பதிலையே இங்கும் மேற் கோள் காட்டுகிறேன்.

Mr Sadaiappa said…..

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை ஆனால் முகம்மது என்பவர் கவிஞர் இல்லையே. அவர் எழுத்தப்படிக்க தெரியாதவர் (அபடியானால் எப்படி வியாபரம் செய்தார்?. வியாபரம் செய்வதற்கு படிப்பறிவு அவசியம் இல்லை என்பதை நம்மூர் வியாபாரிகள் வணிபம் செய்து நிரூபித்திருக்கிறார்கள்).ஆனால் கம்பனோ, காளிதாசரோ அப்படிப் பட்டவர்கள் இல்லையே. அவர்கள் இருவரும் கவிஞர்கள். காவியம் படைப்பதுதான் அவர்களுடைய தொழில்.கவிதை படைப்பவர்கள் எல்லாம் இறை தூதர் என்று சொன்னால் நபி இறைத்தூதர் என்று கூரிய அந்த காலத்து அரபி கவிஞர்கள் கவிதை இயற்றுவதில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களை நோக்கித்தான் குரானில் உள்ளது போன்ற சிறு வசனத்தையாவது கொண்டு வருமாறு குரான் சவால் விடுகிறது.

// (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன?//

குர்ஆன் இறை வேதம் அல்ல என்பதற்கு நீங்கள் எடுத்து வைக்கும் வாதத்தையே 'அது இறை வேதம் தான்' என்று என்னால் நிரூபிக்க முடியும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் 'சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?' என்ற ஒரு பதிவே போட்டிருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லையா?

இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டுநம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும். எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது?நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும் இதயத்தை குறிக்கவும் இச் சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது.மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறனுக்கு மூளை இதயம் ஆகிய அர்த்தங்கள் இச் சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மூளை, இதயம் ஆகிய இரண்டையும் குறிக்கக் கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன் படுத்தி இருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக் குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளைதான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக் காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப் பொருளும் அச் சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25- 7;179- 9;87- 9;93- 17;46- 18;57- 63;3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்பு படுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33;10- 40;18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச் சொல் இதயம் என்ற பொருளில் பயன் படுத்தப் பட்டுள்ளது.ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன் படுத்தப் பட்டுள்ளது. அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது.

//உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். //

முதலில் அறிவியல் கண்டு பிடிப்புகளில் நிரூபிக்கப் பட்டவை, நிரூபிக்கப் படாதவை என்று இரண்டு வகை உண்டு இதில் நிரூபிக்கபடாதவைகளின் வகைகளில் தான் பரிணாமக் கொள்கை சேரும். இது பற்றி விரிவாக நான் போட்ட பதிவில் விரிவாக விளக்கியிருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். அதில் நான் கேட்ட கேள்விகளுக்கு பரிணாமத்தை ஆதரிக்கும் எவரும் திட்டவட்டமான நிரூபிக்கப் பட்ட பதில்களைத் தரவில்லை. அந்த பதிவைப் படித்து விட்டு நீங்களாவது தக்க பதில்களைத் தர முயற்சியுங்கள்.

//என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் முஹம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா? //

//2) முஹம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?//

முகமது நபியின் போதனைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று இட்டுக் கட்டப் பட்டவை. மற்றது நம்பகமானவை. இஸ்லாத்தை ஒழிக்க நினைத்த யூதர்கள் முகமது நபியின் பெயரால் பல கதைகளை புனைந்து புத்தகமாகவும், வலைப் பக்கங்களிலும் நிறைய பரப்பி உள்ளனர். இந்த நபி மொழியை சொன்னது யார்? எந்த நபி மொழி கிரந்தத்திலிருந்து எடுத்தார் என்ற விபரத்தை தரச் சொல்லுங்கள். அது உண்மையானதுதானா? அல்லது இட்டுக் கட்டப் பட்ட நபி மொழியா என்ற விபரத்தைத் தருகிறேன். நான் படித்த வரையில் அப்படி ஒரு நபி மொழியைப் பார்க்கவில்லை.

//மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். //

அரிஸ்டாட்டிலின் காலம் கி.மு. 384. இவர் பிறந்தது கிரேக்கத்தில். கிரேக்கம் அன்றைய காலத்தில் அறிவின் ஊற்றாக இருந்தது. அந்த சூழலில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் சில தத்துவங்களை சொல்லியிருக்கலாம். இன்றைய காலம் போல் கணிணி, தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு இல்லாத காலம் அது. முகமது நபி பிறந்ததோ எழுதப் படிக்கத் தெரியாத ஒரு அறியாத சமூகத்தில். அவருக்கு அரிஸ்டாட்டிலின் தத்துவங்களை யார் சொல்லியிருப்பார்? பூமி உருண்டையானது என்ற சிந்தனையாவது அந்த மக்களுக்கு இருந்திருக்குமா?

உங்கள் வாதப்படி அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்து முகமது நபி குர்ஆனை உருவாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த காலத்தில் பத்தோடு பதினொன்றாக குர்ஆனும் முகவரி இழந்து போயிருக்கும். ஏனெனில் முகமது நபிக்குப் பிறகு ஆயிரம்வருடங்களுக்குபின் தோன்றிய கலீலியோ அரிஸ்டாட்டிலின் இயற்பியல் தத்துவமும், வானியல் தத்துவமும் பொய்யானவை என்று நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள். குர்ஆன் சொல்லும் பல உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையிலேயே பல அறிவியல் உண்மைகளை கலீலியோ வெளியிட்டிருக்கலாம் என்பது என் அபிப்ராயம். ஏனெனில் கலீலியோ காலத்தில் குர்ஆன் உலகின் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு விட்டது.




//குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிரிஸ்து, மோஸஸ், ஆபிரஹாம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும். //

//1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.//


வேதக்காரர்களான யூதர்களும் கிறித்தவர்களும் இறைவன் அருளிய வேதத்தை தொலைத்து விட்டு வருடா வருடம் பல மாற்றங்களோடு அல்லவா வேதங்களை வெளியிடுகிறார்கள்! இறை வேதத்தையே பாதுகாக்காதவர்கள் இறை தூதர்களின்அடையாளங்களை எங்ஙனம் பாதுகாத்து வைத்திருப்பர்?அவர்களுக்கு வந்த இறைத் தூதரைப் பற்றிய அடையாளங்களை விளக்க வேண்டியது அவர்கள் தான். முந்தய சமுதாயத்துதூதர்களின் அடையாளங்கள் முகமது நபியைப் பின் பற்றுபவர்களுக்கு அவசியமும் இல்லையே! ஒருக்கால் இதுபற்றிய உண்மை அறிந்த யூத கிறித்தவர்கள்தான் இதனை விளக்க வேண்டும்.

//3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.//

'ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப் பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்'
- சொன்னது முகமது நபி.
-நூல்கள் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட அற்புதங்களில் முக்கியமானது குர்ஆன் என்று அவர்களே சொல்லி இருப்பதால் வேறு அற்புதங்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்த குர்ஆன் உண்மையிலேயே அற்புதம்தான் என்பதை நான் பல பதிவுகளில் விளக்கியும் இருக்கிறேன்.

இறைத் தூதரைப் பற்றிய இரண்டாவது பதிவில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதில்களை சொல்லியிருப்பதாக நான் நினைக்கிறேன். மேற் கொண்டு ஏதும் சந்தேகம் இருப்பின் தாராளமாக தெரியப் படுத்துங்கள்.

The Physics of Aristotle versus
The Physics of Galileo

________________________________________
Aristotle taught that the substances making up the Earth were different from the substance making up the heavens. He also taught that dynamics (the branch of physics that deals with motion) was primarily determined by the nature of the substance that was moving.
The Dynamics of Aristotle
For example, stripped to its essentials, Aristotle believed that a stone fell to the ground because the stone and the ground were similar in substance (in terms of the 4 basic elements, they were mostly "earth"). Likewise, smoke rose away from the Earth because in terms of the 4 basic elements it was primarily air (and some fire), and therefore the smoke wished to be closer to air and further away from earth and water. By the same token, Aristotle held that the more perfect substance (the "quintessence") that made up the heavens had as its nature to execute perfect (that is, uniform circular) motion. He also believed that objects only moved as long as they were pushed. Thus, objects on the Earth stopped moving once applied forces were removed, and the heavenly spheres only moved because of the action of the Prime Mover, who continually applied the force to the outer spheres that turned the entire heavens. (A notorious problem for the Aristotelian view was why arrows shot from a bow continued to fly through the air after they had left the bow and the string was no longer applying force to them. Elaborate explanations were hatched; for example, it was proposed that the arrow creating a vacuum behind it into which air rushed and applied a force to the back of the arrow!)

Galileo vs. Aristotle

Thus, Aristotle believed that the laws governing the motion of the heavens were a different set of laws than those that governed motion on the earth. As we have seen, Galileo's concept of inertia was quite contrary to Aristotle's ideas of motion: in Galileo's dynamics the arrow (with very small frictional forces) continued to fly through the air because of the law of inertia, while a block of wood on a table stopped sliding once the applied force was removed because of frictional forces that Aristotle had failed to analyze correctly.

In addition, Galileo's extensive telescopic observations of the heavens made it more and more plausible that they were not made from a perfect, unchanging substance. In particular, Galileo's observational confirmation of the Copernican hypothesis suggested that the Earth was just another planet, so maybe it was made from the same material as the other planets.
Thus, the groundwork was laid by Galileo (and to a lesser extent by others like Kepler and Copernicus) to overthrow the physics of Aristotle, in addition to his astronomy. It fell to Isaac Newton to bring these threads together and to demonstrate that the laws that governed the heavens were the same laws that governed motion on the surface of the Earth.
http://csep10.phys.utk.edu/astr161/lect/history/aristotle_dynamics.html



Galileo Came after Prophet Mohammed
Galileo Galilei
________________________________________
Born: 15 Feb 1564 in Pisa (now in Italy)
Died: 8 Jan 1642 in Arcetri (near Florence) (now in Italy)

Thanks Mr babuji.

-Suvanappiriyan

எழில் said...

//
இறைத் தூதர் - சகோதரர் எழிலுக்கான இரண்டாவது பாகம்!

//பாரதியாரின் கவிதைகளைப் பார்த்துக்கூட பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இதே போன்று, குமர குருபரரின் கவிதைகளும் தெய்வீகமானவை என்று தமிழர்கள் கருதுகிறார்கள். குமர குருபரர் சுமார் 5 பிராயம் வரையில் வாய் பேச அறியாதவராக இருந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வயதில் பேச வாய்திறந்தபோது நேரடியாக முருகக்கடவுளை போற்றி புகழும் ஒரு செய்யுளை பாடினார். குமர குருபரரின் இலக்கியம் அனைத்தும் இறைவேதம் என்று இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? //

//கண்ணதாசன் போல கவிதை எழுதமுடியுமா என்று சவால் விட்டால் அதற்கு விடை கிடையாது. ஏனெனில், யார் கண்ணதாசன் போல எழுத முயற்சித்தாலும், இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை என்று சொல்லிவிடலாம். ஆகவே அது எப்படி ஒரு நிரூபணம் ஆகும் என்பது புரியவில்லை.//

குமர குருபரரின் இலக்கியம் இறை வேதம் என்று எங்காவது அங்கு குறிப்பு இருக்கிறதா? அல்லது குமரகுருபரர்தான் இறைத் தூதர் என்று சொல்லியிருக்கிறாரா? இறுதி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இறைவனால் இறை வேதங்கள் என்று கூறப்பட்ட பைபிளும், தோராவும் பின் பற்ற கூடாததாகி விடும் போது குமரகுருபரரின் இலக்கியம் எப்படி இறை வேதமாகும? இலக்கியத்தைப் பற்றி நண்பர் சடையப்பா தந்த பதிலையே இங்கும் மேற் கோள் காட்டுகிறேன்.

Mr Sadaiappa saidஸ..

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை ஆனால் முகம்மது என்பவர் கவிஞர் இல்லையே. அவர் எழுத்தப்படிக்க தெரியாதவர் (அபடியானால் எப்படி வியாபரம் செய்தார்?. வியாபரம் செய்வதற்கு படிப்பறிவு அவசியம் இல்லை என்பதை நம்மூர் வியாபாரிகள் வணிபம் செய்து நிரூபித்திருக்கிறார்கள்).ஆனால் கம்பனோ, காளிதாசரோ அப்படிப் பட்டவர்கள் இல்லையே. அவர்கள் இருவரும் கவிஞர்கள். காவியம் படைப்பதுதான் அவர்களுடைய தொழில்.கவிதை படைப்பவர்கள் எல்லாம் இறை தூதர் என்று சொன்னால் நபி இறைத்தூதர் என்று கூரிய அந்த காலத்து அரபி கவிஞர்கள் கவிதை இயற்றுவதில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களை நோக்கித்தான் குரானில் உள்ளது போன்ற சிறு வசனத்தையாவது கொண்டு வருமாறு குரான் சவால் விடுகிறது.
//

அன்பு சகோதரர் சுவனப்பிரியன்,

நான் குமர குருபரரை உதாரணம் காட்டியது, அவர் இறைதூதர் என்று நான் கருதுவதால் அல்ல. ஐந்து வருடம் வரைக்கும் ஊமையாக இருந்தவர் பேச ஆரம்பித்ததும் செய்யுளாக பொழிந்த வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதனை காட்ட. இதே போல, காளிதாசரும் வெகுகாலம் சாதாரண மரம் வெட்டியாக இருந்ததாகவும், பிறகு மகாகவி ஆனதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.

இது போல ஒரு சாதாரணர் திடீரென்று செய்யுள் பொழிந்து பெரும் புலவராக ஆவது ஆச்சரியமான விஷயம் அல்ல என்று சுட்டிக்காட்டத்தான்.

மேலும் இது போன்ற சவால்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஏதோ ஒரு இடத்தில் கண்ணதாசன் "என்னைப்போல உலகத்தில் ஒரு கவிஞன் இனி பிறக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனை கண்ணதாசனின் விசிறிகள் சவாலாக எடுத்துக்கொண்டு பேசினால் அந்த சவாலை எதிர்கொள்ள முடியுமா? வைரமுத்துவையோ அல்லது மு மேத்தாவையோ காட்டினாலும், "இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை" என்று கூறிவிடுவார்கள். சாதாரண ரசிகர்களே அப்படி இருக்கும்போது, எப்படி இறைதூதரை பின்பற்றுபவர்கள் ஒப்புக்கொள்வார்கள்? ஆகவே, இது ஒரு சவாலே அல்ல. இந்த சவாலே தவறு. ஏனெனில், ஒரு கவிதை என்பதோ, வசனம் என்பதோ, நான் முன்னமே கூறியது போல, subjective. எனக்கு அற்புதமான கவிதையாக இருப்பது, வேறொருவருக்கு குப்பையாக தோன்றலாம்.

குரானே ஒரு அற்புதம் என்று கூறவியலாது. பஹாவுல்லா கூட தன் புத்தகம் ஒரு அற்புதம் என்று கூறிக்கொள்கிறார். இன்னும் யார் யாரோ தங்களது புத்தகத்தை ஒரு அற்புதம் என்று கூறிக்கொள்கிறார்கள். பஹாவுல்லாவின் மதம் கடுமையான நெருக்கடிகளுக்குப் பிறகும் தோன்றி வளர்ந்து இன்று உலகில் வளர்ந்து வருகிறது.

நான் கூட ஒரு புத்தகம் எழுதி, அதுதான் அற்புதம் என்று ஆயிரம்பேரை சொல்ல வைக்க முடியும். அதைவிடுங்கள். எனக்கு இளையராஜாவின் இசை அற்புதமானதாக இருக்கிறது. எம்.எஸ் விசுவநாதனின் ரசிகருக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். இளையராஜா தன்னுடைய இசை இறைவனின் அருளால்தான் வெளிவருகிறது என்று நம்புகிறார். அந்த இசையைக் கேட்கும்போது எனக்கு நிச்சயம் நம்பத்தான் தோன்றுகிறது. இளையராஜாவின் அப்படிப்பட்ட தெய்வீக இசையாக எனக்கு தோன்றுகிறது. இறைவன் தான் இளையராஜாவிற்கு அந்த இசையை கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என் அருகே ஒரு எம்.எஸ் விசுவநாதன் - ராமமூர்த்தியின் ரசிகர் இருக்கிறார். அவருக்கு "என்னதான் இருந்தாலும், எம்.எஸ்.வி ராமமூர்த்தி காம்பினேஷன்" மாதிரி வருமா என்று கேட்கிறார்!

///
// (உதாரணமாக "உன் இதயத்தில் என்ன இருக்கும் என்று இறைவனுக்குத் தெரியும்" என்பது போல. உண்மையில் மூளையில்தான் சிந்தனை இருக்கிறது என்பது வெளிப்படை.) இருந்தால், குரான் இறைவேதம் அல்ல என்று கூறிவிடுவீர்களா என்ன?//

குர்ஆன் இறை வேதம் அல்ல என்பதற்கு நீங்கள் எடுத்து வைக்கும் வாதத்தையே 'அது இறை வேதம் தான்' என்று என்னால் நிரூபிக்க முடியும். நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் 'சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?' என்ற ஒரு பதிவே போட்டிருக்கிறேன். நீங்கள் படிக்கவில்லையா?

இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லா‹வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டுநம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும். எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது?நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும் இதயத்தை குறிக்கவும் இச் சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது.மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸ†¡‹) சிந்திக்கும் திறனுக்கு மூளை இதயம் ஆகிய அர்த்தங்கள் இச் சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மூளை, இதயம் ஆகிய இரண்டையும் குறிக்கக் கூடிய இந்தச் சொல்லை அல்லா‹ தேர்ந்தெடுத்து பயன் படுத்தி இருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக் குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளைதான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக் காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப் பொருளும் அச் சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25- 7;179- 9;87- 9;93- 17;46- 18;57- 63;3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்பு படுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33;10- 40;18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச் சொல் இதயம் என்ற பொருளில் பயன் படுத்தப் பட்டுள்ளது.ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன் படுத்தப் பட்டுள்ளது. அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது.
///
சரி மீண்டும் குரானை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதால் அதிலேயே கேட்கிறேன்.
"உன் நெஞ்சத்தில் உள்ளதை இறைவன் அறிவான்", அல்லது "உன் மார்பில் உள்ளதை இறைவன் அறிவான்" என்று ஏதேனும் வரிகள் இருக்கின்றனவா? நெஞ்சம் அல்லது மார்பு என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா? அங்கே உபயோகப்படுத்தும் நெஞ்சம் என்ற வார்த்தைக்கும் மூளை என்ற பொருள் உண்டா?

///

//உதாரணமாக பரிணாமத்தை நான் அறிவியல் என்று ஒப்புக்கொள்கிறேன். மனித உடலிலும், மற்ற உயிரினங்களின் உடலமைப்பிலும் இருக்கும் குறைபாடுகளை, பரிணாம மீதங்களை (vestiges and sub-optimal design) பரிணாம அறிவியல் கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்று கருதுகிறேன். நீங்களோ நானோ ஒரு ஜெனடிக் பொறியியலாளராக இருந்திருந்தால் அந்த குறைபாடுகளை நீக்கியிருப்போம் என்றே கருதுகிறேன். (உதாரணத்துக்கு, முட்டாள்தனமாக தோன்றிவிட்ட கண், அப்பெண்டிக்ஸ், மீதமிருக்கும் வால் எலும்பு இன்னும் பல) நீங்கள் பரினாம அறிவியலை ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் அறிகிறேன். //

முதலில் அறிவியல் கண்டு பிடிப்புகளில் நிரூபிக்கப் பட்டவை, நிரூபிக்கப் படாதவை என்று இரண்டு வகை உண்டு இதில் நிரூபிக்கபடாதவைகளின் வகைகளில் தான் பரிணாமக் கொள்கை சேரும். இது பற்றி விரிவாக நான் போட்ட பதிவில் விரிவாக விளக்கியிருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள். அதில் நான் கேட்ட கேள்விகளுக்கு பரிணாமத்தை ஆதரிக்கும் எவரும் திட்டவட்டமான நிரூபிக்கப் பட்ட பதில்களைத் தரவில்லை. அந்த பதிவைப் படித்து விட்டு நீங்களாவது தக்க பதில்களைத் தர முயற்சியுங்கள்.
///

பரிணாமக்கொள்கை நிரூபிக்கப்பட்ட கொள்கை.

நான் கேட்பது இது.
பரிணாமக்கொள்கையில் இருக்கும் குறைபாடுகளை அறிந்த பின்னால், குரான் உண்மையான இறைவேதம் என்று நினைத்தீர்களா? அல்லது
குரான் உண்மையான இறைவேதம் என்று நீங்கள் நினைத்த பின்னால், பரிணாமக்கொள்கையில் உள்ள குறைப்பாடுகளை தேடி அறிந்தீர்களா?

///
//என் பதிவில் கூட ஒருவர் ஒரு சிறுவன் கிழவனாவதற்கு முன்னால் இறுதி தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று ஜனாப் மு†ம்மது பெருமானார் கூறியிருப்பதாக எழுதியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள்தான் விளக்கவேண்டும்) அப்படி ஏதேனும் இருந்தால், அது ஒருவரை இறைதூதர் அல்ல என்று ஆக்கும் என்று கூறுவீர்களா? //

//2) மு†ம்மது பொய் பேசியவர், தீர்க்கதரிசனம் அற்றவர் என்பதற்கு என் பதிவில் ஒருவர் "ஒரு சிறுவன் வயதாவற்குள் இறுதி நாள் வந்துவிடும்" என்று கூறியிருப்பதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்போது எப்படி அவரை இறைதூதர் என்று கூறவியலும்?//

முகமது நபியின் போதனைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று இட்டுக் கட்டப் பட்டவை. மற்றது நம்பகமானவை. இஸ்லாத்தை ஒழிக்க நினைத்த யூதர்கள் முகமது நபியின் பெயரால் பல கதைகளை புனைந்து புத்தகமாகவும், வலைப் பக்கங்களிலும் நிறைய பரப்பி உள்ளனர். இந்த நபி மொழியை சொன்னது யார்? எந்த நபி மொழி கிரந்தத்திலிருந்து எடுத்தார் என்ற விபரத்தை தரச் சொல்லுங்கள். அது உண்மையானதுதானா? அல்லது இட்டுக் கட்டப் பட்ட நபி மொழியா என்ற விபரத்தைத் தருகிறேன். நான் படித்த வரையில் அப்படி ஒரு நபி மொழியைப் பார்க்கவில்லை.
///

http://ezhila.blogspot.com/2006/10/blog-post_16.html#116109703341264066

இந்த பக்கத்தைத்தான் என் பதிவில் பின்னூட்டம் இட்டவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இது இஸ்லாமிய வலைத்தளத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லீம் மாணவர்கள் சங்கத்தின் வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது

இதோ அந்த வசனங்கள்
Sahi Muslim
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/041.smt.html



Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7050:
‘A’isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).

——————————————————————————–

அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”

Book 041, Number 7051:
Anas reported that a person asked Allah’s Messenger (may peace be upon him) as to when the Last Hour would come. He had in his presence a young boy of the Ansar who was called Mabammad. Allah’s Messenger (may peace be upon bion) said: If this young boy lives. he may not grow very old till (he would see) the Last Hour coming to you.

——————————————————————————–

Book 041, Number 7052:
Anas b. Malik reported that a person asked Allah’s Apostle (may peace be upon him): When would the Last Hour come? Thereupon Allah’s Messenger (way peace be upon him) kept quiet for a while. then looked at a young boy in his presence belonging to the tribe of Azd Shanilwa and he said: If this boy lives he would not grow very old till the Last Hour would come to you. Anas said that this young boy was of our age daring those days.

——————————————————————————–
Book 041, Number 7053:
Anas reported: A young boy of Mughira b. Shu’ba happened to pass by (the Holy Prophet) and he was of my age Thereupon Allah’s Apostle (may peace be apon him) said: If he lives long he would not grow very old till the Last Hour would come (to the old People of this generation).


///

//மற்ற விஷயங்களை நீங்கள் குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. உதாரணமாக புவியீர்ப்பு விசையை பற்றியும், உலகம் உருண்டை என்பதும், சூரியனும் சந்திரனும் உலகத்தை சுற்றி வருகின்றன என்பதும், அரிஸ்டாட்டிலின் புத்தகங்களிலும் அந்த புத்தகங்க¨ளை வைத்து படித்த மற்ற இடங்களிலும் பேசப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். //

அரிஸ்டாட்டிலின் காலம் கி.மு. 384. இவர் பிறந்தது கிரேக்கத்தில். கிரேக்கம் அன்றைய காலத்தில் அறிவின் ஊற்றாக இருந்தது. அந்த சூழலில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் சில தத்துவங்களை சொல்லியிருக்கலாம். இன்றைய காலம் போல் கணிணி, தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு இல்லாத காலம் அது. முகமது நபி பிறந்ததோ எழுதப் படிக்கத் தெரியாத ஒரு அறியாத சமூகத்தில். அவருக்கு அரிஸ்டாட்டிலின் தத்துவங்களை யார் சொல்லியிருப்பார்? பூமி உருண்டையானது என்ற சிந்தனையாவது அந்த மக்களுக்கு இருந்திருக்குமா?

உங்கள் வாதப்படி அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை கட் அண்ட் பேஸ்ட் செய்து முகமது நபி குர்ஆனை உருவாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த காலத்தில் பத்தோடு பதினொன்றாக குர்ஆனும் முகவரி இழந்து போயிருக்கும். ஏனெனில் முகமது நபிக்குப் பிறகு ஆயிரம்வருடங்களுக்குபின் தோன்றிய கலீலியோ அரிஸ்டாட்டிலின் இயற்பியல் தத்துவமும், வானியல் தத்துவமும் பொய்யானவை என்று நிரூபிக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள். குர்ஆன் சொல்லும் பல உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையிலேயே பல அறிவியல் உண்மைகளை கலீலியோ வெளியிட்டிருக்கலாம் என்பது என் அபிப்ராயம். ஏனெனில் கலீலியோ காலத்தில் குர்ஆன் உலகின் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு விட்டது.
///

அரிஸ்டாட்டிலின் அறிவியலில் உள்ள விஷயங்களை பொய்யாக்குவது ஆச்சரியமில்லை. அதுதான் அறிவியல். மேலும் அதனை பொய்யாக்குகிறது என்று கூறுவதும் சரியல்ல. அறிவியல் என்பது ஒரு முடிவான விஷயம் அல்ல. அது போகும்பாதை. இந்து மதத்தில் அதனை கூறும்போது, இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு மனிதன் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதாகச் சொல்வார்கள். உலகம் உருண்டை என்பதனை இந்துக்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். வராஹ அவதாரச் சிலையை பார்த்தீர்களென்றால், அதில் உலகம் உருண்டையாக இருக்கும். உலகம் தட்டையாக இருக்காது. அரிஸ்டாட்டிலுக்கு இந்துக்களை தெரியாமல் இருக்கலாம். கிரீசுக்கும் இந்தியாவுக்கும் தூரம் அதிகம். ஆனால், அரேபியாவுக்கும் கிரீசுக்கும் அவ்வளவு தொலைவில்லையே? மேலும் உலகம் தட்டையாக ஒரு காலத்தில் இந்துக்கள் நினைத்திருந்தாலும் ஒருபிரச்னையும் இல்லை. ஏனெனில், இந்து மதம் ஏற்கெனவே எல்லா விஷயங்களும் சொல்லப்பட்டுவிட்டன என்று கூறுவதில்லை. மனிதன் எல்லா விஷயங்களிலும், ஆன்மீகம் உட்பட, அறிவையும் ஞானத்தையும் விருத்தி செய்துகொண்டே செல்லவேண்டும் என்றே அவை கூறுகின்றன. இதனால்தான் குரு என்ற கருத்து தோன்றுகிறது. ஆன்மீகத்திலும் மற்ற அறிவியல்கள் போலவே குருக்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு முன்னே வந்த கருத்துக்களை கூறி அதன்மீது மேலும் செழுமை படுத்துகிறார்கள். அதில் அல்லவற்றை ஒதுக்கி நல்லவற்றை தன் பின்னே வருபவர்களுக்கு போதிக்கிறார்கள். அவரின் சீடர்களும் குருக்களின் கருத்தை அப்படியே கூறுவதில்லை. அதிலும், அன்றைய சமுதாயத்துக்கு, நல்லவற்றை எடுத்து அல்லவற்றை நீக்கி போதிக்கிறார்கள். இதுவே குரு பரம்பரை என்று வழங்கப்படுகிறது.

///

//குறைந்தது, இஸ்லாமில் இறைதூதர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் இயேசு கிரிஸ்து, மோஸஸ், ஆபிர†¡ம் ஆகியோருக்கும் இந்த முத்திரை இருந்தது என்று யூத கிறிஸ்துவ புத்தகங்களிலிருந்து நிரூபிக்க வேண்டும். //

//1) நபித்துவ முத்திரை எல்லா இறைதூதர்களுக்கும் இருந்தது என்பதற்கு அத்தாட்சி கொடுங்கள்.
ஜனாப் மு†ம்மது பெருமானார் பற்றியே நீங்கள் தொடர்ந்து எழுதுவதால், கேள்விகள் அதனை பற்றி இருக்கின்றன. மன்னிக்க வேண்டுகிறேன்.//

வேதக்காரர்களான யூதர்களும் கிறித்தவர்களும் இறைவன் அருளிய வேதத்தை தொலைத்து விட்டு வருடா வருடம் பல மாற்றங்களோடு அல்லவா வேதங்களை வெளியிடுகிறார்கள்! இறை வேதத்தையே பாதுகாக்காதவர்கள் இறை தூதர்களின்அடையாளங்களை எங்ஙனம் பாதுகாத்து வைத்திருப்பர்?அவர்களுக்கு வந்த இறைத் தூதரைப் பற்றிய அடையாளங்களை விளக்க வேண்டியது அவர்கள் தான். முந்தய சமுதாயத்துதூதர்களின் அடையாளங்கள் முகமது நபியைப் பின் பற்றுபவர்களுக்கு அவசியமும் இல்லையே! ஒருக்கால் இதுபற்றிய உண்மை அறிந்த யூத கிறித்தவர்கள்தான் இதனை விளக்க வேண்டும்.

///

உண்மையில் இதற்கு உங்களிடமிருந்து நிரூபணம் வந்தால் நான் தவறாக நினைத்திருக்கிறேன் என்று நிரூபணம் ஆகிவிடும். சொல்லப்போனால், நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த கேள்வி இது. இதனைப்பற்றி இப்னு பஷீர் பதிவிலும் குறித்திருந்தேன். யூதர்களின் இறைதூதர்கள், அல்லது குறைந்த பட்சம், இஸ்லாம் யாரையெல்லாம் இறைதூதர்கள் என்று குறிப்பிடுகிறதோ அவர்களுக்கு மட்டுமாவது இந்த முத்திரை இருந்தது என்று நிரூபிப்பீர்கள் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

இல்லை. யூதர்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நபித்துவ முத்திரை பற்றி பேசியது நீங்கள்தான். அந்த நபித்துவ முத்திரை யூத புத்தகங்களிலும் இருக்கிறது, அல்லது இருந்திருக்கின்றது என்பதனை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

நான் கூட சொல்லலாம். யூத புத்தகங்களில் ராமனைப்பற்றியும் கிருஷ்ணனைப் பற்றியும் எழுதியிருந்தது. அதனை யூதர்கள் நீக்கிவிட்டார்கள் என்று நான் சொன்னால், அதனை நான் தான் நிரூபிக்க வேண்டும். யூதர்கள் நீக்கிவிட்டார்கள் அதனால் அதில் இல்லை என்று சொன்னால், நகைப்புக்கு இடமானது. மெலும் யூதர்கள்தான் இதனை விளக்க வேண்டும் என்று சொன்னால் சரியா?

நான் கூட சொல்லலாம். குரானில் எழிலைப் பற்றி வசனம் இருந்தது என்று சொல்லிக்கொள்ளலாம். நீங்கள் சிரிக்க்க மாட்டீர்களா? என்னைத்தானே நிரூபிக்க கேட்பீர்கள்? அப்போது நான், குரானை முஸ்லீம்களே திருத்திவிட்டு, அதனை திருத்த முடியாது என்ற வசனத்தையும் அதில் செருகி வைத்துவிட்டு, ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லலாம். நீங்கள் நம்புவீர்களா? ஏன் எழிலைப் பற்றி இருந்த வசனங்களை முஸ்லீம்கள் நீக்கினார்கள் என்பதனை முஸ்லீம்கள்தான் விளக்க வேண்டும் என்று சொன்னால் நகைப்புக்கிடமானது அல்லவா?

ஆகவே நான் சொன்னதுதான் சரி.
இறைதூதர் என்று யாரும் இல்லை.

///

//3) அவர் அற்புதங்கள் செய்ததாக இன்னமும் நீங்கள் நிரூபிக்கவில்லை.//

'ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப் பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்'
- சொன்னது முகமது நபி.
-நூல்கள் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட அற்புதங்களில் முக்கியமானது குர்ஆன் என்று அவர்களே சொல்லி இருப்பதால் வேறு அற்புதங்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்த குர்ஆன் உண்மையிலேயே அற்புதம்தான் என்பதை நான் பல பதிவுகளில் விளக்கியும் இருக்கிறேன்.

இறைத் தூதரைப் பற்றிய இரண்டாவது பதிவில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதில்களை சொல்லியிருப்பதாக நான் நினைக்கிறேன். மேற் கொண்டு ஏதும் சந்தேகம் இருப்பின் தாராளமாக தெரியப் படுத்துங்கள்.
///

குரானைப் பற்றி மேலே எழுதியிருக்கிறேன்.

-
உங்கள் பொறுமைக்கும் விளக்கங்களுக்கும் மிக்க தாழ்மையான நன்றிகள்
எழில்

Anonymous said...

நபித்துவ முத்திரை பற்றி எனக்கும் இந்த கேள்வி இருந்தது.
நபி முத்திரை பற்றிய அத்தாட்சியை உங்களுக்குக் கொடுத்து நபித்துவத்தை நிரூபிப்பார் என்று ஆர்வமாக எதிர்பார்த்தேன்.
இப்படி கவிழ்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
ஜெயினுலாபுதீனின் ஆட்கள் இஸ்லாத்தை எப்படிப்பட்ட தவறான வழியில் போதிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவ்வாறு தவறான வழியில் போதிப்பதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கிறார்கள்.
வருத்தத்துடன்
ஜமால்

Anonymous said...

எழில்,

நச் பதில்கள்.

இணையத்தில் விவாதிப்பவர்கள் உங்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் கவிதைகளை பதியுங்கள். இதிலேயே மூழ்கிவிடாதீர்கள்.

Anonymous said...

Sahi Muslim
http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/041.smt.html



Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

Book 041, Number 7050:
‘A’isha reported that when the desert Arabs came to Allable Messenger (may peace be upon him) they asked about the Last Hour as to when that would come. And he looked towards the youngest amongst them and said: If he lives he would not grow very old that he would find your Last Hour coming to you the would see you dying).

நான் இந்த வசனத்தை படித்துப்பார்த்தேன்.

நான் தேடிப்பார்த்ததில், இஸ்லாமிய மாணவர் சங்கத்தில் மட்டுமல்ல, பல இடங்களிலும் இந்த ஹதீஸ் சஹி ஹதீஸாகத்தான் இருக்கிறது.

இது சஹி ஹதீஸென்றால், நாம் இனி முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

நீங்கள் சொன்னமாதிரி, முகம்மது (ஸல்) அவர்களை குரு என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹெச். ஜி. ரஸ¥ல் சொன்னது போல குரானை முஹம்மது (ஸல்) அவர்களின் உள்மன வெளிப்பாடாகத்தா எடுத்துக்கொள்ள வேண்டும்.

தெளிவுக்கு நன்றி

முகையதீன்

Anonymous said...

I have been following this debate from beginning.
Few things I have noticed.

1) The islamic bloggers cut your articles to only to those which they can answer.
2) You do not cut any. You have replied to all their points.
3) When you point out that the example they gave is incorrect, they do not reply.
4) You and them have shown examplary decency, patience and good behaviour throughout the debate.

Finally you have shown that the whole prophethood of Mohammad is unproved by any standards. It is surprising such a major religion is based on such flimsy foundation.

May it is this insecurity that drives the Muslims to force everyone to call Mohammad as the prophet.

The anony comment on the Hadis that Mohammad had predicted last judgement within 100 years of his life is the clincher. This had once and for all proved, Mohammad is a pretender.

Good job
C.S

Anonymous said...

அவரவர் முகம்மது நபி இறைதூதர் அல்ல என்று நிரூபிக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, இறைதூதர் என்ற கருத்தே பொய் என்பதை ஆணித்தரமாக நிரூபித்த உங்களை பார்த்து அதிசயமாக இருக்கிறது. அதுவும் இஸ்லாமை பற்றி ஒன்றும் தெரியாமலேயே! முகம்மது ஒரு இறைதூதர் என்று நிரூபிக்க முஸ்லீம் பதிவாளர்கள் கொடுத்த சாட்சியங்களை வைத்தே இதனை நிரூபித்திருக்கிறீர்கள். நடுவில் 3 நாட்கள் காணாமல் போனபோது பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டீர்கள் என்றே கருதினேன். திரும்பி வந்து அருமையாக முடித்திருக்கிறீர்கள்.

பேராசிரியர் தருமி போல ஒரு ஆழமான சிந்தனையாளராக இருக்கிறீர்கள்.

இன்னொரு தருமியை படித்த உணர்வு.

suvanappiriyan said...

சகோதரர் எழிலுக்கு!

//இவ்வாறு தவறான வழியில் போதிப்பதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் சமீபத்தில் அதிகரித்திருக்கிறார்கள். வருத்தத்துடன்
-ஜமால்//

//. ஹெச். ஜி. ரஸ¥ல் சொன்னது போல குரானை முஹம்மது (ஸல்) அவர்களின் உள்மன வெளிப்பாடாகத்தா எடுத்துக்கொள்ள வேண்டும்.

தெளிவுக்குநன்றி-முகையதீன்//

இறைவன் புறத்திலல்லாது முகமது நபியின் உள் வெளிப்பாடாகத்தான் குர்ஆனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு முஸ்லிம் எண்ணிணாலே அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான்.ஜமால் என்றும் முஹைதீன் என்றும் போலிப் பெயர்களில் பின்னூட்டம் இட்டுக் கொண்டு ஒரு சிலர் சந்தோஷப் பட்டுக் கொள்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. இதை எல்லாம் தாண்டிநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாம் உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

//பஹாவுல்லாவின் மதம் கடுமையான நெருக்கடிகளுக்குப் பிறகும் தோன்றி வளர்ந்து இன்று உலகில் வளர்ந்து வருகிறது. //

பஹாவுல்லாவின் மதம் எந்த நாட்டில் வளர்ந்து வருகிறது? புதிய செய்தியாகவல்லவா இருக்கிறது?

//நான் கூட ஒரு புத்தகம் எழுதி, அதுதான் அற்புதம் என்று ஆயிரம்பேரை சொல்ல வைக்க முடியும்.//

ஆயிரம் பேர் வேண்டாம்? முதலில் உங்களின் சொந்த பந்தங்களே இதை ஒத்துக் கொள்ள மாட்டர்கள். ஆனால் குர்ஆன், மொழி இனங்களைத் தாண்டி 'இது இறை வேதம் தான்' என்று பல நாட்டவராலும் ஒத்துக் கொள்ளப் பட்டுள்ளது.

// வைரமுத்துவையோ அல்லது மு மேத்தாவையோ காட்டினாலும், "இது கண்ணதாசன் எழுதியது போல இல்லை" என்று கூறிவிடுவார்கள்.//

'கவிதைக்கு பொய் அழகு' என்று உண்மையைப் போட்டு உடைத்த இந்த சினிமாக் கவிஞர்களையும் குர்ஆனின் போதனைகளையும் ஒன்றாக்கும் உங்களின் சிறுமையை எண்ணி பரிதாபம்தான் பட முடியும்.

//சரி மீண்டும் குரானை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதால் அதிலேயே கேட்கிறேன்.
"உன் நெஞ்சத்தில் உள்ளதை இறைவன் அறிவான்", அல்லது "உன் மார்பில் உள்ளதை இறைவன் அறிவான்" என்று ஏதேனும் வரிகள் இருக்கின்றனவா? நெஞ்சம் அல்லது மார்பு என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா? அங்கே உபயோகப்படுத்தும் நெஞ்சம் என்ற வார்த்தைக்கும் மூளை என்ற பொருள் உண்டா?//

ரொம்பவும் குழம்பிப் போய் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மனது என்று நாம் நினைத்தது இன்று மூளையின் மூலமே என்ற உண்மையைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.மனம் என்று எடுத்துக்கொண்டாலும் மூளை என்று எடுத்துக் கொண்டாலும் ஒரே அர்த்தத்தை தரும் 'கல்ப்' என்ற வார்த்தையைப் போட்டு எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக ஆக்கிறிருக்கிறேன் என்று இறைவன் நம்க்கு விளக்குகிறான். இதை நான் சிறு பிள்ளைக்கு விளக்குவது போல் விளக்கி விட்டேன். அது எதையுமே கண்டு கொள்ளாமல்"உன் நெஞ்சத்தில் உள்ளதை இறைவன் அறிவான்", அல்லது "உன் மார்பில் உள்ளதை இறைவன் அறிவான்" என்று ஏதேனும் வரிகள் இருக்கின்றனவா? என்று குழப்பத்தோடு அதே கேள்வியை வைக்கிறீர்கள். விளங்க வேண்டும் என்றுதான் கேட்கிறீர்களா? அல்லது விதண்டா வாதத்துக்கு கேட்கிறீர்களா? என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

//பரிணாமக்கொள்கை நிரூபிக்கப்பட்ட கொள்கை.

நான் கேட்பது இது.
பரிணாமக்கொள்கையில் இருக்கும் குறைபாடுகளை அறிந்த பின்னால், குரான் உண்மையான இறைவேதம் என்று நினைத்தீர்களா? அல்லது
குரான் உண்மையான இறைவேதம் என்று நீங்கள் நினைத்த பின்னால், பரிணாமக்கொள்கையில் உள்ள குறைப்பாடுகளை தேடி அறிந்தீர்களா?//

டார்வினின் பரிணாமக் கொள்கை எங்கு நிரூபிக்கப் பட்டது என்ற விபரத்தைத் தாருங்கள். இன்று வரை அது ஒரு அனுமானமாகத்தான் கடைபிடிக்கப் படுகிறது. இன்னும் எத்தனை அண்டுகள் போனாலும் டார்வினின் சித்தாந்தத்தை எவராலும் நிரூபிக்க முடியாது.

நான் படிக்கும் காலங்களிலேயே பரிணாமக் கொள்கைளை நன்கு படித்து விட்டேன். குர்ஆனின் மொழி பெயர்ப்பை நான் விளங்க ஆரம்பித்தது சமீப காலங்களில் தான். நான் படிக்கும் காலங்களில் பரிணாமக் கொள்கையில் ஏற்பட்ட சந்தேகங்களை என் அசிரியர்களிடம் பல முறை கேட்டிருக்கிறேன். சில கேள்விக்கு பதில் சொல்வார்கள். மற்ற சில கேள்விகளுக்கு இரண்டு நாள் கழித்து சொல்கிறேன் என்று சொன்னதோடு சரி அதற்கான பதில் வராது. இன்று வரை பலரிடம் கேட்டு விட்டேன். அதே மழுப்பலான பதில்தான் வருகிறது.

ஆனால் குர்ஆனோ மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான். சந்ததிகள் எவ்வாறு பெருகுகிறது. தாயின் வயிற்றில்நடக்கும் பரிணாமங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டு காட்டி என் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தியும் செய்தது.

டாக்டர் T.V.N. பெர்சாத்!

இவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.

'என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

2) டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்!

“In every one of you, all components of your creation are collected together in your mothers womb by forty days …..”

-Saheeh Muslim 2643 , Bhuhary – 3208
-Saheeh Muslim 2645

இந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :

'ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'

டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன் மகப்பேறு, அணுவியல் ஆகிய இரு துறைக்கும் தலைவராக பணியாற்றியவர்.மேலும் மகப்பேறு மருத்துவம், மனிதனின் ஜீன்கள் சம்பந்தமான படிப்பு, அணுவியல் போன்ற துறைகளில் பேராசிரியராக Baylor College Of Medicine, Hoston, Texas,USA யில் பணியாற்றுகிறார். Formerly, he was Professor of OB-Gyn and the chairman of the Department of OB- Gyn at the university of Tennessee, Memphis, USA. He was also the president of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynecology Public Recognition Award in 1992.

3) டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்!

இவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :

'குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'

Dr e. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania,USA. There for 22 years he was Professor of Anatomy, the chairman of the department of Anatomy, and the director of the Daniel Baugh Institute. He was also the president of the Teratology society.

4) டாக்டர் வில்லியம் ஹே!

டாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.

'இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'

Dr William W.Hay is a well known marine scientist. He is professor of Geological Sciences at the University of Colorado, Boulder, Colorado,USA. He was formerly the Dean of the Rosential School of Marine and Atmospheric Science at the university of Miami,Miami, Florida.

Evidence from
“The Scientific Miracles in the Holy Quran”
“This is the Truth” Video Tape



//Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”//

நீங்கள் எடுத்துவைத்த இந்த நபிமொழியை நன்கு கவனியுங்கள்: 'அந்த மக்களுக்கான இறுதி நேரம் பற்றித்தான் நபியவர்களின் தீர்க்கதரிசனம் சொன்னதே தவிர, மனிதஉலகின் இறுதி நேரம் பற்றி அல்ல'. அந்தச் சிறுவனுடன் வந்திருந்த அந்த மக்களைப் பற்றி, அவன் வளர்ந்து பெரியவனாகும் போது அவர்கள் தம் இறுதி நேரம் வரப்பெற்று 'போய்விடுவார்'கள். கிழவனாகும் போது அல்ல. என்பது தான் இந்த நபி மொழிக்கான விளக்கம்.

மேலும், இறுதிநாள் பற்றி இறைவனே அறிவான் என்று குர் ஆன் சொல்லும் போது, அதற்கு மாற்றாக நபியவர்கள் இறுதிநாள் பற்றி எப்படி 'குறிப்பிட்டு'ச் சொல்ல முடியும்?. எனவே இதில் பொருத்தமின்மையையோ, தவறான தீர்க்க தரிசனத்தையோ 'எதிர்பார்ப்பது 'பொருந்தவில்லை எழில் அவர்களே.இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை இரண்டொரு நாளில் தனியாக தருகிறேன்.

//அரிஸ்டாட்டிலின் அறிவியலில் உள்ள விஷயங்களை பொய்யாக்குவது ஆச்சரியமில்லை. அதுதான் அறிவியல். மேலும் அதனை பொய்யாக்குகிறது என்று கூறுவதும் சரியல்ல. அறிவியல் என்பது ஒரு முடிவான விஷயம் அல்ல.//

முதலில் நீங்கள் கூறியது அரிஸ்டாட்டிலைப் பார்த்து முகமது நபி குர்ஆனை உண்டாக்கினார் என்று. அதை கலிலியோபொய்ப்பித்தவுடன் அறிவியல் முடிவுகளிலேயே நிரந்தரமான முடிவு எதுவும் இல்லை என்று ஜகா வாங்குகிறீர்கள்.இது போன்று உண்மை வெளிவரும்போது ஒன்றும் தெரியாதது போல் சாமர்த்தியமாக நழுவிவிடுகிறீர்களே!

//உலகம் உருண்டை என்பதனை இந்துக்கள் வெகுகாலமாகவே அறிந்திருக்கிறார்கள். வராஹ அவதாரச் சிலையை பார்த்தீர்களென்றால், அதில் உலகம் உருண்டையாக இருக்கும். உலகம் தட்டையாக இருக்காது.//

நான் ஏற்கெனவே இந்து மத வேதங்களும் ஒருக்காலத்தில் இறைவன் புறத்திலிருந்து வந்ததுதான். பின்னாளில் வந்தவர்கள் தான் அதில் சாதீயத்தை புகுத்தி விட்டார்கள் என்று விளக்கியும் இருக்கிறேன். அந்த வேதங்களின் துணை கொண்டு இந்துக்களுக்கும் அந்த அறிவு இருந்திருக்கலாம்.

//உண்மையில் இதற்கு உங்களிடமிருந்து நிரூபணம் வந்தால் நான் தவறாக நினைத்திருக்கிறேன் என்று நிரூபணம் ஆகிவிடும். சொல்லப்போனால், நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த கேள்வி இது. இதனைப்பற்றி இப்னு பஷீர் பதிவிலும் குறித்திருந்தேன். யூதர்களின் இறைதூதர்கள், அல்லது குறைந்த பட்சம், இஸ்லாம் யாரையெல்லாம் இறைதூதர்கள் என்று குறிப்பிடுகிறதோ அவர்களுக்கு மட்டுமாவது இந்த முத்திரை இருந்தது என்று நிரூபிப்பீர்கள் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.//

உண்மையிலேயே உங்களின் வாதம் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. முகமது நபி தூதர்தான் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடிகிறது? குர்ஆனும் நபி மொழியும் பாதுகாக்கப் பட்டுள்ளதால் உங்களிடம் நான் விவாதம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த குர்ஆன் மனிதர்களால் மாற்றப் பட்டு இருந்தால் பல தோல்விகளை உலகம் முழுதும் இஸ்லாம் சந்தித்து இருக்கும். உங்களிடமும் என் வாதம் எடுபடாமல் போயிருக்கும். அதே குர்ஆன் தான் ஏசுவையும் ஆபிரஹாமையும் உண்மைப் படுத்துகிறது. கிறித்தவர்களின் வேதமும், யூதர்களின் வேதமும் பாதுகாக்கப் பட்டிருந்தால் உலகுக்கு குர்ஆன் வர வேண்டிய அவசியமும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்க ஏசு நாதர் கொண்டு வந்த வேதம் இன்று நம் கையில் இல்லை. வேதமே பாதுகாப்பாக இல்லாதபோது அவரின் போதனைகள் எவ்வாறு பாதுகாக்கப் பட்டிருக்கும்? ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை முகமது நபிக்கு முன் உள்ள தூதர்களை நம்ப வேண்டும் குர்ஆன் சொல்கிறது என்பதால். மற்ற தூதர்களின் அடையாளங்களை தேடிக் கொண்டிருப்பது முஸ்லிமின் வேலையும் அல்ல. அதே சமயம் முகமது நபியைப் பற்றிய உண்மையை ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கான ஆதாரங்களை நான் முன்பே தெளிவும் படுத்தி விட்டேன். ஏசு நாதரை நிரூபித்தால்தான் நான் குர்ஆனை ஒத்துக் கொள்வேன் என்றால் அது உங்களின் விருப்பம். அதில் நான் எதுவும் செய்ய முடியாது நண்பரே!

அழகாகவும், பொறுமையுடனும் கேள்விகளையும் பதில்களையும் தநத எழிலுக்கு நன்றிகள். இறைவனே இல்லை என்ற நாத்திகத்திலேயே இருந்து விடாதீர்கள். முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர' என்பது. 'இறைவன்இல்லை'என்று ஒத்துக் கொண்ட எழில் அடுத்த கட்டமாக 'அல்லாஹ்வைத் தவிர' என்ற வட்டத்துக்குள் நுழைய வேண்டும். இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இறைவன் நாடினால்நுழைவார் என்று சொல்லி முடிக்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

எழில் said...

பின்னூட்டம் எழுதிய சகோதரர்கள், சுவனப்பிரியன், ஜமால், முகைதீன், நல்லவன் , சடையப்பா அனைவருக்கும் நன்றிகள்.

இதனை தொடர எனக்கு ஆர்வம் இல்லை. சுவனப்பிரியன் பதில் எழுதியிருக்கிறார். அபு முஹையும் பதிலெழுதியிருக்கிறார். நான் எழுதிய கேள்விகளையே மீண்டும் எழுத வேண்டிய நிலைக்கு வருவது எனக்கு பிடித்தமானதாக இல்லை.
ஒரே ஒரு வரி. சுவனப்பிரியனுக்கு. நான் நாத்திகனல்ல. இறைவன் என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை வேறு. நான் இந்து என்பதால் வரையறுப்பதில்லை. வரையறுக்க முடியாதது இறை.

வாசகன் said...

அன்பு எழில்,
வெற்று பரபரப்பே அல்லாமல், வேறு நோக்கமில்லாத இத்தகைய விவாதங்களில் நான் பின்னூட்டுவதில்லை. பிரயோசனமுமில்லை. எனினும் உங்கள் விடை பெறும் முத்தாய்ப்பின் கடைசி வரிகள் இதை எழுதத் தூண்டின.

//இறைவன் என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் வரையறை வேறு. நான் இந்து என்பதால் வரையறுப்பதில்லை. வரையறுக்க முடியாதது இறை.//

இறைவனுடைய ஆற்றலுக்கு வேண்டுமானால் வரையறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இறைவனென்றால் இப்படித்தான் என்று ஒரு வரையறை; இலக்கணம் இருக்கத்தான் வேண்டும்.

அவன், பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவனாக, பாலின வேறுபாடுகளில் சிக்காதவனாக, எல்லாவகையிலும் இணையற்றவனாக, பிறருடைய தேவையற்றவனாக இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், முஸ்லிம்கள் இறைவனுக்குச் சொல்லும் இலக்கணங்கள் மிகச்சரியானவை. ஆயிரம் விளக்கம் அளித்தாலும், துரதிருஷ்டவசமாக, இந்து மதம் இவ்விடயத்தில் தெளிவாக இல்லை. ஒருவேளை, அன்பர் சுவனப்பிரியன் சொல்வதைப் போல, இறைவனிடமிருந்து வந்த மதத்தை; வேதத்தை பிற்பாடு 'சுயநல மனிதர்கள்' அரசியல் செய்து மாற்றி இருக்கலாம். அவரவர் நிலைப்பாடு அவரவர்க்கு.

ஏதேனும் ஒரு நிலையில் இருந்துக்கொண்டும் உறைந்துக்கொண்டும் பார்த்தால் இன்னொரு நிலை பற்றி கேள்விகள் எழும்பத்தான் செய்யும். இது ரிலேட்டிவிடி. நமக்கிருப்பது போல இந்து மத கருத்துக்கள்; அவதாரங்கள் பற்றியும் முஸ்லிம்களுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கலாம். எனினும் அவற்றை விவாதிப்பது முறையாகவோ, பயனாகவோ இருக்காது என்பதால் முஸ்லிம்கள் அதை கேட்பதில்லை/அவசியமாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். தவிரவும், இங்குள்ள சூழலில், அதற்கான இயல்புகள் சாத்தியமேயில்லை.

முடிவில், முடிவற்ற இது போன்ற விவாதங்களால் காலம் தான் சுவாரசியமாக நகர்கிறது - நிறைய பேரின் நேரங்களை உண்டபடி.

எழில் said...

அன்புள்ள ராஜ்,

இறைவனுக்கு வரையறை செய்ய முடியாது. undefinable என்று கூறுகின்றன இந்து மத தத்துவங்கள். இதனை நிர்குணப்பிரம்மம் என்றும் சகுணப்பிரம்மம் என்றும் பலவாறாக இந்து தத்துவங்கள் கூறும். வேதங்களாலும், ஆயிரக்கணக்கான பெருங்கவிகளாலும் வரையறுக்க முடியாதது இறை. அதனை ஒரு மனிதர் சொன்ன ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடுவதும், அந்த புத்தகத்துக்குப் பிறகு இறை வாயை திறக்காது என்பதும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாதது. அதற்குள் செல்ல இங்கு எனக்கு நேரமும் இல்லை.

இறைவனை வரையறுக்கும் இஸ்லாமியர்கள் இறைதூதருக்கு வரையறை இல்லை; இலக்கணம் இல்லை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. சொன்ன ஒரு இலக்கணம் கூட சரியானதாக இல்லை. நல்லவர் வல்லவர், தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டு கவிதை சொன்னவர் என்பதெல்லாம் ஒரு இலக்கணம் என்றால் எத்தனை பேரை நாம் இறைதூதர் என்று ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கேட்டால், விதண்டாவாதம் என்று சொல்கிறார்கள். முதுகில் மச்சத்துடன் கவிதை சொல்பவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்!

முகம்மது பெருமானாரை இறைதூதர் என்று ஒப்புக்கொண்ட பின்னால், அதற்கு செய்யும் சால்ஜாப்புகளாகவே தோன்றும்படியே இஸ்லாமிய சகோதரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி

Anonymous said...

எழில்,
என்னை போலி என்று சில பதிவுகளில் எழுதியிருக்கிறார்கள். போகட்டும். அங்கே இதனை பதிவு செய்தேன். அவர்கள் வெளியிடவில்லை.

முடிந்தால் வெளியிடுங்கள்.

//Book 041, Number 7050:
அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”//

என்னை பாதித்த இந்த ஹதீஸை மேலும் படித்து இன்னும் சில இடங்களில் பரிசோதித்து, ஒரு நண்பரிடமும் கேட்டு தெளிவு பெற்றேன்.

இது ஒரு ஹதீஸ் அல்ல. இதே போல தொடர்ந்து மூன்று ஹதீஸ்கள் இருக்கின்றன. வெவ்வேறு நபர்கள் அவரிடம் வந்து கேட்கிறார்கள். மூன்றுக்கும் இதே மாதிரி பதிலை சொல்கிறார். இதற்கு விளக்கம் எழுதும் சகோதரர்கள் அந்த கிழவர்களுக்கு இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார் என்று சாக்கு சொல்கிறார்கள். நம்பும்படியா இருக்கிறது?

ஒவ்வொருவர் சாகும்போதும் இறுதித்தீர்ப்பு நாள் வந்துவிடுமா? அப்புறம் ஏன் அவர்களுக்கு கல்லறைவைத்து இறுதித்தீர்ப்பு நாளுக்காக காத்திருப்பதாக சொல்கிறோம்? இறுதித்தீர்ப்பு நாளில் எல்லோரும் எழுப்பப்படுவார்கள் என்றால் எத்தனை இறுதித்தீர்ப்பு நாட்கள் வரும்?

ஏமாற்று வேலைகளுக்கும் ஒரு அளவு இருக்கிறது.

முகையதீன்

Anonymous said...

எழில்,
என் பின்னூட்டத்தை நீங்கள் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை என்பதை உங்கள் பதில் நிரூபிக்கிறது. எல்லாரும் இறைவன் என்பதற்கும் எல்லாவருக்குமான இறைவன் என்பதற்குமான வேறுபாட்டை நான் சொன்னேன்.

புரிந்துக்கொள்வதிலேயே (பிடிவாத) பிழைகள் இருக்கும் நிலையில் விவாதங்களால் விளையப்போவது ஒன்றுமில்லை.
பேசிப்பலனில்லை. விட்டுவிடலாம். நன்றி. - RAJ

Anonymous said...

//இறைவனை வரையறுக்கும் இஸ்லாமியர்கள் இறைதூதருக்கு வரையறை இல்லை; இலக்கணம் இல்லை என்று சொல்வது//

இறைவனுக்கென்று இருக்கிற இலக்கணங்களையே முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள்.
நாலு தலை, எட்டுக்கரங்கள் போன்ற கற்பனைகள், சயனிப்பது, உணவருந்துவது, பாலினத்துள் அடங்குவது போன்ற பலவீனங்கள் இறைவனுக்கும் இருக்கக்கூடாது என்பது தான் முஸ்லிம்களின் இறை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இறைத்தூதருக்கும் கண்டிப்பாக வரையறை இருக்கத்தான்வேண்டும். முஸ்லிம்களால் உங்களுக்குப் புரிவது போல சொல்ல முடியாததாலோ,நீங்கள் புரிந்துக்கொள்ள மறுப்பதாலோ, வரையறையே இல்லை என்று ஆகிவிடாதில்லையா?

எழில் said...

சடையப்பா என்ற சகோதரர் இவ்வாறு அபுமுஹையின் பதிவில் எழுதியிருக்கிறார்

//இறைவன் கூறுகையில்.
மனிதர்களே! மறுமையின் மீது சந்தேகம் இருந்தால் அறிந்து கொள்ளுங்கள் நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).
//

இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது. இந்திரியம் எவ்வளவு முக்கியமோ அதே போல பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையும் முக்கியம். இரண்டும் பாதிப்பாதி கலந்துதான் ஒரு ஆணோ பெண்ணோ பிறக்கிறார்கள். வெறும் இந்திரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது.

அந்த காலத்தில் பெண்ணின் கருப்பையினுள் இருக்கும் முட்டையை அறிந்திராதவர்களாக இருந்தார்கள். கேலன் என்னும் ஒரு கிரேக்க அறிவியலறிஞர் மட்டுமே பெண்ணின் திரவமும் ஆணின் திரவமும் சேர்ந்துதான் கரு உருவாகிறது என்று கருதினார். அப்படி குரானில் இன்னொரு இடத்தில் கூறியிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்த இடத்தில் கூறியது தவறுதானே?

http://en.wikipedia.org/wiki/Claudius_Galen

உண்மையில் இது போல வாதிடுவதே மிகவும் தவறானது என்பதை தாங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜனாப் முகம்மது பெருமானார் நல்ல அறிவுரைகளை கூறி, கடவுளின்மீது பக்தி வரவேண்டும் என்பதற்காக கூறியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்வதுதான் சரி என்று கருதுகிறேன்.

இது போல என் புத்தகம் சொல்வதுதான் சரி அது நேரடியாக கடவுள் சொன்னது என்று ஆரம்பித்தால், அதன் மூலம் எந்த அராஜகத்தையும், கொலையையும், அநீதியையும் நியாயப்படுத்திவிடலாம்.

இஸ்லாமிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

மதிப்புக்குறிய தருமி அவர்கள் இது சம்பந்தமாக ஒரு அருமையான பதிவெழுதியிருக்கிறார்கள். சகோதரர்கள் கவனிக்க வேண்டுகிறேன்

எழில் said...

நன்றி சகோதரர் சடையப்பா,

இந்த பின்னூட்டத்தைத்தான் மேலே குறிப்பிடுகிறேன்.

மிக்க நன்றி

எழில் said...

சகோதரர் சடையப்பா அவர்களே,

அய்யய்யோ,

மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் எதற்கு? சொல்லப்போனால், நான் தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.நான் எழுதுவது உங்களை புண்படுத்துமா இல்லையா என்பதுகூட தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தாங்கள் கூறுவது மிகச்சிறந்த அறிவுரை. மனிதன் ஆணவமாக இருக்கக்கூடாது, கடவுளை நினைக்கவேண்டும் என்றெல்லாம் எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால், கடவுளே நேரே வந்து கூறினார் என்று கூறினால், அது கடவுளுக்கு தேவையை உருவாக்கிவிடும் அல்லவா? இறை தேவை அற்றது. அது வந்து "என்னை வணங்கு, இல்லையேல் நெருப்பில் சுட்டுவிடுவேன்" என்று சொல்லுமா? ஜனாப் முகம்மது நபிகள் நல்ல அறிவுரை கூறியிருக்கிறார்கள். அதனை அல்லாவே சொன்னதாக அவர் கூறியிருக்கலாம். அப்படி சொன்னால்தான் அரபிகள் நம்புவார்கள் என்பதற்காக சொல்லியிருக்கலாம். ஆனால், நாம் அப்படி எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு வார்த்தையையும் உரசி பார்த்தால், இன்றைய அறிவுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் பொருந்தவில்லை என்றால், அவர் சொன்ன நல்ல அறிவுரை எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? நல்ல அறிவுரை யார் சொன்னால் என்ன? சமூகத்துக்கு நல்லது என்றால், எடுத்துக்கொள்ளலாமே? அதில் ஒரு சில வார்த்தைகள் சரியில்லை என்றால், அதனை ஒதுக்கிவிட்டு, அந்த காலத்துக்கு சொன்னது என்று விட்டுவிடலாம். அதனைத்தான் நான்கூறுகிறேன்.

நாம் பிள்ளைகளை பெறுகிறோம். அது நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நம்மிடம் அன்பு செலுத்துவதை விட மேலானதாக என்னத்தை விரும்புவோம்? நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அடித்துகொள்ளாமல் விட்டுக்கொடுத்து அவர்களது குழந்தைகளுடன் வளமாக வாழ்வதைத்தானே விரும்புவோம்? நம்மிடம் அன்பு செலுத்தாதவனை மற்றொரு பிள்ளையை கூப்பிட்டு, நீ என் மீது அன்பு செலுத்தினால், என்னை மதிக்காத உன் சகோதரனை அடி என்றா சொல்லுவோம்? என் மீது அன்பு செலுத்தாத. எனக்கு மரியாதை செய்யாத நம் மகனை நெருப்பிலா சுடுவோம்?

சாதாரண மனிதர்களான நமக்கே இப்படிப்பட்ட கருணை இருக்கும்போது, இறைக்கு எவ்வளவு கருணை இருக்கும்?

அபு முஹையின் பதிவை படித்ததும் அதுதான் எனக்கு தோன்றியது.

இதனை அவர் பதிவில் எழுதாதன் காரணம் அவர் மனம் புண்படக்கூடும் என்பதாலேயே.

Anonymous said...

//
//இறைவன் கூறுகையில்.
மனிதர்களே! மறுமையின் மீது சந்தேகம் இருந்தால் அறிந்து கொள்ளுங்கள் நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).
//

இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது. இந்திரியம் எவ்வளவு முக்கியமோ அதே போல பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையும் முக்கியம். இரண்டும் பாதிப்பாதி கலந்துதான் ஒரு ஆணோ பெண்ணோ பிறக்கிறார்கள். வெறும் இந்திரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது.

அந்த காலத்தில் பெண்ணின் கருப்பையினுள் இருக்கும் முட்டையை அறிந்திராதவர்களாக இருந்தார்கள். கேலன் என்னும் ஒரு கிரேக்க அறிவியலறிஞர் மட்டுமே பெண்ணின் திரவமும் ஆணின் திரவமும் சேர்ந்துதான் கரு உருவாகிறது என்று கருதினார். அப்படி குரானில் இன்னொரு இடத்தில் கூறியிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்த இடத்தில் கூறியது தவறுதானே?
//
சுவனப்பிரியன் உங்களது பதில் என்ன?

Anonymous said...

//நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).//

//இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது.//

நன்றி சடையப்பா

இது இறைவேதம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறீர்கள்

Anonymous said...

உங்கள் விவாத்தின் மூலம் பல விடயங்களை நான் அறிந்து கொண்டேன்.
நான் மட்டுமல்ல, முக்கியமாக சகோதரர் சுவனப்ரியன், மற்றும் எழில் ஆகியோரின் பெரும் சிரத்தையால் என்னைப் போல் இத்தளத்தைப் பார்வையிடும் அனைவரும் பல முக்கியமான விடயங்களைத் தெரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

நன்றி.

அதே நேரம் இவ்விவாதத்தின் முடிவில்
நீங்கள் உங்களுக்கிடையில் ஒற்றுமையின்றி முரண்பாடுகளுடன் விடைபெறுவது எனக்கு வேதனையளித்தது..

இவ்விவாதம் மதங்களைப் பற்றியதானால் நமக்கிடையில் உள்ள சண்டைகளை நீக்கி விட்டு இதிலுள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோமே!

எல்லா மதங்களும் அவை தோன்றிய போது சமுதாயத்துக்கு அவ்வப்போது இருந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் விதத்தில் ஒரு சேதியைக் கொண்டு வந்தன.இன்று மதம் என்கிற வரையறையே மனிதர்களுக்கிடையே பிரச்சினையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

Anonymous said...

அருமையான பதிவு

Anonymous said...

Brilliant website, I had not come across ezhila.blogspot.com earlier in my searches!
Carry on the superb work!