Monday, October 23, 2006

இறைதூதர்-இப்னு பஷீர்-3

இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் என்னுடைய இந்த பக்கத்துக்கு இங்கே மறுமொழி அளித்திருக்கிறார்கள்.

மீண்டும் அவருக்கு என் நன்றி உரித்தாகுக. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் என்னுடைய ஆரம்பக் கேள்வியை தாண்டி செல்பவை. அதனால், மீண்டும் அந்த கேள்வியை இங்கே

நினைவுபடுத்திக்கொள்கிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


///அன்புச் சகோதரர் எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் இறைத்தூதர்கள் குறித்து மேலும் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். அவற்றிற்கு பதிலாக எனக்குத் தோன்றிய சில விளக்கங்களை

முன்வைக்கிறேன்.

//யூதம் மிகவும் பழையது என்று அறிகிறேன். அவர்களில் பல இறைதூதர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அறிகிறேன். ஆபிரஹாமுக்கு பிந்தைய இறைதூதர்களை

யூதர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். http://www.shamash.org/lists/scj-faq/HTML/faq/12-11.html. ஆப்ர?¡முக்கு பின் 46 யூத இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள். 7 பெண் இறைதூதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த பக்கம் குறிப்பிடுகிறது. //

தகவலுக்கு நன்றி சகோ.எழில்! ஆபிர?¡முக்கு பிந்திய இறைத்தூதர்களை யூத மதம் அங்கீகரிக்கவில்லை என தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். இத்தனை பேரை இறைத்தூதர்கள் என நம்பும் யூதர்கள், அவர்களின் குலத்திலேயே தோன்றிய, பிறக்கும்போதே அத்தாட்சிகளுடன் பிறந்த, (தந்தையின்றி தாயின் வயிற்றில் தோன்றியது, தொட்டில் பருவத்திலேயே பேசியது) இயேசுவை (அலை) ஏற்றுக் கொள்ளாமல் போனது விந்தையே.
///


வேறு சமயத்தில் நேரம் இருக்கும்போது இது பற்றி பேசலாம் என்று கருதுகிறேன். என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//கிறிஸ்து தன்னை புரோபட் என்று கோரவில்லை. கிறித்து தன்னை இறைவனின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆகவே யூதர்கள் அவரை ஒரு புரோபட் என்று அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது சரியாக பொருந்தாது என்று நினைக்கிறேன். ஆகவே யூதமும் இஸ்லாமும் மட்டுமே இறைதூதர்களை கொண்டவை என்பதுதானே சரியாக இருக்கும்? //

இயேசு (அலை) அவர்கள் தொட்டில் குழந்தையாக முதன் முதலாக பேசியது, ‘நிச்சயமாக நான் அல்லா?வின் அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தை கொடுத்திருக்கிறான். என்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்’ என்பதுதான். (குர்ஆன் 19:30). அப்படியிருக்க அவர் தன்னை இறைமகனாக கூறிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. கிருஸ்துவர்களுக்கிடையே கூட இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குறைஷிகளின் கொடுமை பொறுக்க முடியாமல் முஸ்லிம்களில் சிலர் ?பஷா என்ற நாட்டிற்கு அடைக்கலம் நாடிச் சென்றனர். அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர் ‘அஸ்ம?¡ நஜ்ஜாஷி’ என்ற கிருஸ்துவ மன்னர். அந்த முஸ்லிம்களைத் தொடர்ந்து குறைஷிகளின் குழு ஒன்று ?பஷாவிற்கு சென்று மன்னரை சந்தித்து முஸ்லிம்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரினர்.

ஆனால் மன்னர் அதை மறுத்து விட்டார். ஏமாற்றமடைந்த குறைஷிகள் மறுநாள் மீண்டும் மன்னரிடம் சென்று, ‘அரசே, இவர்கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார்த்தையை கூறுகிறார்கள்’ என்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து இது பற்றி விசாரித்தார். “எங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறியதைத்தான் நாம் அவர் விஷயத்தில் கூறுகிறோம்; அவர் (ஈஸா (அலை)) அல்லா?வின் அடிமை; அவனது தூதர்; அவனால் உயிர் ஊதப்பட்டவர்; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர்யமுக்கு அல்லா?வின் சொல்லால் பிறந்தவர்” என்று முஸ்லிம்களின் குழுவில் இருந்த ஜஅ·பர் (ரழி) கூறினார். இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து “அல்லா?வின் மீது ஆணையாக! மர்யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவு கூட நீ கூறியதை விட அதிகமாக கூறியதில்லை” என்றார். இதைக்கேட்டு முகஞ்சுழித்த மத குருமார்களிடம் “அல்லா?வின் மீது ஆணையாக! நீங்கள் முகஞ்சுழித்தாலும் இதுவே உண்மை” என்று கூறிவிட்டார்.

டாவின்சி கோடு நாவலில் இயேசு அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியாது என்ற போதிலும் இந்த விஷயத்தில், அதாவது, இறைத்தூதரான இயேசு பிற்காலத்து கிருஸ்துவர்களால் இறைமகனாக்கப் பட்டார் என்ற கருத்து, கிருஸ்துவர்களிடையேகூட இது போன்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
///


இதுவும் என்னுடைய மேற்கண்ட கேள்விக்கு இது வெளியில் உள்ளது என்று கருதுகிறேன்.

///
//இஸ்லாமுக்கு பின்வந்த பஹாவுல்லா தோற்றுவித்த பஹாய் போன்ற மதங்கள் முகம்மதை இறைதூதராக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இஸ்லாமியர்கள் பஹாவுல்லா போன்றவர்களை இறைதூதர் என்று ஒப்புக்கொள்வதில்லை.//
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் தம்மை இறுதித்தூதர் என்று சொன்னதை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?
///


ஒரு பஹாய் பக்கத்தை இங்கே காட்டுகிறேன்.
http://www.bci.org/islam-bahai/SealProphets.htm.

மேலும் இந்த பக்கம் ஒரு மனிதரை இறைதூதர் என்று ஒரு மதத்தினரின் வேதப்புத்தகத்தின் அடிப்படையிலேயே ஒத்துக்கொள்வதில் உள்ள பிரச்னையை தொடுகிறது. இருப்பினும், பஹாய் வரலாறு பற்றியோ, பஹாய் இறைதூதரா அல்லவா என்பதிலோ சென்றுவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

//
//தூதுத்துவம் என்பது மேற்கண்ட மதங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது இல்லையே?//

உங்களைப் போன்ற கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவினர் தூதுத்துவத்தை மறுக்கிறார்கள் என்பதால் அது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லையே?//


மிகவும் சரி. என்னுடைய கருத்தாக இருப்பதாலோ அது உங்களுடைய கருத்தாக இருப்பதாலோ அது உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை. குரான் சொல்கிறது என்பதாலோ, யூதர்களின் தோரா சொல்கிறது என்பதாலோ, பைபிள் சொல்கிறது என்பதாலோ, வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ, பஹாய் மதத்தினரின் வேதப்புத்தகம் சொல்கிறது என்பதாலோ ஒரு விஷயம் உண்மையாகவோ பொய்யாகவோ ஆவதில்லை.
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பது தமிழ் மரபு.

//சொல்லப்போனால், அந்த கால சமூகங்களில் ராணுவ தலைவர்களும், ராணுவ தலைவர்களுக்கு ஆலோசனை தரும் குருக்களும், அரசர்களும் தங்களை ஆண்டவனின் அருள் பெற்றவர்களாகவே

சித்தரித்துக்கொண்டனர். http://en.wikipedia.org/wiki/Divine_right_theory
பெரும்பாலான ஐரோப்பிய அரசர்கள் தங்களை கடவுளின் அருள் பெற்றவர்களாகவும், தங்களை எதிர்ப்பவர்களை கடவுளுக்கு எதிராக நடந்துகொண்டதாக சிரச்சேதம் செய்ததையும் பார்க்கலாம்.

ஜப்பானிய அரசர்கள் தங்ளை கடவுளின் சந்ததியில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இன்றும் ஜப்பானிய அரசரை கடவுளாகக் கருதும் மதம் ஜப்பானில் இருக்கிறது. உலகத்தில் ஜப்பானிய அரச

வம்சம் மட்டுமே வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. உலகத்தில் இந்த ஒரு அரச வம்சத்துக்கு மட்டுமே இப்படிப்பட்ட பெருமை உண்டு. எகிப்திய பேரரசர்களும் தங்களை கடவுள் வம்சத்தில் வந்தவர்களாக கூறிக்கொண்டனர். இந்திய அரசர்களும் தங்களை சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று கூறிக்கொண்டனர்.

இதில் கவனித்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு விதமான வித்தியாசமான முறையில் கடவுளின் பெயரை பயன்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.

ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கவும், மக்களை கேள்வி கேட்காமல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்கவும் அந்த காலத்திலும் இந்தகாலத்திலும் கடவுளின் பெயரை பயன்படுத்துகின்றனர்.

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்று கருதுகிறேன். (என்னைப் பொறுத்தமட்டில் அது தவறு அல்ல).

ஆனால், இன்று என்னிடம் உண்மையிலேயே ஜப்பானின் அரசர் கடவுளின் வம்சமா என்றோ அல்லது இங்கிலாந்து ராணி கடவுளால் நியமிக்கப்பட்ட பேரரசியா என்றோ கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்? அதே பதிலைத்தான் நான் ஜனாப் முகம்மது நபி அவர்களுக்கும் கூற முடியும்.//

ஜனாப் முகம்மது நபி அவர்கள் அந்த காலத்தில் சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்த, ஒருங்கிணைக்க தன்னை கடவுளின் தூதராக கூறிக்கொண்டார் என்பது போன்ற அனுமானங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றிலும் நிராகரிக்கிறது. விரிவஞ்சி சில செய்திகளை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.

நபியவர்கள் மக்காவில் வெளிப்படையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் குறைஷிகளில் பலர் இஸ்லாமை ஏற்கத் தொடங்கினர். தங்களது கடவுள் நம்பிக்கைகள் தகர்க்கப் படுவதை தடுக்க குறைஷிகள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராயினர். குறைஷிகளின் தலைவர்களுள் ஒருவனான உத்பா இப்னு ரபீஆ அவர்களின் சார்பாக நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தான்.

“எனது சகோதரனின் மகனே! நீ கொண்டு வந்த மார்க்கத்தின் மூலம் பொருள் சேகரிப்பதை விரும்பி, நீ எங்களில் மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற ஆசை இருப்பின், நாங்கள் எங்கள் செல்வங்களை சேர்த்து உன்னிடம் கொடுத்து விடுகிறோம். இல்லை உனக்கு ஆட்சி வேண்டுமென்றால் உன்னை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.” என்றான் உத்பா. இதற்கு பதிலாக நபியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களின் ஓரிறைப் பிரச்சாரத்தை கைவிட வேண்டும் என்பதுதான்.

இதற்கு பதிலளிக்குமுகமாக நபியவர்கள் குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை ஓதிக் காண்பித்தார்கள். அதை கவனமாக கேட்டபின் தம் மக்களிடம் திரும்பிய உத்பா, “குறைஷிகளே, இவரை விட்டு ஒதுங்கி விடுங்கள். இவருக்கும் இவரது பணிக்குமிடையில் குறுக்கிடாதீர்கள். அல்லா?வின் மீது சத்தியமாக! இவரிடமிருந்து நான் கேட்டு வந்த பேச்சுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது” என்றான்.

இதன் பிறகும் தம் சமரச முயற்சியை கைவிடாத குறைஷித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களை தங்களிடம் அழைத்து வரச் செய்து உத்பா சொன்னதையே மீண்டும்வலியுறுத்தி கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்: “உங்களின் பொருளை அல்லது உங்களிடம் சிறப்பை அல்லது உங்கள் மீது ஆட்சி செய்வதைத் தேடி நான் இம்மார்க்கத்தை கொண்டு வரவில்லை. எனினும், அல்லா? என்னை உங்களிடம் தூதராக அனுப்பி என்மீது ஒரு வேதத்தையும் இறக்கியிருக்கின்றான். உங்களுக்கு நற்செய்தி சொல்பவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் நான் இருக்க வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான். எனது இறைவனின் தூதுத்துவத்தை நான் உங்களுக்கு முன் வைத்துவிட்டேன்.

உங்களுக்கு நல்லுபதேசம் செய்துவிட்டேன்; நான் உங்களிடம் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் என்னிடமிருந்து ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கு ஈருலக பாக்கியமாகும். நீங்கள் அதை மறுத்தால் அல்லா? எனக்கும் உங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் வரை அல்லா?வின் கட்டளைக்காக நான் பொறுத்திருப்பேன்.'’

சிதறிக்கிடந்த பாலைவன மக்களை ஒழுங்குபடுத்துவதும் ஒருங்கிணைப்பதும்தான் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்திருந்தால், அதை செயல்படுத்துவதற்கு இதை விட இன்னொரு சிறந்த சந்தர்ப்பம் நபியவர்களுக்கு கிடைத்திருக்கப் போவதில்லை. குறைஷித் தலைவர்களே முன்வந்து நபி (ஸல்) அவர்களை தங்களின் அரசராக ஏற்றுக் கொள்வதாக சொல்வதால் அவர்களின் அரசராக தம்மை முடிசூடிக் கொண்டு அந்த ஒழுங்கு படுத்துதலையும் ஒருங்கிணைப்பதையும் செய்திருக்கலாம். ஆனால், நபியவர்கள் அதை மறுத்து விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த நிலைப்பாடு குறைஷிகளின் கோபத்தை மென்மேலும் தூண்டி விட்டது. நபியவர்களை கொல்வதற்கும் அவர்கள் திட்டம் தீட்டினர். அது நிறைவேறாததால், நபி (ஸல்) அவர்களையும் பிற முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களையும் குறைஷிகள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முஸ்லிம்கள் கடும் இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர்.

குறைஷிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முஸ்லிம்கள் ?பஷா என்ற நாட்டிற்கு புலம் பெயர வேண்டியிருந்தது. நபி (ஸல்) அவர்களும் மற்றும் பல முஸ்லிம்களும் தாங்கள் பிறந்த மண்ணான மக்காவை விட்டு மதினாவிற்கு சென்று வசிக்க வேண்டி வந்தது.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை ஒருங்கிணைப்பதுதான் தமது நோக்கம் எனக் கொண்டிருந்தால் அதைச் செய்யக் கிடைத்த வசதியான வாய்ப்பை நழுவ விட்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் இது போன்ற துன்பங்களுக்கு ஆளாக்கியிருப்பார்களா?

//நீங்கள் முன்னரே குறிப்பிட்ட பக்கத்தில் ரோமானிய அரசர் கூறியது போல பலரும், இறைதூதராக இருந்தால் செல்வாக்காக இருக்கலாம் என்று காப்பி அடிக்க முயன்றிருக்கலாம். ப?¡வுல்லா

தோற்றுவித்த ப?¡ய் மதம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு நடுவேயும் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பல பக்கங்கள் குறிப்பிடுகின்றன. மேலே குறிப்பிட்டிருக்கிறேன். ஜப்பானிய பேரரசரின் வம்சம் 1500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அதனால், அவரை உண்மையிலேயே கடவுளின் வம்சம் என்று கூறவியலுமா?//

இறைத்தூதர் என்ற பணி மிகுந்த செல்வாக்குடன் ஆட்சி அதிகாரத்துடன் சொகுசாக வாழ்வதல்ல. இறைத்தூதர்கள் அனைவருமே கடுமையான துன்பத்திற்கும் சோதனைகளுக்கும்
ஆளாகியிருக்கின்றனர். செல்வாக்காக இருக்க நினைப்பவர்கள் காப்பி அடிப்பதற்கு கொஞ்சமும் லாயக்கில்லாதது இறைத்தூதர் பணி.

///


உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. இது முகம்மது தான் கொண்ட கொள்கையிலும் தான் கொண்ட கருத்திலும் பிடிவாதக்காராகவும், சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

ஒருவர் தான் கொண்ட கொள்கையில் பிடிவாதக்காரராகவும் சொத்து சுகங்களுக்கு ஆசைப்படாதவராகவும் இருப்பதும் ஒருவர் சொல்வதை உண்மை என்று ஆக்கிவிடாது. (உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவர் உலகம் தட்டையானதுதான் என்று தன்னிடம் இறைவன் சொன்னார் என்று நம்பி, அதனை எல்லோரிடமும் வலியுறுத்தி, அதற்காக சொத்து சுகங்களையும் துறந்து, ஏழையாக்கப்பட்டு துரத்தப்பட்டார், அவரது சீடர்கள் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவரது சீடர்கள் மிகவும் உத்தமர்களாக வாழ்ந்தார்கள் என்றாலும், அவர் சொன்னது உண்மையாகி விடாது அல்லவா?)

///
//சிந்தனைத்திறன் இருப்பதால் தானே கேள்வி கேட்கிறார்கள். சிந்தனைத்திறன் இருப்பதால்தான் ஒரு வரையறை செய்கிறார்கள்ஸ. //

கேள்விகள் கேட்கத்தான் வேண்டும். கேட்டால்தானே பதில் கிடைக்கும்? ஆனால் கேள்விக்கான பதிலை தேடிப்பெற முயலாமல் ‘நேரடியாக பதில் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது சிந்தனைத்திறன் உடையவர்களுக்கு முறையல்ல.
///


முறையானதுதான். ஒரு சில நேரங்களில் நேரடியாக பதில் தரப்படாதது, பதில் இல்லை என்பதாகவும் மக்கள் புரிந்துகொள்ளலாமே?

///
//ஒருவர் இறைதூதர்தான் என்பது இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒன்று அந்த இறைதூதர் மற்றவர் இறைவன். வேறு யாருக்கும் தெரியாது அல்லவா? அல்லது நீங்கள் சொல்வது போன்று வானவர் மூலம் சொல்லப்பட்டிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நான் வானவர் என்பதற்கு இந்த அடையாளங்கள் எனக்கு இருக்கின்றன. (இறக்கைகள், ஒளிவட்டம் ஆகியவை). நான் இவர் இறைதூதர் என்று சாட்சியம் கூறுகிறேன் என்று கூறலாம். அப்போது மக்கள் குழப்பமின்றி நம்புவார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் ஒரு அத்தாட்சி கேட்டதில் தவறே இல்லை. அந்த சாதாரண மக்கள் கேட்ட அத்தாட்சியை கொடுக்காததுதான் தவறு.

அத்தாட்சி இல்லை, ஆனால் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று கோரினால், மக்கள் என்ன செய்வார்கள்? இன்றைக்கு ஒருவர் அதே போல நான் தான் இறைதூதர், எந்த
அத்தாட்சியும் நான் கொடுக்க முடியாது. ஆனால், எல்லோரும் என்னை இறைதூதர் என்று நம்பவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் அத்தாட்சி கேட்கமாட்டீர்களா? அப்படி நீங்கள் கேட்டால் “அறியாதவர்” ஆகிவிடுவீர்களா? ஆகவே முகம்மது இறைதூதர்தான் என்று எப்படி அறிவீர்கள்? அதற்காகத்தான் சொன்னேன்ஸ அவன் அனுப்பும் தூதர்களுக்கு எல்லோருக்கும் புரியக்கூடிய, ஒரே மாதிரியான எளிய அடையாளம் இருக்க வேண்டுமல்லவா. அதைத்தான் கேட்கிறேன்ஸ வேறு எந்த மக்களுக்கும் இல்லாத ஒரு அடையாளம், இறைதூதர்களுக்கு மட்டும் இருக்கும் பொதுவான அடையாளம் இருக்கும்போதுதான் மக்களுக்கு இவர் இறைதூதர் என்று தெரியும். இறைவன் வந்து சாட்சி சொல்லாத பட்சத்தில், அல்லது இறைவனிடம் கேட்டு உறுதி படுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில்
1) எல்லா இறைதூதர்களுக்கும் ஒரு பொது அடையாளம் இருக்க வேண்டும்
2) இறைதூதர்களுக்கு மட்டுமே அந்த அடையாளம் இருக்க வேண்டும்
3) இறைதூதர்கள் தவிர வேறெந்த மக்களுக்கும் அந்த அடையாளம் இருக்கக்கூடாது.//

எந்த இறைத்தூதரும் அத்தாட்சி இல்லாமல் அனுப்பப் படவில்லை என்கிறது குர்ஆன். எந்த இறைத்தூதரும் ‘எந்த அத்தாட்சியும் கொடுக்க முடியாது, ஆனால் என்னை நம்ப வேண்டும்’ என்று சொன்னதில்லை. எந்த அளவிற்கு அத்தாட்சிகள் கொடுக்கப் பட்ட போதிலும் அதை ஒரு சாரார் மறுத்தே வந்திருக்கின்றனர். இறைவன் கூறுகிறான், “இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்:

‘அல்லா? ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.” (குர்ஆன் 2:118)
///


"ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்."
ஈமான் என்றால் நம்பிக்கை என்று பொருள் என்று என் நண்பர் கூறினார். (இல்லை என்றால் தயவுசெய்து குறிப்பிடுங்கள்). நம்பிக்கை கொண்டவர்களுக்கு அத்தாட்சிகள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். It is preaching to the converted.

என்னுடைய கேள்வி இது. இதே போல இன்னொருவர், தங்கப்பா என்று வைத்துக்கொள்வோம் அவர் கூறுகிறார்.

"இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: ‘இறைவன் ஏன் நம்மிடம் பேசவில்லை? மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?’ என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.”

தங்கப்பாவை இறைதூதர் என்று ஒத்துக்கொள்வீர்களா?

///
அந்த அத்தாட்சிகள் நீங்கள் கேட்பதுபோல யாராலும் மறுக்கவே முடியாத அத்தாட்சிகளாக இருந்திருந்தால், உலகம் முழுவதுமே அந்த ஓரிறைவனை வணங்குபவர்களாக இருந்திருப்பார்கள்.

‘இன்னின்ன அத்தாட்சிகளை கொண்டவராக இருக்கிறாரா.. அப்படியென்றால் அவர் இறைத்தூதர்தான்’ என்று மறுபேச்சில்லாமல் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். இங்கு சிந்தனைத் திறனுக்கு தேவையே இல்லை. நல்ல பகல் வெளிச்சத்தில் யானையையோ, முயலையோ பார்ப்பவர்கள், அது யானைதான் என்றும் முயல்தான் என்றும் சொல்வதற்கு சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் மறைந்திருக்கும் ஒரு பொருளைப் பற்றி விடுகதை போல சில உதவுக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் அதன் விடையை கண்டுபிடிக்க கட்டாயம் சிந்தித்தே ஆக வேண்டும். அது போலத்தான் இறைத்தூதர்கள் விஷயத்திலும். போதுமான உதவிக் குறிப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு சிந்தனைத் திறனும் வழங்கப் பட்டிருக்கிறது. “நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” - இதை நான் சொல்லவில்லை. குர்ஆன் பல இடங்களில் இவ்வாறு கேள்வி எழுப்புகிறது.
//தெளிவாக தன்னுடைய இறைதூதரை பிரித்துகாட்ட ஒரு தெளிவான எல்லோருக்கும் புரியக்கூடிய அடையாளத்தை மற்ற யாராலும் காப்பி அடிக்க முடியாத அடையாளத்தை தரவேண்டும் அல்லவா? கருணையாளனாகிய இறைவனுக்கு மக்களை இப்படி இக்கட்டில் விடுவதில் என்ன பயன்?//

இதற்கும் குர்ஆனில் பதிலிருக்கிறது;

“‘அல்லா? நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு

செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லா?வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்’ (என்று கூறுவீராக.) (5:48)

மனிதர்களுக்கு சிந்தனைத் திறனை வழங்கிய இறைவன், அவர்களிடையே தனது தூதர்களை அனுப்பி தனது வேதத்தை போதிக்கச் செய்தான். தனது உயர்ந்த படைப்பாகிய மனிதன் அவனது அறிவைக்கொண்டு இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என இறைவன் விரும்புகிறான் போலும். பாடங்கள் போதிக்கப்பட்டபின் நடைபெறும் தேர்வில் யாரெல்லாம் தேறுகிறார்கள், யாரெல்லாம் தவறுகிறார்கள் என்று பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் சோதனைதான் இது. ஆனால் மனிதர்கள், ‘வினாத்தாட்களுக்கு பதிலாக எங்களுக்கு விடைத்தாட்கள் வழங்கப் பட்டிருந்தால் நாங்கள் அனைவருமே எளிதாக தேறியிருப்போமே’ என்கிறார்கள்.

“(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: ‘நீங்கள் செய்வதை அல்லா?வே நன்கறிந்தவன்’ என்று (அவர்களிடம்) கூறுவீராக. ‘நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக்
கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லா? மறுமை நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.‘ (22: 68-69)

“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:20)

இந்த விளக்கங்களை எழுத தூண்டுகோலாக இருந்த பதிவை எழுதிய சகோதரர் எழில் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.
///


சகோதரர் சுவனப்பிரியன் அவர்களின் விளக்கத்தின் மீது கேள்விகள் வைத்தபோது கீழ்க்கண்டதை குறித்திருந்தேன்.

முதலாளி ஒரு வேலைக்காரனை ஒருவரிடம் அனுப்பி, இவன் சொல்வது படி நடவுங்கள். இவன் சொல்வது படி நடக்கவில்லை என்றால், உங்களை கடுமையாக தண்டிப்பேன் என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

பிரச்னை என்னவாயிற்று என்றால், நான்கைந்து பேர்கள் இப்போது என்னைத்தான் முதலாளி அனுப்பினார். நான் சொல்வது போலத்தான் நீ நடக்கவேண்டும். இல்லையேல் உன்னை முதலாளி கடுமையாக தண்டிப்பார் என்று சொல்கிறார்.

இவர் வந்த வேலைக்காரர்களிடம் கேட்கிறார். சரி. உங்கள் முதலாளி தன்னுடைய வேலைக்காரன் தான் இவர் என்று அத்தாட்சி ஏதும் கொடுத்தாரா? என்று கேட்கிறார். அதற்கு எல்லோரும்,

"உன்னுடைய மூளையை உபயோகித்து கண்டுபிடித்துக்கொள். கொடுக்க வேண்டிய அத்தாட்சி எல்லாம் கொடுத்திருக்கிறார். இதென்ன? வினாத்தாட்களுக்கு பதிலாக விடைத்தாட்கள் கேட்கிறாய்? நான் தான் அந்த இறைதூதர். நானா இவரா என்று தர்க்கம் செய்துகொண்டிருக்கிறாய், முரண்பட்டுக்கொண்டிருக்கிறாய். அது நீ செத்தவுடன் தான் தெரியும். யார் உண்மையான வேலைக்காரன் என்பது முதலாளிக்கு மட்டும்தான் தெரியும். அத்தாட்சி கொடுப்பார் என்று எதிர்பார். அத்தாட்சி கொடுப்பார் என்றுதான் நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்." என்று சொல்கிறார்கள்.

இவர்களை எதிர்கொள்ளும் மனிதர் என்ன முடிவு எடுப்பார்?


நீங்கள் கூறுவது இதுபோலத்தான் உள்ளது என்று நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

வேலைக்காரரை கேட்டவரின் நிலையை யோசித்துப்பாருங்கள். சாதாரண வேலைக்கே எத்தகைய அத்தாட்சிகளை வேலைக்காரரிடமிருந்து எதிர்பார்ப்பீர்கள். வாழ்வா சாவா என்பது போன்ற பிரச்னையில் எதனை வைத்து முடிவு செய்வீர்கள் என்று கேட்கிறேன்.

--
மீண்டும் பழைய கேள்வியை நினைவூட்டுகிறேன்.


நீங்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?


ஜனாப் முஹம்மது பெருமானார் பற்றியோ குரான் பற்றியோ என் கேள்வி இல்லையென்றாலும், அதனையே நீங்கள் மேற்கோள் காட்டுவது எனக்கு பிரச்னையாக முடிகிறது. ஏனெனில். நான் அந்த வசனங்களையும், முஹம்மது பெருமானார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும் விமர்சிக்க விரும்பவில்லை.

இருப்பினும் நீங்கள் தொடர்ந்து ஜனாப் முஹம்மது பெருமானர் வரலாற்று நிகழ்வுகளையும் குரான் வசனங்களையும் குறிப்பிட்டு ஆதாரம் காட்டி வருகிறீர்கள். இந்த குரான் வசனங்களும், வரலாற்று நிகழ்வுகளும் இயேசுவுக்கு முந்தைய காலத்தில் இல்லை. எனவே அதன் அடிப்படையில் இறைதூதரை கண்டறிய முடியாது என்பதனை குறிப்பிட்டுக்காட்டுகிறேன்.

இருப்பினும் நீங்கள் கூறியுள்ள வசனங்களை அந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூறினார்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஆகவே அந்த குரான் வசனங்களை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நாள் ஒருவர் " ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்." என்று கூறுகிறார்.

இன்னொருநாள் "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?’ என்று கூறுகிறார்கள். அதற்கு ‘மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்‘" என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

"அய்யா, நேற்று அத்தாட்சி கொடுத்தாய்விட்டது என்று கூறினீர்கள், இன்று அத்தாட்சி வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறுகிறீர்கள்? அத்தாட்சி வந்ததா இல்லையா?" என்று கேட்கமாட்டீர்களா?

--
நீங்கள் சொல்வதை இப்படி புரிந்துகொள்கிறேன். சரியா என்று விளக்குங்கள்.

இறைவன் இரண்டு சோதனைகளை வைத்திருக்கிறான். ஒன்று யார் உண்மையான இறைதூதர் என்று கண்டுபிடிப்பது. அடுத்தது அந்த இறைதூதர் சொன்னபடி வாழ்வது. இரண்டில் ஒன்றில் தோற்றாலும் நரகம்தான்.

இறைவன் இறைதூதரை நமக்கு அனுப்பி எப்படி சரியாக வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நமக்கு அது தெரியாது என்ற காரணத்தினால்தானே? நாமாக சிந்தித்து எப்படி நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பது நமக்கு தெரியாததால், அல்லது நமது சிந்தனைத்திறன் ஏற்புடையதாக இல்லை என்பதால்தான் இறைதூதரை அனுப்ப வேண்டிய நிலையே வருகிறது.

வினாத்தாளை கொடுக்கும் கணக்கு வாத்தியார் எப்படி விடையை கண்டுபிடிக்கும் முறை என்பதை சொல்லித்தர வேண்டும். அதன் பின்னால் தான் பரிட்சை வைக்க வேண்டும் அல்லவா?

அப்போது வினாத்தாள் கொடுத்தால், சொல்லிக்கொடுத்த முறையை பயன்படுத்தி விடையை ஒரு சிலர் கண்டுபிடிக்கலாம். அவ்வாறு சொல்லிக்கொடுத்தும் விடையை கண்டுபிடிக்காமல் போகலாம்.

அதது அவரவர் அறிவுத்திறனைப் பொறுத்தது.
ஆக முன்னாலேயே ஒருவர் இறைதூதர் என்று கண்டுபிடிக்கும் முறை சொல்லித்தரப்பட வேண்டும். அதன் பின்னால் பரிட்சை வைத்து, பஹாவுல்லா இறைதூதரா, முஹம்மது இறைதூதரா, ஜப்பானிய பேரரசர் இறைதூதரா என்ற கேள்வியை கேட்கலாம்.

எப்படி ஒரு இறைதூதரை கண்டுபிடிப்பது என்ற முறையை ஒன்றுமே சொல்லித்தர மாட்டேன். ஆனால் நீ விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது சரியல்ல.

நீங்களே சிந்தித்து விடையை கண்டுபிடிக்கும் முறையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள். அதனைத்தான் நான் அப்போதிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். விடையை
கண்டுபிடிக்கும் முறை என்ன? நீங்கள் சிந்தித்து கண்டறிந்த முறை என்ன?

-
என் கேள்விகளுக்கு மதித்து பதில் கூறும் இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள் உரித்தாகுக.

7 comments:

Anonymous said...

கேள்வியை புரியாமல் பதில் சொல்லாமல் இல்லை
பதில் இல்லை என்பதால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்

Anonymous said...

சர்க்குலர் லாஜிக் என்பதை இஸ்லாமியரும், கிரிஸ்துவர்களும் புரிந்துகொள்வதே இல்லை.
ஏன் இயேசு கிரிஸ்து இறைவனின் மகன்? ஏனெனில் அப்படித்தான் பைபிளில் சொல்லியிருக்கிறது. பைபிளை ஏன் நம்பவேண்டும்? ஏனெனில் இயேசு கிரிஸ்துவின் வார்த்தைகள் பைபிளில்தான் இருக்கின்றன.

ஏன் முகம்மது இறைதூதர்? ஏனெனில் அப்படித்தான் குரானில் சொல்லியிருக்கிறது. ஏன் குரானை நம்பவேண்டும்? ஏனெனில், குரான் முகம்மதுவின் வழியாக வந்த கடவுளின் வார்த்தை. ஏன் குரானை கடவுளின் வார்த்தை என்று கூறுகிறீர்கள்? ஏனெனில் அபப்டித்தான் குரான் கூறுகிறது.
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். இந்த சுழலிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.

எழில் said...

இந்த பதிவை பயர்பாக்ஸிலும் படிக்கும் வண்ணம் மாற்றங்களை செய்ய அறிவுறுத்திய சகோதரர் திருவடியான் அவர்களுக்கு மிக்க நன்றி.

இஸ்லாமியரை திட்டிவந்த பின்னூட்டங்களுக்கு நடுவே இருந்ததால்,அதனையும் தவறுதலாக நீக்கிவிட்டேன்.

இந்த பதிவை பலரும் படிக்க வேண்டும் என விரும்பும் சகோதரர் திருவடியானை மதித்து சில மாறுதல்களை செய்ய முனைகிறேன்.

Anonymous said...

I read all the entire series.

The arguments and the counter arguments and the replies to the articles are so excellent.

You should consider translating the whole to English.

You could cause a storm!

Anonymous said...

All the available Quranic, Ahadith and Sira data on the planet confirms that:

Nobody ever saw Muhammad and the six hundred-winged heavenly Archangel Gabriel together. No eye-witnesses.

Only Muhammad could see and talk to the Archangel Gabriel. No eye-witnesses.

Muhammad alone can feel and confirms the angelic presence of Gabriel. No eye-witnesses.

Muhammad claims Gabriel brought Allah's speech. No eye witnesses.

Allah confirms Muhammad. Muhammad confirms Allah. No eye-witnesses.

Muhammad confirms Gabriel. Gabriel confirms Muhammad. No eye-witnesses.

Muhammad confirms Quran. Quran confirms Muhammad. No impartial witnesses.

How can Muhammad, Quran or Islam prove its extreme certitude or sureness with sheer claims in the absence of human eyewitnesses whom it so shrewdly manipulates?

The so-called unlettered Prophet came to the unlettered (ignorant) Bedouins who were mesmerized by his authoritative eloquent poetry and obeyed him like robots after he rose to temporal power. He won their hearts with generous war booty and promises of rewards in the hereafter. He frightened them with torments of Hell if they chose to disobey.

They are still acting like brainless robots who cannot think beyond their master's voice. Muhammad has been given the benefit of doubt for over fourteen centuries. Will the Islamic mind ever start doubting the Quranic statements?

No eyewitnesses saw Gabriel or Burraq taking Muhammad to seventh heaven on miraj or "Mirage" night. Not even Aisha Siddiqua who was with the Prophet the whole nightlong.

Quran is full of scientific blunders such as flat earth, zul-karnain (Alexander) seeing sun settiing in the mud pond. motionless earth, mountains as pegs to keep the earth motionless, invisible pillars that holds the heavens from falling (when there is no need for such pillars), 6 day creation (where as the earth came about after many billions of years after big bang) Mohammad is a great trickster who tricked the arabs with his eloquant poetry. Period.

All the great discoveries and inventions and mathematics of the arab world are done when Mu'tazili were in power. Mu'tazili considered Quran as product of Mohammad. If logic and reason dictate quran is wrong then quran is wrong. It is during their powerful rule, the sciences and mathematics florished in Arabian lands. When they fell, then it was the end of Arab and Muslim sciences and education.

Now a Muslim is asked to follow Quran blindly as literalists of Wahabiism insist. Because of this blind following, there is not a single nobel laurate in the Muslim world. There is not a single scientific discovery of any value done in Muslim world. Whether a muslim country is rich or poor, it still backward considering all the social indicators like literacy.

You are gifted human beings. Start using your own brain. If you do not leave islam or you will end up as losers in this world as well as in the next.

Anonymous said...

நீங்கள் எழுப்பும் கேள்விகளும், அதற்கு அவர்கள் தரும் பதில்களும் புன்னகை புரிய வைக்கின்றன. உங்கள் தன்னடக்கமும், பணிவும் பாராட்டும்படி இருக்கின்றன.
Non Muslim களுக்கும், Non Christian களுக்கும் நீங்கள் வாதம் செய்வது புரியும். அவர்களுக்கு இறைதூதர் concept பற்றி சரியாகப் புரிந்து கொள்ள இந்த வாதம் உதவக்கூடும்.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு இது கொஞ்சமும் புரியாது.ஏனெனில் அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, மூடி, இறுகிப் போன மனம் கொண்டவர்கள். அந்த பரிதாபத்திற்குரிய நிலைமையிலிருந்து அவர்களை மீட்பது கடினம். புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் பெற்றவர்களும் வெளியில் சொல்ல பயப்படுவார்கள். ஃப்த்வா எனும் பயங்கரம் அவர்கள் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவித்து விடும் என்ற பயம்தான் காரணம்.
Ex Muslim கள் கூட இணையத்தில் தங்கள் identity ஐ வெளிப்படுத்தாமல், இவர்களுடைய புத்தகம் எந்த அளவிற்கு அபத்தக் களஞ்சியம் என்பதையும் இவர்களின் தூதர் எவ்வளவு மோசமான முன்மாதிரி என்பதையும் சான்றுகளுடன் விளக்குவதை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
மிகப் பெரிய பொய்களின், அபத்தங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள ஒரு மாயவலையில் எவ்வளவு கோடானுகோடி மக்கள் சிக்கி இருக்கிறார்கள்! மிகப் பெரிய அதிசயம்தான்.

Anonymous said...

Well done!