Saturday, December 04, 2010

இந்து இளைஞருடன் காதல்: முஸ்லீம் பெண் படுகொலை

இந்து இளைஞருடன் காதல்: முஸ்லீம் பெண் படுகொலை

First Published : 25 Nov 2010 05:31:47 PM IST


மொரதாபாத், நவ.25: உத்தரப்பிரதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரைக் காதலித்த மகளைக் கொன்ற முஸ்லீம் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து மதத்தைச் சேர்ந்த பூரா பிரஜாபதி என்பவரை திருமணம் செய்துவைக்குமாறு மவைத்தகுரான் கிராமத்தைச் சேர்ந்த ரெஹனா பர்வீன் தனது தந்தையை வலியுறுத்தியதால் அவர் பர்வீனை கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மவைத்தகுரான் கிராமம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ளது. பிரஜாபதியும், பர்வீனும் அந்த கிராமத்துக்கு வெளியே உள்ள வயல்வெளியில் தினமும் சந்தித்து வந்துள்ளனர். ஆனால் சில நாட்களாக பர்வீன் அங்கு வராததால் அவருக்கு ஏதோ ஆபத்து என சந்தேகித்து பிரஜாபதி போலீசை அணுகியுள்ளார். போலீசார் முஸ்தாகீனின் வீட்டை சோதனையிட்டு, அங்கு பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டிருந்த பர்வீனின் உடலை மீட்டனர்.
இது கெளரவக் கொலை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, குற்றத்தை அவரது தந்தை ஒப்புக்கொண்டுள்ளார் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

1 comment:

Unknown said...

அமைதிமார்க்கம் இல்லையா. அதான் அமைதியா கொல்லுறாங்க